Newsஆஸ்திரேலியர்கள் புதிய கிங் நாணயங்களைப் பெறும் திகதி இதோ!

ஆஸ்திரேலியர்கள் புதிய கிங் நாணயங்களைப் பெறும் திகதி இதோ!

-

இந்த ஆண்டு முதல் ஆஸ்திரேலியர்கள் மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் கொண்ட நாணயங்களை பயன்படுத்த முடியும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

துணைப் பொருளாளர் அமைச்சர் ஆண்ட்ரூ லே, தற்போது பயன்பாட்டில் உள்ள ராணியின் உருவம் கொண்ட நாணயங்கள் தொடர்ந்து செல்லுபடியாகும் என்று குறிப்பிட்டார்.

1966 முதல், இவ்வாறு வெளியிடப்பட்ட ராணியின் உருவம் கொண்ட நாணயங்களின் எண்ணிக்கை சுமார் 50 பில்லியன் ஆகும்.

இருப்பினும், ஆஸ்திரேலியர்கள் ராணி எலிசபெத் மற்றும் கிங் சார்லஸ் நாணயங்களுக்கு இடையே ஒரு பெரிய வித்தியாசத்தைக் காண முடியும்.

அதாவது ராணியின் முகம் வலது பக்கம் இருந்தாலும், சார்லஸ் மன்னரின் முகம் இடது பக்கம் பார்த்து அச்சிடப்பட்டிருக்கும்.

இது ஒரு பாரம்பரியம் என்று துணைப் பொருளாளர் அமைச்சர் ஆண்ட்ரூ லே கூறினார்.

அரச தலைவர் மாறும் போது அவர்களின் உருவத்தின் திசையையும் மாற்ற வேண்டும் என பிரதி நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...