Newsசிரியாவில் தொடரும் துயரம்- மீண்டும் குளிர் காலநிலை!

சிரியாவில் தொடரும் துயரம்- மீண்டும் குளிர் காலநிலை!

-

துருக்கியில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டு 24 மணி நேரங்கள் கடந்த நிலையிலும், இடிபாடுகளில் இருந்து தப்பியவர்கள் இன்னதும் மீட்கப்பட்டு வருகின்றனர்.

சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, துருக்கியைச் சுற்றியுள்ள பிராந்தியத்தைப் பாதித்த பயங்கரமான பூகம்பத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 5000 ஐ நெருங்குகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவின் பெரும் பகுதிகளில் 5,000க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்கு அடியில் இருந்தவர்களை மீட்க மீட்புக் குழுவினர் கடுமையாக உழைத்து வருகின்றனர்.

நிலநடுக்கம் ஏற்பட்டு 24 மணி நேரத்திற்குப் பிறகு இடிபாடுகளில் இருந்து 14 வயது சிறுமி ஒருவரை மீட்க முடிந்தது.

அதே நேரத்தில், கடுமையான குளிர் சிரியா மற்றும் துருக்கியில் மீட்பு நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமைந்தாலும், இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கும் மக்களின் உயிர்களை காக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இடிபாட்டு எச்சங்களால் மூடப்பட்ட சாலைகள், நிலநடுக்கத்தால் சேதமடைந்த உள்கட்டமைப்புகள், வீழ்ச்சியடையும் வெப்பநிலை மற்றும் அசாதாரண வானிலை விளைவுகள் பாதிக்கப்பட்டவர்களை தேடுவதற்கும், மீட்பதற்கும் கடினமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாக உதவிக் குழுக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதன்காரணமாக எதிர்வரும் நாட்களில் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு Centrelink கட்டணங்களில் மாற்றங்கள்

ஜனவரி 26 ஆம் திகதி ஆஸ்திரேலிய தின பொது விடுமுறை காரணமாக அனைத்து சேவைகள் ஆஸ்திரேலியா மற்றும் Centrelink சேவை மையங்களும் மூடப்பட திட்டமிடப்பட்டுள்ளன. இது Centrelink...

ஆஸ்திரேலிய தினத்தன்று பயங்கரவாத தாக்குதலை திட்டமிட்டதாக PhD மாணவர் மீது குற்றம்

ஆஸ்திரேலிய தின நிகழ்வில் Molotov cocktail தாக்குதலை நடத்த திட்டமிட்டதாக 24 வயது மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . கோல்ட் கோஸ்ட் பகுதியில் திங்கட்கிழமை ஒரு...

இயற்கை பேரழிவுகளால் ஆஸ்திரேலியாவின் காப்பீட்டு இழப்புகள் பில்லியன் கணக்கான டாலர்களாக உயர்வு

2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஆலங்கட்டி மழை, வெள்ளம் மற்றும் கடுமையான புயல்களால் ஏற்பட்ட காப்பீட்டு இழப்புகள் 3.5 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளன. 2025 ஆம் ஆண்டில்...

விரைவில் திறக்கப்படும் சர்வதேச மாணவர்களுக்கு Australia Awards Scholarships

2027 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் கல்வி கற்க சர்வதேச மாணவர்கள் ஆஸ்திரேலியா விருதுகள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரைவில் வாய்ப்பு கிடைக்கும் . அதன்படி, விண்ணப்பங்கள் பெப்ரவரி 1,...

விரைவில் திறக்கப்படும் சர்வதேச மாணவர்களுக்கு Australia Awards Scholarships

2027 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் கல்வி கற்க சர்வதேச மாணவர்கள் ஆஸ்திரேலியா விருதுகள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரைவில் வாய்ப்பு கிடைக்கும் . அதன்படி, விண்ணப்பங்கள் பெப்ரவரி 1,...

விமானத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதற்காக பெண்ணுக்கு அபராதம்

கான்பெராவிலிருந்து பெர்த் செல்லும் விமானத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொண்ட பெண்ணுக்கு அபராதம் விதிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. டிசம்பர் 13 ஆம் திகதி நடந்த இந்த சம்பவத்தில்,...