Newsசிரியாவில் தொடரும் துயரம்- மீண்டும் குளிர் காலநிலை!

சிரியாவில் தொடரும் துயரம்- மீண்டும் குளிர் காலநிலை!

-

துருக்கியில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டு 24 மணி நேரங்கள் கடந்த நிலையிலும், இடிபாடுகளில் இருந்து தப்பியவர்கள் இன்னதும் மீட்கப்பட்டு வருகின்றனர்.

சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, துருக்கியைச் சுற்றியுள்ள பிராந்தியத்தைப் பாதித்த பயங்கரமான பூகம்பத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 5000 ஐ நெருங்குகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவின் பெரும் பகுதிகளில் 5,000க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்கு அடியில் இருந்தவர்களை மீட்க மீட்புக் குழுவினர் கடுமையாக உழைத்து வருகின்றனர்.

நிலநடுக்கம் ஏற்பட்டு 24 மணி நேரத்திற்குப் பிறகு இடிபாடுகளில் இருந்து 14 வயது சிறுமி ஒருவரை மீட்க முடிந்தது.

அதே நேரத்தில், கடுமையான குளிர் சிரியா மற்றும் துருக்கியில் மீட்பு நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமைந்தாலும், இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கும் மக்களின் உயிர்களை காக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இடிபாட்டு எச்சங்களால் மூடப்பட்ட சாலைகள், நிலநடுக்கத்தால் சேதமடைந்த உள்கட்டமைப்புகள், வீழ்ச்சியடையும் வெப்பநிலை மற்றும் அசாதாரண வானிலை விளைவுகள் பாதிக்கப்பட்டவர்களை தேடுவதற்கும், மீட்பதற்கும் கடினமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாக உதவிக் குழுக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதன்காரணமாக எதிர்வரும் நாட்களில் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

மிகவும் மோசமாகிவரும் போப்பின் உடல்நிலை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 88 வயதான போப் பிரான்சிஸுக்கு சுவாசிக்க உதவும்...