Newsதுருக்கியை உலுக்கிய நிலநடுக்கம் - 100இற்கு மேற்பட்டோர் பலி!

துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம் – 100இற்கு மேற்பட்டோர் பலி!

-

துருக்கி நிலநடுக்கத்தை அடுத்து இத்தாலி அரசு சார்பாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இத்தாலியில் சிறிய அளவில் சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

துருக்கியில் இன்று காலை 7.9 ரிச்டரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. தெற்கு துருக்கியில் இருக்கும் பகுதிகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அருகில் உள்ள லெபனான், சைப்ரஸ், சிரியா ஆகிய நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக துருக்கியில் கட்டிடங்கள் பல இடிந்து உள்ளன.

அங்கு இருந்த குடியிருப்புகள் பயங்கரமாக இடிந்து விழுந்துள்ளன. துருக்கியில் அதிகாலை 5 மணி அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மக்கள் உறங்கிக்கொண்டு இருந்த நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தால் பலர் மீது வீடுகளின் பாகங்கள் விழுந்துள்ளன. இதில் 100இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 400இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. தற்போது அங்கே மீட்டுபு பணிகள் நடந்து வருகின்றன. காஹரமான்மார்ஸ் என்ற நகரத்தில்தான் இந்த நிலநடுக்கம் மோசமாக ஏற்பட்டு இருக்கிறது. துருக்கி மாலடையா என்ற பகுதியில் மட்டும் அதிகமாக 23 பேர் பலியாகி உள்ளனர். அதேபோல் சிரியா எல்லையிலும் கடுமையாக நிலநடுக்கம் உணரப்பட்டு இருக்கிறது. இதனால் அங்கும் அதிக அளவில் கட்டிடங்கள் இடிந்து உள்ளன. துருக்கி வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படும் விலங்கு பெயர்கள்

ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான செல்லப் பெயராக கிரவுன் வாக்களிக்கப்பட்டுள்ளது. இது பூனைகள் மற்றும் நாய்கள் இரண்டிற்கும் பிரபலமான பெயராக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய செல்லப்பிராணி காப்பீட்டு நிறுவனமான...

காவல்துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் AFL வீரர்

ஆஸ்திரேலிய முன்னாள் கால்பந்து வீரர் ரிக்கி நிக்சன் தனது பேஸ்புக் கணக்கில் பதிவுகள் மூலம் காவல்துறையினரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை அவர் தனது...

மின்சார மிதிவண்டிகளை அதிகம் பயன்படுத்தும் குழந்தைகள் – உயரும் விபத்துக்கள்

ஆஸ்திரேலியாவில் மாற்றியமைக்கப்பட்ட மின்சார மிதிவண்டிகளைப் பயன்படுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. இந்த மிதிவண்டியை மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை...

ஹார்வர்ட் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களுக்கு தடையாக உள்ள டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், Harvard உள்ளிட்ட அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கான நிதியைக் குறைக்கத் தயாராகி வருகிறார். வெள்ளை மாளிகை சமர்ப்பித்த கோரிக்கைகளின் பட்டியலை Harvard பல்கலைக்கழகம் நிராகரித்த...

ஹார்வர்ட் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களுக்கு தடையாக உள்ள டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், Harvard உள்ளிட்ட அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கான நிதியைக் குறைக்கத் தயாராகி வருகிறார். வெள்ளை மாளிகை சமர்ப்பித்த கோரிக்கைகளின் பட்டியலை Harvard பல்கலைக்கழகம் நிராகரித்த...

உலகின் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவராக மாறிய ஆஸ்திரேலியர்

உலகின் 100 செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக ஒரு ஆஸ்திரேலியர் பெயரிடப்பட்டுள்ளார். அந்த நபர் சுரங்க அதிபரும் பசுமை எரிசக்தி சாம்பியனுமான Andrew Forrest, அல்லது Twiggy...