Newsவிக்டோரியா மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ChatGPT பயன்படுத்த தடை!

விக்டோரியா மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ChatGPT பயன்படுத்த தடை!

-

விக்டோரியா மாநில அரசு, பள்ளி நேரங்களில் மிகவும் பிரபலமான செயற்கை நுண்ணறிவு சேவையான ChatGPT ஐ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்துவதை தடை செய்ய முடிவு செய்துள்ளது.

அதன்படி, மாநில அரசின் கீழ் உள்ள அனைத்து பள்ளிகளின் சர்வர்களிலும் ChatGPT தடுக்கப்படும்.

இது ஒரு தற்காலிக நடவடிக்கை மட்டுமே என்றும், எதிர்காலத்தில் தடையை நீக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் விக்டோரியா மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ChatGPTயை பயன்படுத்தி மாணவர்கள் தேர்வு மோசடியில் ஈடுபடுவார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் – மேற்கு ஆஸ்திரேலியா – டாஸ்மேனியா மற்றும் குயின்ஸ்லாந்து ஆகிய இடங்களில் உள்ள பொதுப் பள்ளிகளில் ChatGPT ஏற்கனவே தடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தெற்கு ஆஸ்திரேலியாவில் வகுப்பறைகளில் இதைப் பயன்படுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை.

Latest news

உலகின் முதல் டிரில்லியனராக மாற எலான் மஸ்க்கிற்கு வாய்ப்பு

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க்கை உலகின் முதல் டிரில்லியனராக மாற்றக்கூடிய ஒரு சம்பளத் தொகுப்பை டெஸ்லா பங்குதாரர்கள் அங்கீகரித்துள்ளனர். நிறுவனத்தின் வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தில்...

மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் மேகன்

பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த மேகன் மார்க்கல், மீண்டும் நடிப்புக்குத் திரும்பியுள்ளார். 2018 ஆம் ஆண்டு இளவரசர் ஹாரியை மணந்த பிறகு நடிப்பிலிருந்து ஓய்வு பெற்ற மேகன்,...

ரசாயனங்கள் மீது Sunscreens உற்பத்தியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

ஆஸ்திரேலிய மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையம், Sunscreenகளில் உள்ள ரசாயனங்கள் மீது புதிய கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. Sunscreen-இல் உள்ள பல வேதிப்பொருட்களை...

அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இயற்கை பவளப்பாறை

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இயற்கை பவளப்பாறையான Great Barrier Reef-இன் எதிர்காலம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. புவி வெப்பமடைதலை 2°C க்கும் குறைவாக வைத்திருந்தால், Great...

ஆஸ்திரேலிய குடியுரிமையை துறந்து இந்தியனாக மாறிய வீரர்

ஆஸ்திரேலிய கால்பந்து வீரர் ரியான் வில்லியம்ஸ் தமது சொந்த நாட்டின் குடியுரிமையை துறந்து, இந்திய குடியுரிமையைப் பெற்றார்.  ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரியான் வில்லியம்ஸ் என்ற கால்பந்து வீரர்...

வட கொரிய சைபர் குற்றவாளிகள் மீது ஆஸ்திரேலியா எடுக்கும் நடவடிக்கை

வட கொரியாவின் அழிவுகரமான ஆயுதத் திட்டங்களுக்கு நிதியளிக்கும் சைபர் குற்றவாளிகள் மீது நிதித் தடைகள் மற்றும் பயணத் தடைகளை விதிக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வடகொரியாவின்...