Newsதுருக்கியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 3,700 க்கும் மேற்பட்டோர் பலி!

துருக்கியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 3,700 க்கும் மேற்பட்டோர் பலி!

-

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 3,700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

People and emergency teams rescue a person on a stretcher from a collapsed building in Adana, Turkey, Monday, Feb. 6, 2023. A powerful quake has knocked down multiple buildings in southeast Turkey and Syria and many casualties are feared. (IHA agency via AP)

இதில் சிரியாவில் மட்டும் 1,444 பேரும்இ துருக்கியில் 2,300 பேரும் உயிரிழந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

7.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.

இரண்டாவதாக ஏற்பட்ட நிலநடுக்கம் பின்னதிர்வு வகையில் சேராது என்று அதிகாரிகள் கூறினர்.

சிரியா எல்லையை ஒட்டிய தென்கிழக்கு துருக்கியில் ஒரு பரந்த பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் முதலில் ஏற்பட்டது. 7.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 4:17 மணிக்கு காஸியான்டெப் நகருக்கு அருகில் 17.9 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

கடந்த 84 ஆண்டுகளில் இது மோசமான பேரிடர் என்று துருக்கி ஜனாதிபதி எர்துவான் கூறியுள்ளார். 1939 ஆம் ஆண்டு கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 33 ஆயிரம் பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களை நிறைவேற்ற மீண்டும் கூடும் நாடாளுமன்றம்

வெறுப்புப் பேச்சு மற்றும் துப்பாக்கி திரும்பப் பெறுதல் சட்டங்களை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றம் அடுத்த வாரம் மீண்டும் கூட உள்ளது. இன்று பிற்பகல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், பிரதமர்...

தீப்பிழம்புகளுக்கு மத்தியில் ஒரு கப்பல் கொள்கலனில் தங்கியிருந்த மூவர் மீட்பு

விக்டோரியாவிலிருந்து ஒரு நபர் தனது வீடு காட்டுத்தீயில் எரிந்து கொண்டிருந்தபோது, ​​ஒரு கப்பல் கொள்கலனுக்குள் ஒளிந்து கொண்டு உயிர் பிழைத்ததைப் பற்றிய ஒரு கதை பதிவாகியுள்ளது. Longwood-இல்...

சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் குறித்து இன்ஸ்டாகிராம் பயனர்கள் எச்சரிக்கை

கடவுச்சொல் மீட்டமைப்புகளைக் கேட்கும் சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் குறித்து மில்லியன் கணக்கான பயனர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இன்ஸ்டாகிராம் எச்சரித்துள்ளது. கடவுச்சொல் மீட்டமைப்பு மின்னஞ்சல்களைக் கோராமலேயே பெறுவது குறித்து பயனர்கள்...

குயின்ஸ்லாந்திற்குள் நுழையும் Koji புயல் – 2 பகுதிகளுக்கு திடீர் வெள்ள அபாயம்

வெப்பமண்டல சூறாவளி Koji குயின்ஸ்லாந்து மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் Ayr மற்றும் Bowen-ஐ சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் மிக அதிக மழையால் பாதிக்கப்படுவார்கள் என்றும், இது...

குயின்ஸ்லாந்திற்குள் நுழையும் Koji புயல் – 2 பகுதிகளுக்கு திடீர் வெள்ள அபாயம்

வெப்பமண்டல சூறாவளி Koji குயின்ஸ்லாந்து மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் Ayr மற்றும் Bowen-ஐ சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் மிக அதிக மழையால் பாதிக்கப்படுவார்கள் என்றும், இது...

புதிய Influenza தொற்றுநோய் – காய்ச்சல் நோயாளிகள் அதிகரிப்பு

'Super-K' அல்லது subclade-K எனப்படும் புதிய இன்ஃப்ளூயன்ஸா திரிபு, காய்ச்சல் நோயாளிகளில் அசாதாரண அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் கூறுகின்றனர். WHO ஒத்துழைப்பு மையத்தின் இன்ஃப்ளூயன்ஸா...