Businessஆஸ்திரேலியாவில் இன்று முதல் இந்தியர்களுக்கு Skilled – Student விசா சலுகைகள்.

ஆஸ்திரேலியாவில் இன்று முதல் இந்தியர்களுக்கு Skilled – Student விசா சலுகைகள்.

-

புதிய ஆஸ்திரேலியா-இந்தியா வர்த்தக மற்றும் பொருளாதார ஒப்பந்தம் இன்று முதல் நடைமுறைக்கு வருவதால், ஆஸ்திரேலியாவில் குடியேறும் இந்தியர்கள் இன்று முதல் பல சலுகைகளை அனுபவிப்பார்கள்.

அதன்படி, இந்த நாட்டில் உயர்கல்வியை முடித்த இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் அதிக காலம் தங்கி பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள்.

டிப்ளோமா பாடநெறியை முடித்த ஒருவர் 18 மாதங்களும், இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்த ஒருவர் 02 வருடங்களும், முதுகலைப் பட்டம் பெற்றவர் 03 வருடங்களும் அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்க முடியும்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒப்பந்தத்தில், 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இந்திய குடிமக்கள் ஆஸ்திரேலிய Working Holiday விசா பிரிவில் சேர்க்கப்படுவதும் அடங்கும்.

எவ்வாறாயினும், அடுத்த 02 வருடங்களுக்குள் இது நடைமுறைக்கு வரும்.

தகுதிவாய்ந்த இந்திய தொழில் வல்லுநர்களுக்கு ஆஸ்திரேலியாவின் Skilled விசா வசதியும் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

அதன்படி, இந்திய சமையல் கலைஞர்கள் மற்றும் யோகா கலைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் சத்தம் இல்லாமல் யுத்தம் செய்த ஒரு அரசியல் போராளி மறைவு!

தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஆஸ்திரேலியாவில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் பணியாற்றி, தமிழர் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தினை அரசு மற்றும் ஆங்கிலேயே உறவுகளுக்கு...

ஆப்கானிஸ்தானுக்குச் செல்ல வேண்டாம் – ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கம் பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. தாலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சமீபத்திய விரைவான அதிகரிப்பைக்...

போராட்டங்களை கட்டுப்படுத்தும் விக்டோரியா அரசு – முகமூடிகள், சின்னங்கள், கொடிகள் தடை!

போராட்டங்களின் போது வன்முறை நடத்தையை இலக்காகக் கொண்டு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த விக்டோரியன் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, குற்றம் செய்தவர்களிடமிருந்தோ அல்லது போராட்டத்தின் போது குற்றம்...

விக்டோரியாவில் மாறி வரும் சட்டங்கள் – குழந்தைகளுக்கும் கடுமையான தண்டனைகள்

விக்டோரியா மாநில முதல்வர் ஜெசிந்தா ஆலன், "Adult time for violent crime" என்ற புதிய சட்டங்களை அறிவித்துள்ளார். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கூட கடுமையான தண்டனைகள்...

24 மணி நேர McDonald’s-ஐ எதிர்க்கும் மெல்பேர்ண் கவுன்சில்

மெல்பேர்ண், நார்த்கோட்டில் உள்ள High Street-இல் 24 மணி நேரமும் இயங்கும் புதிய McDonald’s உணவகத்திற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அந்த நோக்கத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட திட்டமிடல் விண்ணப்பத்திற்கு எதிராக...

மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ள டாஸ்மேனிய அரசாங்கம்

குடும்ப உறுப்பினர்களின் அறிவு அல்லது ஒப்புதல் இல்லாமல் பிரேத பரிசோதனைகளுக்குப் பிறகு உடல் பாகங்களை தக்கவைத்துக் கொள்ளும் கடந்த கால நடைமுறைக்கு மன்னிப்பு கோருவதாக டாஸ்மேனிய...