Sportsபிரபல காற்பந்து வீரர் மாயம் - துருக்கி நிலநடுக்கம்!

பிரபல காற்பந்து வீரர் மாயம் – துருக்கி நிலநடுக்கம்!

-

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள சிறிய தொழில் நகரம் காசியான்டெப். இங்கு நேற்று (06) அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 7.8 புள்ளிகளாக பதிவானது.

மேலும் இது பூமிக்கு அடியில் 20 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. முதலில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து சுமார் 20 முறை கடுமையான நில அதிர்வுகள் ஏற்பட்டன.காசியான்டெப் நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் துருக்கி முழுவதிலும் கடுமையாக உணரப்பட்டது.

நிலநடுக்கத்தின்போது துருக்கியின் பல பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சீட்டுக்கட்டு சரிவது போல நொடிப்பொழுதில் இடிந்து தரைமட்டமாகின. 1,500இற்கும் அதிகமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை சுமார் 4000க்கும் அதிமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில்ல் பிரபல காற்பந்து கிளப் அணிகளான செல்சியா எப்.சி மற்றும் நியூகேஸ்டில் எப்.சி அணிகளின் முன்னாள் முன்னணி வீரர் கானாவை சேர்ந்த கிறிஸ்டியன் அட்சு மாயமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கிளம் இயக்குநர் டானர் சவூத்தையும் காணவில்லை என ஹடேஸ்போர் கிளப்பின் செய்தி தொடரபாளர் முஸ்தபா ஓசத் தெரிவித்துள்ளார்.

மேலும் இவர்கள் இருவரையும் தொடர்பு கொள்ள முடியாததால் இவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது என்றார். ஹடேஸ்போர் அணியை சேர்ந்த அட்சு மற்றும் சவூத் ஆகிய இருவரை மட்டுமே இன்னும் காணவில்லை மற்ற வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என தெரிவித்தார்.

இது குறித்து கானா ஜனாதிபதி கூறுகையில், துருக்கி நாட்டு மக்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எங்கள் நாட்டு குடிமகன் கிறிஸ்ட்டியன் அட்சு பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என நாங்கள் பிரார்த்திக்கிறோம் என கூறியுள்ளார்.

கானா காற்பந்து சங்கத்தின் செய்தி தொடர்பாளர் ஹென்றி அசாண்டோ ஒரு செய்தி நிறுவனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில், அட்சு பற்றி எந்த ஒரு செய்தியும் இல்லை, கானாவில் வெளியுறவுத்துறை துருக்கி அதிகாரிகளிடம் தொடர்ந்து பேசி வருகின்றனர் என்றார்.

மேலும் செல்சியா எப்.சி. கால்பந்தாட்ட அணி தனது டுவிட்டர் பக்கத்தில், நாங்கள் உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம், கிறிஸ்டியன் அட்சு. என பதிவிட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

Sussan Ley-இன் தலைமைத்துவம் குறித்து எந்த சந்தேகமும் இல்லை – லிபரல் துணைத் தலைவர்

கூட்டணியில் ஏற்பட்ட சமீபத்திய பிளவைத் தொடர்ந்து லிபரல் தலைவர் Sussan Ley-இன் தலைமை குறித்து வதந்திகள் பரவி வந்த போதிலும், லிபரல் துணைத் தலைவர் Ted...

உலகளாவிய பதட்டங்களுக்கு மத்தியில் சாதனை அளவை எட்டிய தங்கத்தின் விலை

உலகளாவிய புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் தங்கத்தின் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை...

வெளிநாட்டுப் பெண்ணின் மரணத்திற்கு Dingos தான் காரணம்

கடந்த திங்கட்கிழமை K’gari-இல் இறந்த இளம் கனேடிய சுற்றுலாப் பயணியின் மரணம் Dingo தாக்குதலால் ஏற்பட்டது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 19 வயதான Piper James-இன் உடல், K’gari-இல்...

விக்டோரியாவின் வரலாற்று நினைவுச்சின்னங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு

விக்டோரியாவில் உள்ள அதிகாரிகள், மாநிலம் முழுவதும் மீண்டும் பரவி வரும் பேரழிவு தரும் காட்டுத்தீயிலிருந்து பாதுகாக்க, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களை தீ தடுப்பு பொருட்களால்...

ஆஸ்திரேலிய தினத்தை ஒட்டி நாடு முழுவதும் பல நகரங்களில் அணிவகுப்புகள்

நேற்று, ஆஸ்திரேலிய தினத்துடன் இணைந்து, ஆஸ்திரேலியா முழுவதும் பல நகரங்களில் படையெடுப்பு தின போராட்டங்கள் நடைபெற்றன. Sydney Cove-இல் பிரிட்டிஷ் கொடி ஏற்றப்பட்ட ஜனவரி 26 ஆம்...

இரண்டாவது முறையாக தென்பட்ட சுறா மீன்கள் – மீண்டும் மூடப்பட்ட சிட்னி கடற்கரை

ஆஸ்திரேலியா தினத்தன்று சிட்னியின் வடக்கு கடற்கரைகளில் உள்ள பல பிரபலமான கடற்கரைகளில் சுறாக்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் தண்ணீரிலிருந்து வெளியேற்றப்பட்டனர். நேற்று காலை 11.25 மணியளவில் Manly கடற்கரையில்...