Newsஇலங்கைக்கு விஜயம் செய்பவர்களுக்கு விசேட அறிவிப்பு!

இலங்கைக்கு விஜயம் செய்பவர்களுக்கு விசேட அறிவிப்பு!

-

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கொவிட் சட்டங்களை விதிக்க வேண்டிய அவசியமில்லை என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, சுகாதார அதிகாரிகள் மற்றும் சுற்றுலாத்துறை நிறுவனங்களுடன் நடத்திய கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை கடந்த 17ஆம் திகதி திட்டமிட்டிருந்தது. பின்னர் அது 20ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

எவ்வாறாயினும், தற்போதைய நிலைமைகளை கருத்தில் கொண்டு, புதிய சட்டத் தொகுப்பை சுமத்த வேண்டிய அவசியமில்லை என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இவ்வாறானதொரு சட்டத் தொடர் கொண்டுவரப்படும் பட்சத்தில் சுகாதார அமைச்சின் ஊடாக மாத்திரமே அமுல்படுத்தப்பட வேண்டுமென அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

Latest news

வெனிசுலா விமான சேவை நிறுத்தம் – விமானப் பயணங்களில் கடும் இடையூறு

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்து அகற்ற அமெரிக்க ராணுவம் மேற்கொண்ட திடீர் ராணுவ நடவடிக்கை காரணமாக கரீபியன் பகுதியில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து...

Winter Olympics-இற்கு முன் 2 தங்கப் பதக்கங்களை வென்ற ஆஸ்திரேலியா

Winter Olympics-இற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவிற்கு இரண்டு பெண் தடகள வீரர்கள் இரண்டு முக்கியமான வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளனர். கனடாவின் கால்கரியில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்திரா பிரவுன்...

காரின் பின்புறத்தில் பையில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட கடத்தப்பட்ட இளைஞர்

சிட்னியின் மேற்கில் உள்ள Villawood-இல் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்த காரின் பின்புறத்தில் சிக்கிக் கொண்ட ஒரு இளைஞனை போலீசார் மீட்டுள்ளனர். அவர் கடுமையாக தாக்கப்பட்டதாகவும்,...

 மரண ஆபத்தை ஏற்படுத்தும் CellAED இயந்திரம் பற்றிய எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் வீடுகள் மற்றும் பணியிடங்களில் அவசர சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் 'CellAED' வகை Defibrillatorsகளைப் பயன்படுத்தும் மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தை தயாரித்த நிறுவனத்தின் சரிவு...

அடுத்த வாரம் 2 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உள்ள Samsung

Samsung தனது சமீபத்திய Galaxy A17 5G Smartphone மற்றும் Galaxy Tab A11+ டேப்லெட்டை வரும் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் அறிமுகப்படுத்தப்போவதாக...

போதைப்பொருட்களால் உயிரை மாய்த்துக் கொண்டு உறுப்புகளை தானம் செய்த உலகின் முதல் ஆஸ்திரேலியர்

தன்னார்வ மரணத்தைத் தூண்டுவதற்காக மருந்துகளைப் பயன்படுத்திய பிறகு, தனது உறுப்புகளை தானம் செய்த உலகின் முதல் நபராக ஆஸ்திரேலியப் பெண் ஒருவர் உருவெடுத்துள்ளதாக நம்பப்படுகிறது. கரேன் டங்கன்...