Newsசிரியாவில் தொடரும் துயரம்- மீண்டும் குளிர் காலநிலை!

சிரியாவில் தொடரும் துயரம்- மீண்டும் குளிர் காலநிலை!

-

துருக்கியில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டு 24 மணி நேரங்கள் கடந்த நிலையிலும், இடிபாடுகளில் இருந்து தப்பியவர்கள் இன்னதும் மீட்கப்பட்டு வருகின்றனர்.

சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, துருக்கியைச் சுற்றியுள்ள பிராந்தியத்தைப் பாதித்த பயங்கரமான பூகம்பத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 5000 ஐ நெருங்குகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவின் பெரும் பகுதிகளில் 5,000க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்கு அடியில் இருந்தவர்களை மீட்க மீட்புக் குழுவினர் கடுமையாக உழைத்து வருகின்றனர்.

நிலநடுக்கம் ஏற்பட்டு 24 மணி நேரத்திற்குப் பிறகு இடிபாடுகளில் இருந்து 14 வயது சிறுமி ஒருவரை மீட்க முடிந்தது.

அதே நேரத்தில், கடுமையான குளிர் சிரியா மற்றும் துருக்கியில் மீட்பு நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமைந்தாலும், இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கும் மக்களின் உயிர்களை காக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இடிபாட்டு எச்சங்களால் மூடப்பட்ட சாலைகள், நிலநடுக்கத்தால் சேதமடைந்த உள்கட்டமைப்புகள், வீழ்ச்சியடையும் வெப்பநிலை மற்றும் அசாதாரண வானிலை விளைவுகள் பாதிக்கப்பட்டவர்களை தேடுவதற்கும், மீட்பதற்கும் கடினமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாக உதவிக் குழுக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதன்காரணமாக எதிர்வரும் நாட்களில் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

முதல் ராக்கெட் ஏவுதலுக்கு தயாராகியுள்ள ஆஸ்திரேலியா

விண்வெளிக்குச் சென்று எலோன் மஸ்க்கின் SpaceX உடன் போட்டியிடத் தொடங்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் கனவுக்கான நேரம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் உற்பத்தி வரலாற்றில் ஒரு மைல்கல்...

 3 ஆஸ்திரேலிய மாநிலங்களில் நிலவும் வரலாறு காணாத அளவு வறட்சி

இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களை பாதித்துள்ளது. இந்த ஆண்டு விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...