Cinemaபுலி வாலை பிடித்தது குற்றமா? - நடிகருக்கு கிளம்பியுள்ள எதிர்ப்பு

புலி வாலை பிடித்தது குற்றமா? – நடிகருக்கு கிளம்பியுள்ள எதிர்ப்பு

-

தமிழில் நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக உருவெடுத்தவர் சந்தானம். சமீபத்தில் இவரது காமெடி த்ரில்லராக வெளிவந்த ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

தெலுங்கு படத்தின் ரீமெக்காக எடுக்கப்பட்ட இந்தப் படம் விமர்சனம் ரீதியாக நன்றாக வந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. கடந்த வாரம் இந்தப் படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியானது. புத்தாண்டுக்கு பிரபல தமிழ் தொலைக்காட்சியிலும் வெளியாக உள்ளது.

இந்நிலையில், தற்போது சுற்றுலா சென்றபோது புலியின் வாலை பிடித்து வீடியோவாக தனது ட்விட்டர் பக்கத்தில் “இதுக்கு பேர்தான் புலி வாலை புடிக்கிறதா” என ஜாலியாக பதிவிட்டு இருந்தார்.

இந்த விடியோ வைரலானது. ஆனால் அதேசமயம் அவருக்கு பல எதிர்வினைகளும் வந்துக்கொண்டு இருக்கிறது. இதற்கு பலரும், “இதெல்லாம் மிருக வதை”, “அன்பு கிடையாது”, “இதற்குபேர்தான் சுற்றுலாவா?” என பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...