Newsசிரியாவில் தொடரும் துயரம்- மீண்டும் குளிர் காலநிலை!

சிரியாவில் தொடரும் துயரம்- மீண்டும் குளிர் காலநிலை!

-

துருக்கியில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டு 24 மணி நேரங்கள் கடந்த நிலையிலும், இடிபாடுகளில் இருந்து தப்பியவர்கள் இன்னதும் மீட்கப்பட்டு வருகின்றனர்.

சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, துருக்கியைச் சுற்றியுள்ள பிராந்தியத்தைப் பாதித்த பயங்கரமான பூகம்பத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 5000 ஐ நெருங்குகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவின் பெரும் பகுதிகளில் 5,000க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்கு அடியில் இருந்தவர்களை மீட்க மீட்புக் குழுவினர் கடுமையாக உழைத்து வருகின்றனர்.

நிலநடுக்கம் ஏற்பட்டு 24 மணி நேரத்திற்குப் பிறகு இடிபாடுகளில் இருந்து 14 வயது சிறுமி ஒருவரை மீட்க முடிந்தது.

அதே நேரத்தில், கடுமையான குளிர் சிரியா மற்றும் துருக்கியில் மீட்பு நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமைந்தாலும், இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கும் மக்களின் உயிர்களை காக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இடிபாட்டு எச்சங்களால் மூடப்பட்ட சாலைகள், நிலநடுக்கத்தால் சேதமடைந்த உள்கட்டமைப்புகள், வீழ்ச்சியடையும் வெப்பநிலை மற்றும் அசாதாரண வானிலை விளைவுகள் பாதிக்கப்பட்டவர்களை தேடுவதற்கும், மீட்பதற்கும் கடினமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாக உதவிக் குழுக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதன்காரணமாக எதிர்வரும் நாட்களில் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

மீண்டும் இயக்கப்படும் உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம்

ஜப்பானில் உள்ள உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம் மீண்டும் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில்...

ஆஸ்திரேலிய தினத்தைக் கொண்டாட வருபவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு

வரும் 26 ஆம் திகதி வரும் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு, சிட்னி ஓபரா ஹவுஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை பலத்த பாதுகாப்பு வளையத்துடன் மூட...

விக்டோரியாவில் நோயாளிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்ட Frankston மருத்துவமனை

Peninsula பல்கலைக்கழக மருத்துவமனையான Frankston மருத்துவமனை, புதுப்பித்தல் பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து, நேற்று ஜனவரி 20 ஆம் திகதி நோயாளிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. விக்டோரியன் மாநில அரசு...

நிழல் அமைச்சரவையிலிருந்து 3 நேஷனல்ஸ் செனட்டர்கள் திடீரென நீக்கம்

மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய வெறுப்புப் பேச்சுச் சட்டங்களை ஆதரிப்பதற்காக லிபரல் கட்சியுடன் உடன்படாததால், மூன்று நேஷனல்ஸ் செனட்டர்கள் நிழல் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். செனட்டர்கள்...

நிழல் அமைச்சரவையிலிருந்து 3 நேஷனல்ஸ் செனட்டர்கள் திடீரென நீக்கம்

மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய வெறுப்புப் பேச்சுச் சட்டங்களை ஆதரிப்பதற்காக லிபரல் கட்சியுடன் உடன்படாததால், மூன்று நேஷனல்ஸ் செனட்டர்கள் நிழல் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். செனட்டர்கள்...

NSW இல் பல புலம்பெயர்ந்த ஓட்டுநர்களுக்கு புதிய ஓட்டுநர் உரிம விதிகள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஓட்டுநர் உரிமச் சட்டங்களின் கீழ், நியமிக்கப்பட்ட நாடுகளில் இருந்து ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் NSW மாநிலத்தில் ஓட்டுநர்...