Breaking Newsவிக்டோரியாவில் மீண்டும் அதிகரிக்கும் சாலை விபத்தில் உயிரிழப்புகள்!

விக்டோரியாவில் மீண்டும் அதிகரிக்கும் சாலை விபத்தில் உயிரிழப்புகள்!

-

2021ஆம் ஆண்டை விட கடந்த ஆண்டு, விக்டோரியா மாநிலத்தில் சாலை விபத்து மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

2021 ஆம் ஆண்டில் மொத்த சாலை விபத்து இறப்புகளின் எண்ணிக்கை 233 ஆக இருந்தது, ஆனால் கடந்த ஆண்டு அது 240 ஆக அதிகரித்துள்ளது என்று விக்டோரியா போக்குவரத்து விபத்து ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

2021 ஆம் ஆண்டில், உள்ளூர் சாலைகளில் சாலை விபத்துக்களில் 119 பேர் இறந்தனர், 2022 இல் அது 134 ஆக அதிகரித்துள்ளது.

இருப்பினும், 2021 ஆம் ஆண்டில், விக்டோரியாவின் நகர்ப்புறங்களில் 114 சாலை விபத்து இறப்புகள் பதிவாகியுள்ளன, ஆனால் கடந்த ஆண்டு அது 106 ஆக குறைந்துள்ளது என்று விக்டோரியா போக்குவரத்து விபத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

தொலைபேசிகளைப் பயன்படுத்திகொண்டு வாகனம் ஓட்டுவதும், அதீத வேகமும் இந்த விபத்துக்களுக்கு முக்கியக் காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, சீட் பெல்ட் அணியாதது போன்றவை வேறு காரணங்கள் என விக்டோரியா போக்குவரத்து விபத்து ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...