Breaking Newsமேலும் 18,000 ஊழியர்களை அமேசன் பணிநீக்க முடிவு!

மேலும் 18,000 ஊழியர்களை அமேசன் பணிநீக்க முடிவு!

-

அமேசன் நிறுவனம் மேலும் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

கொரோனா நோய்ப் பரவலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார சூழல் காரணமாக ட்விட்டர், மெட்டா நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை கடந்தாண்டின் இரண்டாம் பாதியில் பணி நீக்கம் செய்தனர்.

இவர்கள் வரிசையில் அமேசன் நிறுவனமும் கடந்தாண்டு நவம்பர் மாதமே 10,000 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கம் செய்திருந்தது.

இந்நிலையில், அமேசனின் தலைமை செயல் அதிகாரி ஊழியர்களுக்கு இன்று காலை அனுப்பிய செய்தியில்,

தற்போது நிலவும் கடினமான பொருளாதார சூழலை எதிர்கொள்வது மிகவும் சவாலாக உள்ளது. இதனால், மேலும் 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த பணிநீக்கமானது இந்தாண்டு தொடக்கத்திலேயே நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிநீக்கமானது அமேசன் வரலாற்றிலேயே மிகப்பெரியதாக கருதப்படுகிறது.

புத்தாண்டு பரிசை எதிர்பார்த்த ஊழியர்களுக்கு, ஆண்டின் முதல் வாரத்திலேயே அதிர்ச்சி அளித்துள்ளது அமேசன் நிறுவனம்.

நன்றி தமிழன்

Latest news

மீண்டும் இயக்கப்படும் உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம்

ஜப்பானில் உள்ள உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம் மீண்டும் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில்...

ஆஸ்திரேலிய தினத்தைக் கொண்டாட வருபவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு

வரும் 26 ஆம் திகதி வரும் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு, சிட்னி ஓபரா ஹவுஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை பலத்த பாதுகாப்பு வளையத்துடன் மூட...

விக்டோரியாவில் நோயாளிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்ட Frankston மருத்துவமனை

Peninsula பல்கலைக்கழக மருத்துவமனையான Frankston மருத்துவமனை, புதுப்பித்தல் பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து, நேற்று ஜனவரி 20 ஆம் திகதி நோயாளிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. விக்டோரியன் மாநில அரசு...

நிழல் அமைச்சரவையிலிருந்து 3 நேஷனல்ஸ் செனட்டர்கள் திடீரென நீக்கம்

மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய வெறுப்புப் பேச்சுச் சட்டங்களை ஆதரிப்பதற்காக லிபரல் கட்சியுடன் உடன்படாததால், மூன்று நேஷனல்ஸ் செனட்டர்கள் நிழல் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். செனட்டர்கள்...

நிழல் அமைச்சரவையிலிருந்து 3 நேஷனல்ஸ் செனட்டர்கள் திடீரென நீக்கம்

மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய வெறுப்புப் பேச்சுச் சட்டங்களை ஆதரிப்பதற்காக லிபரல் கட்சியுடன் உடன்படாததால், மூன்று நேஷனல்ஸ் செனட்டர்கள் நிழல் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். செனட்டர்கள்...

NSW இல் பல புலம்பெயர்ந்த ஓட்டுநர்களுக்கு புதிய ஓட்டுநர் உரிம விதிகள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஓட்டுநர் உரிமச் சட்டங்களின் கீழ், நியமிக்கப்பட்ட நாடுகளில் இருந்து ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் NSW மாநிலத்தில் ஓட்டுநர்...