SportsIPL மினி ஏலம் இன்று ஆரம்பமானது!

IPL மினி ஏலம் இன்று ஆரம்பமானது!

-

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பமானது.

ஏலப்பட்டியலில் 132 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 405 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன், சேம் கர்ரன் மற்றும் நிகோலஸ் பூரன், ஹெரி புரூக், மனிஷ் பாண்டே, மயங்க் அகர்வால், தமிழக வீரர் ஜெகதீசன் உள்ளிட்ட வீரர்களுக்கு அதிக வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு அணி நிர்வாகத்தில் அதிகபட்சமாக 25 வீரர்களை தேர்வு செய்யமுடியும். அதன்படி அணி நிர்வாகங்கள் தக்கவைத்துக் கொண்ட வீரர்களை தவிர்த்து மேலும் 87 வீரர்களை மாத்திரம் தான் அணிகள் தேர்வு செய்ய முடியும், அதில் 30 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவர்.

இந்த ஏலத்தில் 10 அணிகளின் கைவசமுள்ள தொகை எவ்வளவு என்பது குறித்த விவரம்:

சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ.20.45 கோடி (இந்திய ரூபா)

சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ரூ.42.25 கோடி (இந்திய ரூபா)

பஞ்சாப் கிங்ஸ் – ரூ.32.2 கோடி (இந்திய ரூபா)

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரூ.23.35 கோடி (இந்திய ரூபா)

மும்பை இந்தியன்ஸ் – ரூ .20.55 கோடி (இந்திய ரூபா)

டெல்லி கேபிட்டல்ஸ் – ரூ .19.45 கோடி (இந்திய ரூபா)

குஜராத் டைட்டன்ஸ் – ரூ.19.25 கோடி (இந்திய ரூபா)

ராஜஸ்தான் ரோயல்ஸ் – ரூ .13.2 கோடி (இந்திய ரூபா)

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – ரூ .8.75 கோடி (இந்திய ரூபா)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ரூ .7.05 கோடி (இந்திய ரூபா)

நன்றி தமிழன்

Latest news

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியைக் கொண்டாடும் பெத்லகேம்

காசா பகுதியில் போர் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கிறிஸ்துமஸ் மரம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, இயேசு கிறிஸ்துவின் பாரம்பரிய பிறந்த இடத்தில்...

கிறிஸ்துமஸ் பரிசு பார்சல்கள் பற்றிய எச்சரிக்கை

கிறிஸ்துமஸ் பரிசுப் பொட்டலங்களை ஆன்லைனில் அனுப்பும்போது வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்குமாறு ஆஸ்திரேலியா போஸ்ட் எச்சரித்துள்ளது. கிறிஸ்துமஸ் பரிசுகள் அதிக அளவில் விநியோகம் மற்றும் ஆண்டு இறுதி விற்பனையுடன்...

காட்டுத் தீ இருந்தபோதிலும் வெளியேற மறுக்கும் Dolphin Sands குடியிருப்பாளர்கள்

காட்டுத்தீ ஏற்படும் அபாயம் தொடர்ந்து இருந்தாலும், டாஸ்மேனியாவின் Dolphin Sands-இல் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது . காட்டுத்தீக்குப் பிறகு சில நாட்களுக்குப்...

NAPLAN League Tables குறித்து கல்வித் தலைவர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு

NAPLAN மதிப்பெண்களின் அடிப்படையில் பள்ளிகளை தரவரிசைப்படுத்துவதை நிறுத்துமாறு கல்வித் தலைவர்கள் News Corp Australia-இடம் வலுவான வேண்டுகோள் விடுத்துள்ளனர். தேசிய எழுத்தறிவு மற்றும் எண் மதிப்பீட்டுத் திட்டம்...

2 வருட சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் கடலுக்குள் விடப்பட்ட ‘Dennis’

மறுவாழ்வு அளிக்கப்பட்ட, அழிந்து வரும் நிலையில் உள்ள hawksbill ஆமை ஒன்று, கிரேட் பேரியர் ரீஃபில் மீண்டும் விடப்பட்டுள்ளது. Dennis என்று பெயரிடப்பட்ட கடல் ஆமை, ghost...

கோவிட்-19 போல உலகைப் பாதிக்கும் மற்றுமொரு வைரஸ்

கோவிட்-19 வைரஸுக்குப் பிறகு உலகில் அடுத்த தொற்றுநோயாக பறவைக் காய்ச்சல் இருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். H5N5 பறவைக் காய்ச்சல் விகாரத்தால் முதல் மனித மரணத்திற்குப் பிறகு...