Sportsதன் ஓய்வை அறிவித்த சானியா மிர்சா!

தன் ஓய்வை அறிவித்த சானியா மிர்சா!

-

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான 36 வயதான சானியா மிர்சா, கடந்த ஆண்டு இறுதியில் டென்னிசில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்து இருந்தார். திடீரென அவர் தனது முடிவை மாற்றி கொண்டார்.

இந்த நிலையில் சானியா மிர்சா தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். அடுத்த மாதம் பெப்ரவரியில் டுபாயில் நடைபெறும் டபிள்யு.டி.ஏ. போட்டி அவரது கடைசி போட்டியாகும்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

டபிள்யூ.டி.ஏ. இறுதி போட்டிக்கு பிறகு டென்னிஸ் விளையாட்டை நிறுத்திக் கொள்ள போகிறேன். டுபாய் டூட்டி பிரீ டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டி டுபாயில் பெப்ரவரி மாதம் நடக்கிறது. இந்த போட்டியோடு நான் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளேன்.எனக் கூறியுள்ளார்.

சானியா பெண்கள் இரட்டையர் பிரிவில் 3 கிரண்ட்சிலாம் பட்டங்களை கைப்பற்றி உள்ளார். 2015ல் விம்பிள்டன், அமெரிக்க ஓபன் பட்டங்களையும், 2016-ல் அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும் கைப்பற்றினார். 2011 பிரெஞ்சு ஓபன் இறுதி போட்டியில் தோற்றார்.

கலப்பு இரட்டையர் பிரிவிலும் சானியா மிர்சா 3 கிராண்ட்சிலாம் பட்டங்களை பெற்றார். 2009-ல் அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும், 2012-ல் பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும், 2014-ல் அமெரிக்க ஓபன் பட்டத்தையும் கைப்பற்றினார். ஒட்டு மொத்தமாக இரட்டையர் பிரிவில் அவர் 6 கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்றுள்ளார்.

எதிரிவரும் 16ஆம் திகதி மெல்போர்னில் தொடங்கவுள்ள அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில்  சானியா மிர்சா, கஸகஸ்தான் வீராங்கனை அனாடேனிலாவுடன் இணைந்து விளையாடவுள்ளார்.

கடந்த ஆண்டு சானியா மிர்சா அவுஸ்திரேலிய ஓபனில் முதல் சுற்றிலேயே வெளியேறினார். கலப்பு இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் ராஜூவ் ராமுடன் இணைந்து கால் இறுதி வரை முன்னேறி இருந்தார்.

ஒற்றையர் பிரிவில் சானியா மிர்சா 2007ம் ஆண்டு 27வது வரிசையில் இருந்ததே சிறப்பான நிலையாகும். 2005ல் அமெரிக்க ஓபனில் 4வது சுற்று வரை முன்னேறியதே அவரது சிறந்த நிலையாகும். இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா 24-வது வரிசையில் உள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா இரண்டாமிடம்

2026 ஆம் ஆண்டில் பயணிக்க பாதுகாப்பான 10 நாடுகளை Berkshire Hathaway Travel Protection அறிவித்துள்ளது. அதன்படி, உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தைப் பிடிக்க...

ஆஸ்திரேலியாவின் மனித உரிமைகள் பதிவிற்கு ஐ.நா. சிவப்பு கொடி

2026 ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியாவின் மனித உரிமைகள் பதிவு குறித்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் மதிப்பாய்வு சமீபத்தில் ஜெனீவாவில் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவின் சட்ட அமைப்பு...

விக்டோரியாவில் 50°C க்கு அருகில் வெப்பநிலை – 24 கிராமங்களுக்கு வெளியேற உத்தரவு

விக்டோரியாவில் இன்று வெப்பநிலை 49°C ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால், தீயணைப்பு வீரர்கள் மிகுந்த ஆபத்தை எதிர்கொள்வதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். Otways பகுதியில் உள்ள 24க்கும் மேற்பட்ட...

ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு ரகசிய பாதாள உலக உரையாடல் அம்பலம்

ஆஸ்திரேலியாவில் டெலிகிராமின் கீழ் இயங்கும் ஒரு குற்றவியல் வலையமைப்பின் வேர்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. தீ வைப்பு, கடத்தல் மற்றும் சித்திரவதை போன்ற குற்றங்களுக்கான பணக் கட்டணங்களைப் பட்டியலிடும் ஒரு...

ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு ரகசிய பாதாள உலக உரையாடல் அம்பலம்

ஆஸ்திரேலியாவில் டெலிகிராமின் கீழ் இயங்கும் ஒரு குற்றவியல் வலையமைப்பின் வேர்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. தீ வைப்பு, கடத்தல் மற்றும் சித்திரவதை போன்ற குற்றங்களுக்கான பணக் கட்டணங்களைப் பட்டியலிடும் ஒரு...

எலோன் மஸ்க்கின் AI செயலி மீது ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு

எலோன் மஸ்க்கின் Grok AI செயலி குறித்து ஐரோப்பிய ஒன்றியம் (EU) அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஒருமித்த கருத்து இல்லாத பாலியல் படங்களை...