Newsஜப்பானில் ஜெட்ஸ்டார் விமானம் 40 மணி நேரம் தாமதம்.

ஜப்பானில் ஜெட்ஸ்டார் விமானம் 40 மணி நேரம் தாமதம்.

-

ஜப்பானில் ஜெட்ஸ்டார் விமானம் ஏறக்குறைய 40 மணி நேரம் தாமதமானதால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஜப்பானின் ஒசாகாவில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கெய்ர்ன்ஸ் நகருக்கு கடந்த செவ்வாய்கிழமை இரவு 09:00 மணிக்கு பயணிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும் 2 தடவைகள் குறித்த விமானம் ரத்து செய்யப்பட்டதாகவும் நேற்று பிற்பகல் 04.15 மணியளவில் ஒசாகாவில் இருந்து புறப்பட்டுச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விமான நிலையத்தில் உணவு மற்றும் தண்ணீர் இன்றி கடும் சிரமத்தை எதிர்கொண்டதாக விமான பயணிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஜேக்யூ 16 விமானம் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வரவிருந்த பயணிகள், ஜப்பானில் இந்த நாட்களில் கடும் குளிரால் மிகவும் அவதிப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், கடும் பனிப்பொழிவு காரணமாக விமானங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக ஜெட்ஸ்டார் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...