Breaking Newsவிக்டோரியாவில் மீண்டும் அதிகரிக்கும் சாலை விபத்தில் உயிரிழப்புகள்!

விக்டோரியாவில் மீண்டும் அதிகரிக்கும் சாலை விபத்தில் உயிரிழப்புகள்!

-

2021ஆம் ஆண்டை விட கடந்த ஆண்டு, விக்டோரியா மாநிலத்தில் சாலை விபத்து மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

2021 ஆம் ஆண்டில் மொத்த சாலை விபத்து இறப்புகளின் எண்ணிக்கை 233 ஆக இருந்தது, ஆனால் கடந்த ஆண்டு அது 240 ஆக அதிகரித்துள்ளது என்று விக்டோரியா போக்குவரத்து விபத்து ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

2021 ஆம் ஆண்டில், உள்ளூர் சாலைகளில் சாலை விபத்துக்களில் 119 பேர் இறந்தனர், 2022 இல் அது 134 ஆக அதிகரித்துள்ளது.

இருப்பினும், 2021 ஆம் ஆண்டில், விக்டோரியாவின் நகர்ப்புறங்களில் 114 சாலை விபத்து இறப்புகள் பதிவாகியுள்ளன, ஆனால் கடந்த ஆண்டு அது 106 ஆக குறைந்துள்ளது என்று விக்டோரியா போக்குவரத்து விபத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

தொலைபேசிகளைப் பயன்படுத்திகொண்டு வாகனம் ஓட்டுவதும், அதீத வேகமும் இந்த விபத்துக்களுக்கு முக்கியக் காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, சீட் பெல்ட் அணியாதது போன்றவை வேறு காரணங்கள் என விக்டோரியா போக்குவரத்து விபத்து ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

Latest news

விக்டோரியாவில் 50°C க்கு அருகில் வெப்பநிலை – 24 கிராமங்களுக்கு வெளியேற உத்தரவு

விக்டோரியாவில் இன்று வெப்பநிலை 49°C ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால், தீயணைப்பு வீரர்கள் மிகுந்த ஆபத்தை எதிர்கொள்வதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். Otways பகுதியில் உள்ள 24க்கும் மேற்பட்ட...

ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு ரகசிய பாதாள உலக உரையாடல் அம்பலம்

ஆஸ்திரேலியாவில் டெலிகிராமின் கீழ் இயங்கும் ஒரு குற்றவியல் வலையமைப்பின் வேர்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. தீ வைப்பு, கடத்தல் மற்றும் சித்திரவதை போன்ற குற்றங்களுக்கான பணக் கட்டணங்களைப் பட்டியலிடும் ஒரு...

எலோன் மஸ்க்கின் AI செயலி மீது ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு

எலோன் மஸ்க்கின் Grok AI செயலி குறித்து ஐரோப்பிய ஒன்றியம் (EU) அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஒருமித்த கருத்து இல்லாத பாலியல் படங்களை...

ஆப்பிள் நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை

உலகம் முழுவதும் உள்ள தனது பல கோடி வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது பழைய Chrome, Chrome versions-ஆல் பாதுகாப்பு அபாயங்களை...

வெடிகுண்டு பயம் காரணமாக பெர்த் படையெடுப்பு தின பேரணி ரத்து

பெர்த்தில் நடந்த படையெடுப்பு தின எதிர்ப்பு பேரணியில் வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டை வீசியதாக 31 வயது நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நேற்று மதியம் 12.30 மணியளவில்...

$246 போக்குவரத்து அபராதம் குறித்து அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதால், பள்ளிகளைச் சுற்றியுள்ள சாலைகளில் பள்ளி மண்டலங்கள் மீண்டும் நிறுவப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளி வலயங்களில் சாலைகளில் ஓட்டக்கூடிய...