SportsIPL மினி ஏலம் இன்று ஆரம்பமானது!

IPL மினி ஏலம் இன்று ஆரம்பமானது!

-

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பமானது.

ஏலப்பட்டியலில் 132 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 405 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன், சேம் கர்ரன் மற்றும் நிகோலஸ் பூரன், ஹெரி புரூக், மனிஷ் பாண்டே, மயங்க் அகர்வால், தமிழக வீரர் ஜெகதீசன் உள்ளிட்ட வீரர்களுக்கு அதிக வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு அணி நிர்வாகத்தில் அதிகபட்சமாக 25 வீரர்களை தேர்வு செய்யமுடியும். அதன்படி அணி நிர்வாகங்கள் தக்கவைத்துக் கொண்ட வீரர்களை தவிர்த்து மேலும் 87 வீரர்களை மாத்திரம் தான் அணிகள் தேர்வு செய்ய முடியும், அதில் 30 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவர்.

இந்த ஏலத்தில் 10 அணிகளின் கைவசமுள்ள தொகை எவ்வளவு என்பது குறித்த விவரம்:

சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ.20.45 கோடி (இந்திய ரூபா)

சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ரூ.42.25 கோடி (இந்திய ரூபா)

பஞ்சாப் கிங்ஸ் – ரூ.32.2 கோடி (இந்திய ரூபா)

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரூ.23.35 கோடி (இந்திய ரூபா)

மும்பை இந்தியன்ஸ் – ரூ .20.55 கோடி (இந்திய ரூபா)

டெல்லி கேபிட்டல்ஸ் – ரூ .19.45 கோடி (இந்திய ரூபா)

குஜராத் டைட்டன்ஸ் – ரூ.19.25 கோடி (இந்திய ரூபா)

ராஜஸ்தான் ரோயல்ஸ் – ரூ .13.2 கோடி (இந்திய ரூபா)

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – ரூ .8.75 கோடி (இந்திய ரூபா)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ரூ .7.05 கோடி (இந்திய ரூபா)

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...