Newsமுக்கிய ஆஸ்திரேலிய நகரத்தில் மது கட்டுப்பாடுகள் - அதிகரிக்கும் வன்முறை சம்பவங்கள்!

முக்கிய ஆஸ்திரேலிய நகரத்தில் மது கட்டுப்பாடுகள் – அதிகரிக்கும் வன்முறை சம்பவங்கள்!

-

வடக்கு மாகாணத்தில் உள்ள ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் நகரில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், மது விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் மதுபானங்களை எந்த வகையிலும் விற்க முடியாது என்றும் மற்ற நாட்களில் பிற்பகல் 03.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை மட்டுமே விற்பனை செய்யப்படும்.

மேலும், ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே மதுபானம் வாங்க முடியும்.

ஏறக்குறைய 15 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த மதுபானக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், அண்மைய நாட்களில் ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் நகரில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இதன்படி, எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் உட்பட பல தரப்பினரும், பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உடனடியாக அப்பகுதிக்குச் சென்று பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

அதன்படி நேற்று அங்கு சென்று புதிய விதிமுறைகளை புதுப்பித்துக்கொண்டார்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...