Newsஇலங்கை வந்த முன்னாள் FBI அதிகாரி அமெரிக்கா திரும்பியதும் அதிரடி கைது!

இலங்கை வந்த முன்னாள் FBI அதிகாரி அமெரிக்கா திரும்பியதும் அதிரடி கைது!

-

அமெரிக்காவின் மத்திய தகவல் பணியகத்தின் முன்னாள் அதிகாரி ஒருவர் நியூயார்க்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்யாவில் பலம் வாய்ந்த வர்த்தகர் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் சார்ள்ஸ் மெகோனிகல் என்ற முன்னாள் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகளை ஒலெக் டெரிபாஸ்கா மீறியதாக அமெரிக்கா முன்பு குற்றம் சாட்டியிருந்தது.

சார்ள்ஸ் மெகோனிகல் 2018 இல் அமெரிக்காவின் மத்திய தகவல் பணியகத்தில் (FBI) இருந்து ஓய்வு பெற்றார்.

கடந்த சனிக்கிழமை அவர் இலங்கைக்கு விஜயம் செய்து நாடு திரும்பும் போது நியூயோர்க்கில் உள்ள ஜோன் எப் கென்னடி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நன்றி தமிழன்

Latest news

அமெரிக்கா செல்லும் Bondi ஹீரோ

Bondi நாயகன் அகமது அல் அகமது மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு பறந்து சென்றுள்ளார். டிசம்பர் 14 பயங்கரவாத தாக்குதலில் பலமுறை சுடப்பட்ட 43 வயதான அவர், தனது...

விக்டோரியாவில் வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ

வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ நிலைமை காரணமாக, விக்டோரியாவின் Upper Murray பகுதியில் வசிப்பவர்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒரு தேசிய பூங்காவிற்கு அருகில் 1,200 ஹெக்டேர் பரப்பளவில்...

விக்டோரியாவில் சொத்து பாதுகாப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குற்றப் புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, கடந்த காலாண்டில் விக்டோரியாவில் குற்றச் சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளன. அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட பிற பகுதிகள் Yarra...

2025இல் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்கள் அதிகளவில் எரிபொருள் திறன் கொண்ட, குறைந்த உமிழ்வு...

2025இல் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்கள் அதிகளவில் எரிபொருள் திறன் கொண்ட, குறைந்த உமிழ்வு...

தெற்கு ஆஸ்திரேலியாவில் ரயில் தடம் புரண்டதால் தேசிய சரக்கு வழித்தடங்கள் பாதிப்பு

செவ்வாய்க்கிழமை பிற்பகல் Port Pirie அருகே பல ரயில் பெட்டிகள் தடம் புரண்டதை அடுத்து, நாட்டை இணைக்கும் முக்கிய சரக்கு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பகுதியளவு தடம் புரண்டதாக...