Breaking Newsஆண்டின் முதல் 3 நாட்களில் துப்பாக்கிச்சூட்டில் மட்டும் 130 பேர் பலி!

ஆண்டின் முதல் 3 நாட்களில் துப்பாக்கிச்சூட்டில் மட்டும் 130 பேர் பலி!

-

அமெரிக்காவில் சமீப ஆண்டுகளாகவே துப்பாக்கி கலாசாரம் பெருகி வருகிறது. அங்கு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடக்காத நாளே கிடையாது என்கிற அளவுக்கு நிலைமை மோசமாகி இருக்கிறது.

அதிலும் குறிப்பாக ‘மாஸ் சூட்டிங்’ என்று அழைக்கப்படும் அதிக உயிர்பலிகளை ஏற்படுத்துகிற துப்பாக்கிச்சூடு சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இந்தநிலையில் இந்த ஆண்டு தொடங்கிய முதல் 3 நாட்களில் மாத்திரம் அமெரிக்கா முழுவதும் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 130-க்கும் அதிகமானோர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் நடக்கும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை கண்காணிக்கும் துப்பாக்கி வன்முறை ஆவணக் காப்பகம் என்கிற அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், “இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து, 2 குழந்தைகள் மற்றும் 11 சிறுவர்கள் உள்பட 131 பேர் துப்பாக்கியால் தற்செயலாக அல்லது வேண்டுமென்றே கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல் 3 குழந்தைகள் மற்றும் 34 சிறுவர்கள் உள்பட 313 பேர் காயமடைந்துள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

துருக்கியில் புத்தாண்டில் தாக்குதலுக்கு திட்டம்

இஸ்லாமிய அரச குழுவிற்கு எதிராக நேற்று (30) துருக்கி முழுவதும் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இஸ்தான்புல், அங்காரா மற்றும் யலோவா உட்பட 21 மாகாணங்களில் பொலிஸார்...

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வரப்போகும் மாற்றம்

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டு முதல் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கத்தைக் காண்பார்கள். அதன்படி, பல்பொருள் அங்காடிகளில் உள்ள தயாரிப்பு பேக்கேஜிங்கில் பாரம்பரிய...

ஜனவரி 1 முதல் குறையும் மருந்துகளின் விலைகள்

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்ட மாற்றத்தால், ஜனவரி 1 முதல் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் மருத்துவத்திற்காகச் செலவிடும் பணத்தை மிச்சப்படுத்தியுள்ளனர். புதிய சட்டத்தின்...

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Bondi நாயகன்

கொடிய Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலின் போது துப்பாக்கிதாரி ஒருவரை அடக்கி நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய அகமது அல் அகமது, மீண்டும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டிசம்பர்...

ஜனவரி 1 முதல் குறையும் மருந்துகளின் விலைகள்

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்ட மாற்றத்தால், ஜனவரி 1 முதல் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் மருத்துவத்திற்காகச் செலவிடும் பணத்தை மிச்சப்படுத்தியுள்ளனர். புதிய சட்டத்தின்...

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Bondi நாயகன்

கொடிய Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலின் போது துப்பாக்கிதாரி ஒருவரை அடக்கி நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய அகமது அல் அகமது, மீண்டும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டிசம்பர்...