Newsஅகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 4 பேர் உயிரிழப்பு!

அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து – 4 பேர் உயிரிழப்பு!

-

பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். 

இந்த பயணத்தின் போது விபத்து உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இந்நிலையில், துருக்கியில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக 40-க்கும் மேற்பட்ட அகதிகள் படகு மூலம் கிரீஸ் நாட்டிற்குள் நுழைய பயணம் மேற்கொண்டுள்ளனர். 

கீரிஸ் நாட்டின் லிரொஸ் தீவுக்கூட்டம் அருகே வந்தபோது கடற்பாறைகள் மீது மோதி படகு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் இருந்த அனைவரும் கடலில் மூழ்கினர். 

இந்த விபத்து குறித்து தகவலறிந்த கடலோர பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், படகு விபத்துக்குள்ளான சம்பவத்தில் பெண் உள்பட 4 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். 

எஞ்சிய 37 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

அகதிகளை தங்கள் நாட்டிற்குள் கடல்வழியாக சட்டவிரோதமாக துருக்கி அனுப்பி வைப்பதாக கிரீஸ் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

39 நாடுகளுக்கு பயணத் தடை விதித்துள்ள அமெரிக்கா

ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில், 39 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைக் கட்டுப்படுத்தும் புதிய அறிவிப்பை அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார். டிசம்பர்...

குயின்ஸ்லாந்தில் சுரங்க விபத்து – தொழிலாளியைக் காணவில்லை

குயின்ஸ்லாந்தின் Blackwater-இல் உள்ள Curragh நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு தொழிலாளி காணாமல் போயுள்ளார். சுரங்கச் சுவர் இடிந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. விபத்து...

இஸ்ரேலில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு போலீஸ் பயிற்சி

Bondi கடற்கரையில் நடந்த கொடிய பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதம் மற்றும் யூத-விரோதத்தை எதிர்த்துப் போராட மூத்த ஆஸ்திரேலிய காவல்துறை அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்க இஸ்ரேல்...

விக்டோரியாவில் புதிய பொதுப் போக்குவரத்து விதிகள்

2026 ஆம் ஆண்டு புத்தாண்டு வருகையுடன், விக்டோரியாவின் பொதுப் போக்குவரத்து அமைப்பில் பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வரும். மாநிலம் முழுவதும் 18 வயதுக்குட்பட்ட...

விக்டோரியாவில் புதிய பொதுப் போக்குவரத்து விதிகள்

2026 ஆம் ஆண்டு புத்தாண்டு வருகையுடன், விக்டோரியாவின் பொதுப் போக்குவரத்து அமைப்பில் பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வரும். மாநிலம் முழுவதும் 18 வயதுக்குட்பட்ட...

Bondi தாக்குதலுக்குப் பிறகு கடுமையாகும் ஆஸ்திரேலியா குடியேற்ற விதிகள்

கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு ஆஸ்திரேலியாவிற்கு வரும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகத்தின் (ABS) தரவுகள், கடந்த ஆண்டு வருகை 14%...