Sportsபார்டர் கவாஸ்கர் தொடர் - இந்திய வீரரின் செயலால் அதிர்ச்சியடைந்த ஸ்டீவ்...

பார்டர் கவாஸ்கர் தொடர் – இந்திய வீரரின் செயலால் அதிர்ச்சியடைந்த ஸ்டீவ் ஸ்மித்!

-

இந்தியா மற்றும் ஆவுஸ்திரேலியா அணிகள் மோதி வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

இந்தியா மற்றும் ஆவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர் தற்போது ஆரம்பமாகியுள்ளது. இதற்கு முன்பு ஆவுஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்ற இரண்டு டெஸ்ட் தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றி வரலாறு படைத்திருந்தது.

அப்படி இருக்கையில் தற்போது இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி அந்த இரண்டு தோல்விளுக்கும் மீண்டும் பதிலடி கொடுக்க வேண்டுமென்றும் முனைப்புடன் உள்ளது.

மறுபக்கம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி முன்னேற வேண்டும் என்றால் இந்த தொடரில் வெல்வது என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உள்ளது. இரு அணிகளும் தங்களின் வெற்றிக்கு போராடும் என்பதால் நான்கு டெஸ்ட் போட்டிகளும் மிகுந்த விறுவிறுப்புடன் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

அப்படி இருக்கையில் நாக்பூர் மைதானத்தில் ஆரம்பமான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆவுஸ்திரேலியா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஆஸ்திரேலியா அணியில் ஸ்மித் மற்றும் மார்னஸ் ஆகியோர், சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். ஆனால் ஜடேஜாவின் சுழற் பந்துவீச்சில் அவர்கள் இருவரும் அவுட் ஆக ஆஸ்திரேலிய அணியால் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியவில்லை.

64 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா அணி 177 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. சுமார் ஐந்து மாதங்கள் கழித்து இந்திய அணிக்காக ஆட களமிறங்கிய ரவிந்திர ஜடேஜா தனது கம்பேக்கிலேயே 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளும், ஷமி மற்றும் சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து முதல் நாளில் ஆடிய இந்திய அணி, 24 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்துள்ளது. ஆரம்பத்தில் இருந்து சற்று அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 69 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் உள்ளார். மறுபக்கம் ராகுல் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து இருந்தார்.

முதல் நாளில் முழுக்க முழுக்க இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி உள்ள சூழலில், ரவீந்தர் ஜடேஜாவிடம் ஸ்டீவ் ஸ்மித் தம்ப்ஸ் அப் காட்டியதும் அதற்கு பின்னால் உள்ள காரணமும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

ஆவுஸ்திரேலியா அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது 21-வது ஓவரை ரவீந்திர ஜடேஜா வீசி இருந்தார். அப்போது அவர் பந்தை எதிர்கொண்ட ஸ்மித் அதை அடிக்க முடியாமல் திணறிய நிலையில், அந்த பந்து ஸ்டம்ப்க்கு அருகே சென்றது. இதனை பார்த்ததும் ஜடேஜாவை நோக்கி Thumbs Up ஸ்டீவ் ஸ்மித் காட்டினார். தொடர்ந்து, அதே போல ஜடேஜா வீசிய பந்தில் தான் ஸ்மித் அவுட்டாகி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

இணையத்தைப் பயன்படுத்தும் குழந்தைகள் குறித்து காவல்துறை சிறப்பு அறிக்கை

ஆன்லைன் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை 15 பேரை கைது செய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினரால் நடத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையின்...

2026 ஆம் ஆண்டிலிருந்து விக்டோரியர்களுக்கு எளிதாகும் பொதுப் போக்குவரத்து

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விக்டோரியாவில் உள்ள அனைத்து streaming ஊடகங்களிலும் tap and go தொழில்நுட்பத்தை செயல்படுத்தப்போவதாக அரசாங்கம் கூறுகிறது. அதன்படி, ரயில் மற்றும் பேருந்து...

240 மில்லியன் டாலர் அபராதம் செலுத்தவுள்ள ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கி

ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகளில் ஒன்றான ANZ வங்கி, பல வருட மோசடிக்காக விதிக்கப்பட்ட $240 மில்லியன் அபராதத்தை செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. நான்கு தனித்தனி நடவடிக்கைகள் தொடர்பாக ANZ...

ஆஸ்திரேலியா முழுவதும் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் பற்றி எச்சரிக்கை

சமீபத்திய தரவுகளின்படி, கடந்த பத்தாண்டுகளில் ஆஸ்திரேலியாவில் syphilis மற்றும் gonorrhea நோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. NSW பல்கலைக்கழகத்தில் உள்ள கிர்பி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி,...

மெல்பேர்ணில் மணிக்கு 225km வேகத்தில் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்

நேற்று காலை மெல்பேர்ணில் மணிக்கு 225 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் உரிமத்தை போலீசார் பறிமுதல்...

ஆஸ்திரேலியா முழுவதும் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் பற்றி எச்சரிக்கை

சமீபத்திய தரவுகளின்படி, கடந்த பத்தாண்டுகளில் ஆஸ்திரேலியாவில் syphilis மற்றும் gonorrhea நோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. NSW பல்கலைக்கழகத்தில் உள்ள கிர்பி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி,...