Breaking News"ஐஸ்" போதைப்பொருளுடன் ஆஸ்திரேலியாவிற்கு வரும் விமான பயணிகள்!

“ஐஸ்” போதைப்பொருளுடன் ஆஸ்திரேலியாவிற்கு வரும் விமான பயணிகள்!

-

வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருளுடன் அவுஸ்திரேலியாவுக்கு வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

10 நாட்களுக்குள் இவ்வாறு வந்த 03 ஆவது விமானப் பயணியும் கைது செய்யப்பட்டுள்ளதாக எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

66 வயதான அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை சிட்னி விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

அவரிடம் இருந்து 02 கிலோ ஐஸ் வகை போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக எல்லை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நபருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் இருந்து 1.6 கிலோ கொக்கெய்னுடன் வந்த போர்த்துகீசிய பிரஜை ஒருவர் கடந்த 1ஆம் திகதி சிட்னி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதோடு, டிசம்பர் 28ஆம் திகதி கொக்கெய்னுடன் வந்த ஒருவர் சிட்னி விமான நிலையத்திலும் கைது செய்யப்பட்டார்.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...