Newsதுருக்கி, சிரியாவில் தொடரும் சோகம் - பலி எண்ணிக்கை 1,400ஐ தாண்டியது!

துருக்கி, சிரியாவில் தொடரும் சோகம் – பலி எண்ணிக்கை 1,400ஐ தாண்டியது!

-

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,400ஐ கடந்துள்ளது.

துருக்கி-சிரியா எல்லையில் இன்று அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் காசியண்டெப் மாகாணம் நுர்தாகி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில், உள்ளூர் நேரப்படி அதிகாலை 04:17 மணிக்கு சுமார் 17.9 கிலோமீட்டர் (11 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிச்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த 15 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் 6.7 ரிச்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நில அதிர்வால் துருக்கி மற்றும் சிரியாவின் எல்லைப்பகுதிகளில்ல் குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. 

இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்களில் தூங்கிக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்க துருக்கி – சிரியாவின் மீட்புக்குழுவினர் களமிறக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி நாட்டிற்கு இந்தியா மீட்பு குழுக்களை அனுப்பி வைக்கவுள்ளது.  

இந்நிலையில், நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,400ஐ தாண்டியுள்ளது. இதேபோல் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

நன்றி தமிழன்

Latest news

Centrelink-க்கு தவறாக விண்ணப்பித்ததால் $15,000 இழந்த ஆஸ்திரேலிய தாய்

Centrelink பெற்றோர் விடுப்புக்கு விண்ணப்பிக்கும்போது ஏற்பட்ட ஒரு பொதுவான தவறு காரணமாக $15,000 இழந்த இரண்டு குழந்தைகளின் ஆஸ்திரேலிய தாய் ஒருவர் தனது அனுபவத்தை சமூக...

அதிகரித்து வரும் கடல் வெப்பநிலை குறித்து ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

அதிகரித்து வரும் கடல் வெப்பநிலை குறித்து ஆஸ்திரேலிய பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கடல் வெப்பநிலை கடந்த ஆண்டு சாதனை அளவை எட்டியது. வெப்பமான கடல் நீர்,...

Hoskyn தீவில் மூழ்கும் படகிலிருந்து மீட்கப்பட்ட நான்கு பேர்

தெற்கு Great Barrier Reef-இல் உள்ள ஒரு தொலைதூரத் தீவான Hoskyn தீவு அருகே மூழ்கும் படகிலிருந்து நான்கு பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் Hoskyn...

வேக வரம்புகளை மீறும் விக்டோரிய ஓட்டுநர்களுக்கு அடுத்த வாரம் விதிக்கப்படும் அபராதம்

விக்டோரியாவில் ஒரு வார காலமாக நடத்தப்பட்ட ஒரு பெரிய போலீஸ் நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஓட்டுநர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பேர் வேக வரம்பை...

வேக வரம்புகளை மீறும் விக்டோரிய ஓட்டுநர்களுக்கு அடுத்த வாரம் விதிக்கப்படும் அபராதம்

விக்டோரியாவில் ஒரு வார காலமாக நடத்தப்பட்ட ஒரு பெரிய போலீஸ் நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஓட்டுநர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பேர் வேக வரம்பை...

சிட்னியில் கயிற்றில் சிக்கி ஆபத்தான நிலையில் இருக்கும் கூன் முதுகு திமிங்கலம்

சிட்னி துறைமுகத்திற்கு அருகிலுள்ள தெற்கு கடலில் கயிற்றில் சிக்கிக் கொள்ளும் அபாயத்தில் இருக்கும் ஒரு கூன் முதுகு திமிங்கலம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆஸ்திரேலிய Cetaceans...