Breaking Newsவிக்டோரியாவில் மீண்டும் அதிகரிக்கும் சாலை விபத்தில் உயிரிழப்புகள்!

விக்டோரியாவில் மீண்டும் அதிகரிக்கும் சாலை விபத்தில் உயிரிழப்புகள்!

-

2021ஆம் ஆண்டை விட கடந்த ஆண்டு, விக்டோரியா மாநிலத்தில் சாலை விபத்து மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

2021 ஆம் ஆண்டில் மொத்த சாலை விபத்து இறப்புகளின் எண்ணிக்கை 233 ஆக இருந்தது, ஆனால் கடந்த ஆண்டு அது 240 ஆக அதிகரித்துள்ளது என்று விக்டோரியா போக்குவரத்து விபத்து ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

2021 ஆம் ஆண்டில், உள்ளூர் சாலைகளில் சாலை விபத்துக்களில் 119 பேர் இறந்தனர், 2022 இல் அது 134 ஆக அதிகரித்துள்ளது.

இருப்பினும், 2021 ஆம் ஆண்டில், விக்டோரியாவின் நகர்ப்புறங்களில் 114 சாலை விபத்து இறப்புகள் பதிவாகியுள்ளன, ஆனால் கடந்த ஆண்டு அது 106 ஆக குறைந்துள்ளது என்று விக்டோரியா போக்குவரத்து விபத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

தொலைபேசிகளைப் பயன்படுத்திகொண்டு வாகனம் ஓட்டுவதும், அதீத வேகமும் இந்த விபத்துக்களுக்கு முக்கியக் காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, சீட் பெல்ட் அணியாதது போன்றவை வேறு காரணங்கள் என விக்டோரியா போக்குவரத்து விபத்து ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

Latest news

மெக்சிகோவில் பயணிகள் ரயில் தடம் புரள்வு – 13 பேர் பலி

தெற்கு மெக்சிகோவில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் குறைந்தது 13 பேர் இறந்துள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்துள்ளனர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஓக்ஸாகா...

சீனாவில் குழந்தைகளின் வீட்டுப்பாடங்களை கண்காணிக்கும் AI

சீனாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வீட்டுப்பாடங்களைக் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. ByteDance உருவாக்கிய AI சாட்பாட் "டோலா", குழந்தைகளின் நடத்தையைக்...

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான வழியை வெளிப்படுத்தும் நுகர்வோர் ஆணையம்

கூடுதல் பணத்தை மிச்சப்படுத்த ஆஸ்திரேலியர்கள் எரிசக்தி சப்ளையர்களை மாற்றுமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். தேசியத் தலைவர் டேவிட் லிட்டில்பிரவுட், எரிசக்தி விலைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், எரிசக்தி...

விக்டோரியாவில் அதிகரித்து வரும் கத்திக்குத்து சம்பவங்கள்

விக்டோரியாவில் 2025 டிசம்பர் பிற்பகுதியிலிருந்து தொடர்ச்சியான கத்திக்குத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஆறு நாட்களுக்கு முன்பு ஃபிட்ஸ்ராய் மற்றும் கிளைடில் நடந்த கத்திக்குத்து சம்பவங்களில் இரண்டு பேர் இறந்ததைத்...

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான வழியை வெளிப்படுத்தும் நுகர்வோர் ஆணையம்

கூடுதல் பணத்தை மிச்சப்படுத்த ஆஸ்திரேலியர்கள் எரிசக்தி சப்ளையர்களை மாற்றுமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். தேசியத் தலைவர் டேவிட் லிட்டில்பிரவுட், எரிசக்தி விலைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், எரிசக்தி...

சிட்னி புத்தாண்டு வாணவேடிக்கைக்கு பலத்த பாதுகாப்பு

சிட்னியின் அடையாள புத்தாண்டு கொண்டாட்டம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற உள்ளது. 2026 புத்தாண்டு கொண்டாட்டம், கண்கவர் வாணவேடிக்கையுடன் நடைபெறும் என்றும், Bondi பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து...