Newsதுருக்கியில் 36 மணி நேரத்தில் 100 நிலநடுக்கங்கள் பதிவு!

துருக்கியில் 36 மணி நேரத்தில் 100 நிலநடுக்கங்கள் பதிவு!

-

துருக்கி- சிரியா எல்லையில் நேற்று முந்தினம் அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது. மேலும் 100 ஆண்டுகளுக்கு பிறகு இப்பகுதியைத் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும்.

ரிச்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்க பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. துருக்கியில் 7,108 பேரும், சிரியாவில் 2,530 பேரும் உயிரிழந்துள்ளனர், மொத்தம் 9,630 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

அரசு நடத்தும் நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகளை கஹ்ராமன்மாராஸ், காசியான்டெப், சன்லியுர்பா, தியர்பாகிர், அதானா, அதியமான், மாலத்யா, உஸ்மானியே, ஹடாய் மற்றும் கிலிஸ் என பட்டியலிட்டுள்ளது.

சிரியாவின் அலெப்போ, இட்லிப், ஹமா மற்றும் லதாகியா மாகாணங்களில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

துருக்கியில் 4 மற்றும் அதற்கு மேற்பட்ட ரிச்டர் அளவுகளில் 100-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.

கடந்த 36 மணி நேரத்தில், துருக்கியில் 4 மற்றும் அதற்கு மேற்பட்ட ரிச்டர் அளவுகளில் 100க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.பெரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அதே பொதுப் பகுதியில் ஏற்படும் சிறிய நிலநடுக்கங்களே பின்அதிர்வுகள் ஆகும்.

4 ரிச்டர் அளவிலான பின்அதிர்வு பொதுவாக லேசானதாகக் கருதப்பட்டாலும், அது குறிப்பிடத்தக்க நடுக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் சுவரில் விரிசல் போன்ற சிறிய சேதத்தை ஏற்படுத்தலாம். ரிச்டர்-5 நிலநடுக்கம், வரையறையின்படி, ரிச்டர்-4 ஐ விட 10 மடங்கு தீவிரமானது மற்றும் கட்டிடங்களுக்கு மிதமான சேதத்தை ஏற்படுத்தும்.

ரிச்டர்-6 நிலநடுக்கம் வலுவானதாகக் கருதப்படுகிறது மற்றும் ரிச்டர்-4-ஐ விட 100 மடங்கு வலிமையானது. இந்த வகையான நிலநடுக்கம், குறிப்பாக அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில், நிறைய சேதங்களை ஏற்படுத்தும்.

கடந்த 36 மணி நேரத்தில், தென்கிழக்கு துருக்கியில் குறைந்தபட்சம் 81 எண்ணிக்கையிலான 4 ரிச்டர் நிலநடுக்கங்கள், 20 எண்ணிக்கையிலான 5 ரிச்டர் நிலநடுக்கங்கள், மூன்று எண்ணிக்கையிலான 6 ரிச்டர் நிலநடுக்கங்கள் மற்றும் இரண்டு 7 ரிச்டர் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன

நன்றி தமிழன்

Latest news

20 ஆண்டுகளுக்கு முன்பு 3 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த ஆஸ்திரேலியப் பெண்

இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றை உள்ளடக்கிய அரிய மற்றும் சிக்கலான மூன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட ஆஸ்திரேலியாவின் முதல் பெண் லூசிண்டா...

கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது செல்லப்பிராணிகளை பாதிக்கும் மனச்சோர்வு

கிறிஸ்துமஸ் காலத்தில் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் மறைக்கப்பட்ட ஆபத்துகள் குறித்து ஆஸ்திரேலிய கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வீடுகளில் வசிக்கும் செல்லப்பிராணிகள் அதிக சத்தம், தெரியாத விருந்தினர்களின் வருகை, பட்டாசு...

NSW நாடாளுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள்

நீண்ட விவாதத்திற்குப் பிறகு, நியூ சவுத் வேல்ஸ் (NSW) பாராளுமன்றம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் துப்பாக்கிச் சட்ட சீர்திருத்தங்களின் புதிய தொகுப்பை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது. பசுமைக்...

விக்டோரியாவில் கிறிஸ்துமஸ் பயணத்தை எளிதாக்க கூடுதல் சேவைகள்

அதிகரித்து வரும் விமானக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் காரணமாக, இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் விக்டோரிய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தை...

NSW நாடாளுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள்

நீண்ட விவாதத்திற்குப் பிறகு, நியூ சவுத் வேல்ஸ் (NSW) பாராளுமன்றம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் துப்பாக்கிச் சட்ட சீர்திருத்தங்களின் புதிய தொகுப்பை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது. பசுமைக்...

விக்டோரியாவில் கிறிஸ்துமஸ் பயணத்தை எளிதாக்க கூடுதல் சேவைகள்

அதிகரித்து வரும் விமானக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் காரணமாக, இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் விக்டோரிய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தை...