Sportsரிஷப் பண்ட் உடல்நிலை இப்போது எப்படி உள்ளது - வெளியான புதிய...

ரிஷப் பண்ட் உடல்நிலை இப்போது எப்படி உள்ளது – வெளியான புதிய தகவல்

-

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரும், விக்கெட் காப்பாளருமான ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் மாநிலத்தில் விபத்தில் சிக்கினார்.

உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கியில் உள்ள தனது தாயாரை பார்ப்பதற்காக அவர் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை டெல்லியில் இருந்து காரில் சென்றார். மங்லெளர் பகுதியில் சென்று கொண்டு இருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் வீதி தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்தார். விபத்தை நேரில் பார்த்த அரசு பஸ் சாரதி, நடத்துனர் அவரை மீட்டு ரூர்கியில் உள்ள மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் உயர் சிகிச்சைக்காக டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். நெற்றி பகுதியில் ஏற்பட்ட வெட்டுக் காயத்துக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. இந்த விபத்தில் ரிஷப் பண்டின் தலை, முதுகு, காலில் காயங்கள் ஏற்பட்டன. விபத்துக்குள்ளான கார் முழுமையாக தீப்பிடித்து உருக்குலைந்தது.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் தனி அறைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் ரிஷப் பண்ட் மேலதிக சிகிச்சைக்காக மும்பைக்கு மாற்றப்பட்டு உள்ளார். டேராடூனில் இருந்து அவர் மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்.

நன்றி தமிழன்

Latest news

குயின்ஸ்லாந்து ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட உலகின் முதல் உயிருள்ள தோல்

உலகின் மிகவும் மேம்பட்ட மனித தோலை குயின்ஸ்லாந்து ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் வெற்றிகரமாக வளர்த்துள்ளனர் - மேலும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்களைப் பாதிக்கும் அரிய மரபணு தோல் கோளாறுகளை...

NSW இன் சில பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் துரிதமாக செயல்படும் மீட்புப் பணிகள்

நியூ சவுத் வேல்ஸின் சிட்னியில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று நியூ சவுத் வேல்ஸ் மாநில அவசர சேவை (SES) மற்றும் வானிலை...

லட்சக்கணக்கான ஆட்டிசம் குழந்தைகளை NDIS-ல் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கை

மத்திய அரசு, லட்சக்கணக்கான ஆட்டிசம் உள்ள குழந்தைகளை NDIS-ல் இருந்து நீக்க முன்மொழிந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சர் Mark Butler நேற்று 46 பில்லியன் டாலர் அரசு...

22 பரிந்துரைகளை செயல்படுத்தும் சட்டங்களை சீர்திருத்தும் விக்டோரியா அரசாங்கம்

குழந்தைகள் பாதுகாப்பை அதிகரிக்க விக்டோரியா அரசு சட்ட அமைப்பில் பெரிய சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது. மெல்பேர்ண் குழந்தை பராமரிப்பு மையங்களில் Joshua Dale Brown செய்ததாகக் கூறப்படும் தொடர்ச்சியான...

லட்சக்கணக்கான ஆட்டிசம் குழந்தைகளை NDIS-ல் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கை

மத்திய அரசு, லட்சக்கணக்கான ஆட்டிசம் உள்ள குழந்தைகளை NDIS-ல் இருந்து நீக்க முன்மொழிந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சர் Mark Butler நேற்று 46 பில்லியன் டாலர் அரசு...

பெர்த் புதர் நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மர்மமான ‘ரத்தின’ சிலந்தி

பெர்த்தில் "மாணிக்கம்" போன்ற சிலந்தியின் மர்மமான மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 30 ஆண்டுகளாக இந்த இனத்தின் எந்த உயிரினரும் காணப்படவில்லை. மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் Shenton...