NewsColes மற்றும் Woolworths கடைகளில் 5,200 டன் கழிவுகள்!

Coles மற்றும் Woolworths கடைகளில் 5,200 டன் கழிவுகள்!

-

வாடிக்கையாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட 5200 டன் மென்மையான பிளாஸ்டிக்கை உடனடியாக அப்புறப்படுத்துமாறு நியூ சவுத் வேல்ஸ் மாநில அதிகாரிகளால் Coles மற்றும் Woolworths சூப்பர் மார்க்கெட் சங்கிலிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கழிவுகளை மீள்சுழற்சி வேலைத்திட்டத்திற்காக ஒப்படைக்குமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவித்திருந்தும் பல மாதங்களாக இரண்டு பல்பொருள் அங்காடி சங்கிலிகளின் 15 க்கும் மேற்பட்ட கிடங்குகளில் கழிவுகள் குவிந்து கிடப்பதாக தெரியவந்துள்ளது.

எனவே, மறுசுழற்சி திட்டம் முற்றாக தோல்வியடைந்துள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மென்மையான பிளாஸ்டிக் இருப்பு 03க்கும் மேற்பட்ட நீச்சல் குளங்களை நிரப்பும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் மறுசுழற்சி செய்யப்படும் கழிவுகளின் அளவை 03 மடங்கு அதிகரிக்க நியூ சவுத் வேல்ஸ் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...