Sportsரிஷப் பண்ட் உடல்நிலை இப்போது எப்படி உள்ளது - வெளியான புதிய...

ரிஷப் பண்ட் உடல்நிலை இப்போது எப்படி உள்ளது – வெளியான புதிய தகவல்

-

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரும், விக்கெட் காப்பாளருமான ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் மாநிலத்தில் விபத்தில் சிக்கினார்.

உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கியில் உள்ள தனது தாயாரை பார்ப்பதற்காக அவர் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை டெல்லியில் இருந்து காரில் சென்றார். மங்லெளர் பகுதியில் சென்று கொண்டு இருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் வீதி தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்தார். விபத்தை நேரில் பார்த்த அரசு பஸ் சாரதி, நடத்துனர் அவரை மீட்டு ரூர்கியில் உள்ள மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் உயர் சிகிச்சைக்காக டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். நெற்றி பகுதியில் ஏற்பட்ட வெட்டுக் காயத்துக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. இந்த விபத்தில் ரிஷப் பண்டின் தலை, முதுகு, காலில் காயங்கள் ஏற்பட்டன. விபத்துக்குள்ளான கார் முழுமையாக தீப்பிடித்து உருக்குலைந்தது.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் தனி அறைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் ரிஷப் பண்ட் மேலதிக சிகிச்சைக்காக மும்பைக்கு மாற்றப்பட்டு உள்ளார். டேராடூனில் இருந்து அவர் மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்.

நன்றி தமிழன்

Latest news

myGov-ஐ Update செய்தால், 3 நாட்களில் பணம் பெறுவீர்கள்

கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு அரசாங்கம் இன்னும் உரிமை கோரப்படாத மருத்துவப் பலன்களை வைத்திருப்பதாக Services Australia வெளிப்படுத்தியுள்ளது. myGov அமைப்பில் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைப்...

குழந்தைகள் பாதுகாப்புத் துறையில் மறைந்திருக்கும் நெருக்கடிக்கு நீண்டகால தீர்வு தேவை

குழந்தை பராமரிப்பு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கான மத்திய அரசின் உத்தரவின் காரணமாக, நாடு முழுவதும் உள்ள குழந்தை பராமரிப்பு சேவைகள் கடுமையான அழுத்தத்தில் உள்ளதாக குழந்தை...

2025 ஆம் ஆண்டில் உலகில் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகள்

2025 ஆம் ஆண்டு உலகில் பல்வேறு எழுச்சிகளால் உருவாக்கப்பட்ட ஆண்டாகக் கருதப்படுகிறது. காசா போர் நிறுத்தங்கள், அமெரிக்க அரசியல் வரிகள், பேரழிவு தரும் காட்டுத்தீ மற்றும் போப்பின்...

கலிபோர்னியாவில் கிறிஸ்துமஸ் புயல் – மூவர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் லொஸ் ஏஞ்சலஸ் பகுதிகளில் கிறிஸ்துமஸ் புயல் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதோடு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் டிசம்பர் 25ஆம் திகதி முதல் 3...

கலிபோர்னியாவில் கிறிஸ்துமஸ் புயல் – மூவர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் லொஸ் ஏஞ்சலஸ் பகுதிகளில் கிறிஸ்துமஸ் புயல் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதோடு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் டிசம்பர் 25ஆம் திகதி முதல் 3...

ஆஸ்திரேலியாவில் இளைஞர்களை விட பெரியவர்களிடையே இருக்கும் அதிக போதை பழக்கம்

ஆஸ்திரேலியர்களில் வயதானவர்கள் தேசிய சுகாதார வழிகாட்டுதல்களை மீறி மது அருந்துவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய சுகாதாரம் மற்றும் நலன்புரி நிறுவனத்தின் (AIHW) அறிக்கை, 50 மற்றும்...