Sportsதன் ஓய்வை அறிவித்த சானியா மிர்சா!

தன் ஓய்வை அறிவித்த சானியா மிர்சா!

-

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான 36 வயதான சானியா மிர்சா, கடந்த ஆண்டு இறுதியில் டென்னிசில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்து இருந்தார். திடீரென அவர் தனது முடிவை மாற்றி கொண்டார்.

இந்த நிலையில் சானியா மிர்சா தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். அடுத்த மாதம் பெப்ரவரியில் டுபாயில் நடைபெறும் டபிள்யு.டி.ஏ. போட்டி அவரது கடைசி போட்டியாகும்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

டபிள்யூ.டி.ஏ. இறுதி போட்டிக்கு பிறகு டென்னிஸ் விளையாட்டை நிறுத்திக் கொள்ள போகிறேன். டுபாய் டூட்டி பிரீ டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டி டுபாயில் பெப்ரவரி மாதம் நடக்கிறது. இந்த போட்டியோடு நான் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளேன்.எனக் கூறியுள்ளார்.

சானியா பெண்கள் இரட்டையர் பிரிவில் 3 கிரண்ட்சிலாம் பட்டங்களை கைப்பற்றி உள்ளார். 2015ல் விம்பிள்டன், அமெரிக்க ஓபன் பட்டங்களையும், 2016-ல் அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும் கைப்பற்றினார். 2011 பிரெஞ்சு ஓபன் இறுதி போட்டியில் தோற்றார்.

கலப்பு இரட்டையர் பிரிவிலும் சானியா மிர்சா 3 கிராண்ட்சிலாம் பட்டங்களை பெற்றார். 2009-ல் அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும், 2012-ல் பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும், 2014-ல் அமெரிக்க ஓபன் பட்டத்தையும் கைப்பற்றினார். ஒட்டு மொத்தமாக இரட்டையர் பிரிவில் அவர் 6 கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்றுள்ளார்.

எதிரிவரும் 16ஆம் திகதி மெல்போர்னில் தொடங்கவுள்ள அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில்  சானியா மிர்சா, கஸகஸ்தான் வீராங்கனை அனாடேனிலாவுடன் இணைந்து விளையாடவுள்ளார்.

கடந்த ஆண்டு சானியா மிர்சா அவுஸ்திரேலிய ஓபனில் முதல் சுற்றிலேயே வெளியேறினார். கலப்பு இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் ராஜூவ் ராமுடன் இணைந்து கால் இறுதி வரை முன்னேறி இருந்தார்.

ஒற்றையர் பிரிவில் சானியா மிர்சா 2007ம் ஆண்டு 27வது வரிசையில் இருந்ததே சிறப்பான நிலையாகும். 2005ல் அமெரிக்க ஓபனில் 4வது சுற்று வரை முன்னேறியதே அவரது சிறந்த நிலையாகும். இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா 24-வது வரிசையில் உள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவு – மூவர் பலி!

ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில், ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் அந்நாட்டின்...

பிரிட்டனின் புதிய பாஸ்போர்ட் விதிகள் – இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களுக்கு சிக்கல்கள்

பிரிட்டிஷ் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கடவுச்சீட்டு விதிகள் காரணமாக பிரிட்டன் மற்றும் பிற நாடுகளின் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் பெரும் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்று...

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளில் இருந்து திரும்ப பெறப்பட்ட குழந்தைகள் பொம்மை

Aldi கடைகளில் விற்கப்படும் குழந்தைகளுக்கான சீட்டாட்டம் ஒன்று உடனடியாக திரும்பப் பெறப்பட்டது. ஏனெனில் அது குழந்தைகளுக்கு கடுமையான காயம் அல்லது மரணத்தை ஏற்படுத்தக்கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளது. "Orchard...

ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு Centrelink கட்டணங்களில் மாற்றங்கள்

ஜனவரி 26 ஆம் திகதி ஆஸ்திரேலிய தின பொது விடுமுறை காரணமாக அனைத்து சேவைகள் ஆஸ்திரேலியா மற்றும் Centrelink சேவை மையங்களும் மூடப்பட திட்டமிடப்பட்டுள்ளன. இது Centrelink...

ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு Centrelink கட்டணங்களில் மாற்றங்கள்

ஜனவரி 26 ஆம் திகதி ஆஸ்திரேலிய தின பொது விடுமுறை காரணமாக அனைத்து சேவைகள் ஆஸ்திரேலியா மற்றும் Centrelink சேவை மையங்களும் மூடப்பட திட்டமிடப்பட்டுள்ளன. இது Centrelink...

ஆஸ்திரேலிய தினத்தன்று பயங்கரவாத தாக்குதலை திட்டமிட்டதாக PhD மாணவர் மீது குற்றம்

ஆஸ்திரேலிய தின நிகழ்வில் Molotov cocktail தாக்குதலை நடத்த திட்டமிட்டதாக 24 வயது மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . கோல்ட் கோஸ்ட் பகுதியில் திங்கட்கிழமை ஒரு...