Newsதுருக்கியை உலுக்கிய நிலநடுக்கம் - 100இற்கு மேற்பட்டோர் பலி!

துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம் – 100இற்கு மேற்பட்டோர் பலி!

-

துருக்கி நிலநடுக்கத்தை அடுத்து இத்தாலி அரசு சார்பாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இத்தாலியில் சிறிய அளவில் சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

துருக்கியில் இன்று காலை 7.9 ரிச்டரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. தெற்கு துருக்கியில் இருக்கும் பகுதிகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அருகில் உள்ள லெபனான், சைப்ரஸ், சிரியா ஆகிய நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக துருக்கியில் கட்டிடங்கள் பல இடிந்து உள்ளன.

அங்கு இருந்த குடியிருப்புகள் பயங்கரமாக இடிந்து விழுந்துள்ளன. துருக்கியில் அதிகாலை 5 மணி அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மக்கள் உறங்கிக்கொண்டு இருந்த நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தால் பலர் மீது வீடுகளின் பாகங்கள் விழுந்துள்ளன. இதில் 100இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 400இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. தற்போது அங்கே மீட்டுபு பணிகள் நடந்து வருகின்றன. காஹரமான்மார்ஸ் என்ற நகரத்தில்தான் இந்த நிலநடுக்கம் மோசமாக ஏற்பட்டு இருக்கிறது. துருக்கி மாலடையா என்ற பகுதியில் மட்டும் அதிகமாக 23 பேர் பலியாகி உள்ளனர். அதேபோல் சிரியா எல்லையிலும் கடுமையாக நிலநடுக்கம் உணரப்பட்டு இருக்கிறது. இதனால் அங்கும் அதிக அளவில் கட்டிடங்கள் இடிந்து உள்ளன. துருக்கி வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் அதிகரித்துவரும் பறவைக் காய்ச்சல் வைரஸ் பரவல்

இந்த ஆண்டு விக்டோரியாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் மேலும் அதிகரித்துள்ளன. விக்டோரியாவின் வடகிழக்கில் உள்ள ஒரு கோழிப் பண்ணையில் இருந்து பறவைக் காய்ச்சலின் மூன்றாவது வழக்கு பதிவானதைத்...

ஆஸ்திரேலியாவில் போக்கர் இயந்திரத்தால் 8 பில்லியன் டாலர்கள் இழப்பு

சூதாட்டத்தால் மக்கள் அதிக அளவில் பணத்தை இழக்கும் சூழ்நிலை ஆஸ்திரேலியா முழுவதும் ஏற்பட்டுள்ளது. அதன்படி, நியூ சவுத் வேல்ஸ் மதுபானம் மற்றும் கேமிங் தரவுகள், அந்த மாநிலத்தில்...

விக்டோரியாவில் ஜாமீன் சட்டங்களை கடுமையாக்க நடவடிக்கை

விக்டோரியா மாநிலத்தில் ஜாமீன் சட்டங்களை கடுமையாக்குவதில் காவல்துறை கவனம் செலுத்தி வருகிறது. முன்னாள் காவல்துறைத் தலைமை ஆணையர் ஷேன் பாட்டன் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தொடர்ந்து தனது பதவியை...

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்ட இந்திய அரசியல்வாதி

இந்தியாவில் ஒரு அரசியல்வாதியை கிரிக்கெட் மட்டையால் தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. முகமூடி அணிந்த ஒரு குழு, காங்கிரஸ் எம்.பி. ரீ ரகிபுல் உசேன்...

மெல்பேர்ண் பள்ளிக்கு எழுந்துள்ள AI நெருக்கடி

மெல்பேர்ண் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் ஆபாசப் படங்கள் தொடர்ச்சியாக இணையத்தில் வெளியாகியுள்ளன. கிளாட்ஸ்டோன் பார்க் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பல மாணவிகளின் புகைப்படங்கள் AI தொழில்நுட்பத்தைப்...

ஆஸ்திரேலியன் சூப்பர் நிறுவனத்திற்கு மில்லியன் டாலர்கள் அபராதம்

ஆஸ்திரேலிய சூப்பர் பைனான்சியல் நிறுவனத்திற்கு $27 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Australian Super Fund ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஓய்வூதிய நிதி நிறுவனமாகும். மேலும் இது உலகின் 16வது...