Sportsரிஷப் பண்ட்டுக்கு பதில் இனி இந்திய அணியின் அடுத்த விக்கெட் காப்பாளர்...

ரிஷப் பண்ட்டுக்கு பதில் இனி இந்திய அணியின் அடுத்த விக்கெட் காப்பாளர் யார்?

-

இந்தியா வரும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான  4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் அடுத்த பெப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது.

இந்தியா- அவுஸ்திரேலியா இடையே முதலாவது டெஸ்ட் போட்டி பெப்ரவரி 9 ஆம் திகதி நாக்பூரில் தொடங்குகிறது. இந்நிலையில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட் இந்த தொடரில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் சிகிச்சைகாக டேராடூனில் உள்ள மருத்துவமனையில் இருந்து டெல்லி அல்லது மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு விரைவில் பண்ட் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரிஷப் பண்டுக்கு நீண்ட கால சிகிச்சை தேவைப்படுவதாக அவரது பயிற்சியாளர் தேவேந்திர சர்மா கூறியுள்ளார். காயத்தில் இருந்து பண்ட் முழுமையாக குணமடைய குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு புதிய விக்கெட் காப்பாளரை தேர்வு செய்வது குறித்து தேர்வு குழு ஆலோசித்து வருகிறது. இரண்டு புதிய விக்கெட் காப்பாளர்கள் அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது. ரிஷப் இடத்திற்கு இஷான் கிஷன், கே.எஸ்.பரத், இந்தியா ஏ அணியை சேர்ந்த உபேந்திர யாதவ் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், இஷான் கிஷன் மற்றும் கே.எஸ்.பரத்துக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நன்றி தமிழன்

Latest news

பிரிட்டிஷ்-ஆஸ்திரேலிய இரட்டைக் குடியுரிமைகளுக்கான புதிய சட்டம்

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இரட்டை பிரிட்டிஷ் அல்லது ஐரிஷ் குடியுரிமை உள்ளவர்களுக்கான புதிய பயண விதிகளை பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது. பெப்ரவரி 25 ஆம் திகதி முதல் அமலுக்கு...

மர்மமான சூழலில் சடலமாக கிடந்த பிரபல பாடகி

ஆஸ்திரேலியாவில் பிரபலமான பாடகி ஒருவர் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Velvet Pesu என்பவர் ஆஸ்திரேலியாவில் பிரபலமான Folk பாடகி-பாடலாசிரியர், இசைக்கலைஞர் மற்றும் காட்சி...

75 நாடுகளின் மக்கள் அமெரிக்காவில் குடியேறத் தடை

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஈரான் உள்ளிட்ட 75 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கான குடியேற்ற விசா நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தத் தடை உத்தரவு ஜனவரி 21ஆம் திகதி முதல்...

ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக விக்டோரியா மருத்துவமனைகளில் பல அறுவை சிகிச்சைகள் ரத்து

விக்டோரியாவில் உள்ள பொது மருத்துவமனைகளில் திட்டமிடப்பட்ட ஆயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது சுகாதார ஊழியர்கள் தங்கள் சம்பளப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு தொடங்கிய...

பிரபலமான விக்டோரியன் Resort-ஐ தாக்கிய திடீர் வெள்ளம்

விக்டோரியாவில் வை நதி, கென்னட் நதி, Cumberland நதி மற்றும் Lorne-ஐ சுற்றியுள்ள பகுதிகளை திடீர் வெள்ளம் நெருங்கி வருவதால், மக்கள் உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு...

சிட்னி விமான நிலையத்தில் ரத்து செய்யப்பட்ட பல விமானங்கள்

சிட்னி Kingsford Smith விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பற்றாக்குறையால் நேற்று ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதமாகியுள்ளன. பல ஊழியர்கள் நோய்வாய்ப்பட்ட மற்றும்...