Breaking Newsஇன்னும் 3 நாட்களில் iPhone உட்பட பல போன்களில் Whatsapp வேலை...

இன்னும் 3 நாட்களில் iPhone உட்பட பல போன்களில் Whatsapp வேலை செய்யாது!

-

49 பழைய சாதனங்களில் வாட்ஸ் அப் செயலி டிசம்பர் 31ஆம் திகதிக்கு பிறகு வேலை செய்யாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களின் வசதிக்காக வாட்ஸ் அப் பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. அத்துடன், கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் வாட்ஸ் அப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக வாட்ஸ் அப் பல அம்சங்களை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. இப்படி வாட்ஸ் அப் நிறுவனம் கொடுக்கும் அப்டேட்களின் மூலம் பழைய போன்களில் பல சமயங்களில் அவை வேலை செய்வதில்லை.

அந்த வகையில், வரும் 31-ம் திகதி முதல் 49 போன்களில் வாட்ஸ் அப் வேலை செய்யாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 5, ஐபோன் 5சி, கிராண்ட் எஸ் பிளக்ஸ் போன்ற முக்கிய ஸ்மார்ட்போஙளும் இதில் அடக்கம்.

Latest news

புதிய வீட்டுவசதி திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் முன்மொழியப்பட்ட புதிய வீட்டுவசதி மேம்பாட்டுத் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்த வீட்டுவசதித் திட்டம் Callala விரிகுடா மற்றும் Callala கடற்கரைப்...

விக்டோரியா நீர்த்தேக்கங்களில் பிரச்சனையாக மாறியுள்ள கெண்டை மீன்கள்

விக்டோரியாவின் முக்கிய நீர்த்தேக்கங்களில் ஐரோப்பிய கெண்டை மீன்களின் (European carp) அதிகப்படியான பரவல் ஒரு பிரச்சனையாக மாறியுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய கெண்டை மீன் படையெடுப்பு ஆஸ்திரேலிய...

விக்டோரியாவில் அமைக்கவுள்ள புதிய வீடுகள்

மெல்பேர்ணின் தென்கிழக்கில் உள்ள Kingswood கோல்ஃப் மைதானத்தில் 941 புதிய வீடுகளைக் கட்ட விக்டோரியன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் அடுத்த 10 ஆண்டுகளில் 15...

ஆஸ்திரேலியா முழுவதும் கடுமையாக அதிகரித்து வரும் காய்ச்சல் நோயாளிகள்

ஆஸ்திரேலியா முழுவதும் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருவதால் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆண்டு, ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த தடுப்பூசி...

டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக அமெரிக்கா முழுவதும்  போராட்டம்

டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக "No Kings" என்ற பதாகையின் கீழ் அமெரிக்கா முழுவதும் மக்கள் பாரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கீழ் நாடு...

சர்வதேச மாணவர்களுக்கு இப்போது கிடைக்கும் உயர்தர பல்கலைக்கழகங்கள்

ஆஸ்திரேலியாவில் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கான புதிய கொள்கை கட்டமைப்பை அறிமுகப்படுத்த அல்பானீஸ் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. உயர்கல்வியில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதே இதன்...