Newsமனைவியுடன் விவாகரத்து - விதவை பெண்ணுடன் ஊர் சுற்றும் பில் கேட்ஸ்

மனைவியுடன் விவாகரத்து – விதவை பெண்ணுடன் ஊர் சுற்றும் பில் கேட்ஸ்

-

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும், உலக பணக்காரர்களில் ஒருவருமாக பில் கேட்ஸ் திகழ்ந்து வருபவர் .

இவரது முன்னாள் மனைவி மெலிண்டா. இவர்களுக்கு ஜெனீபர் (வயது 26 ) என்ற மகனும் ரோரி (23) மற்றும் போபே (20) என்ற 2 மகள்களும் உள்ளனர்.

இந்தநிலையில் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். அதன் பிறகு அவர்கள் விவாகரத்து பெற்றனர்.

இதனால் அவர்களது 27 ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் பவுலா ஹர்ட் என்ற விதவை பெண்ணுடன் பில் கேட்ஸ் தற்போது ஊர் சுற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பவுலா ஹர்ட்டின் கணவர் மார்க் ஹர்ட் பிரபல ஆரக்கிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி வகித்தவர். இந்த தம்பதிக்கு கேத்ரின், உள்பட 2 மகள்கள் உள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு மார்க் மரணம் அடைந்து விட்டார்.

இந்த சூழ்நிலையில் தான் பவுலா ஹர்டுக்கு பில்கேட்சுடன் நட்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ஒன்றாக ஊர் சுற்ற தொடங்கினார்கள். கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியை ஒன்றாக அமர்ந்து கண்டுகளித்தனர். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதே போல பல இடங்களுக்கும் அவர்கள் ஜோடியாக சென்றுவருவதாக தகவல் வந்த வண்ணம் உள்ளது. டென்னிஸ் மீது அவர்கள் வைத்து இருந்த ஆர்வம் தான் 2 பேரையும் காதலில் விழ வைத்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனை 2 பேருமே இதுவரை மறுக்கவில்லை. பவுலா ஹர்ட் தொழில் மேலாண்மை பட்டப்படிப்பு முடித்துள்ளார், அவர் விற்பனை மற்றும் நிர்வாக துறையில் நீண்ட காலம் பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

அடுத்த பத்து ஆண்டுகளுக்கு மின்சாரக் கட்டணம் தொடர்ந்து உயருமா?

அடுத்த பத்தாண்டுகளில் மின்சாரக் கட்டணங்கள் உயரும் என்று ஆஸ்திரேலிய குடும்பங்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி ஜாம்பவான்களான AGL, EnergyAustralia மற்றும் Origin ஆகியவற்றை உள்ளடக்கிய ஆஸ்திரேலிய எரிசக்தி கவுன்சில்...

பள்ளிகளுக்குள் மிரட்டல் விடுக்கும் பெற்றோருக்கு கடுமையான தண்டனை

தெற்கு ஆஸ்திரேலிய பள்ளிகளில் துஷ்பிரயோகம் செய்யும் பெற்றோரின் ஆபத்தான அதிகரிப்பு காரணமாக புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று அமுலுக்கு வந்த இந்தச் சட்டத்தின் கீழ், பள்ளிகளில் வன்முறை,...

ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான Contact Lens மறுசுழற்சி செய்யும் முறை!

ஆஸ்திரேலியா முழுவதும் பிளாஸ்டிக் Contact Lens பாக்கெட்டுகளை மறுசுழற்சி செய்வதற்கான ஒரு எளிய வழி தொடங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 700,000 ஆஸ்திரேலியர்கள் தினசரி அல்லது மாதாந்திர Lens அணிகிறார்கள்....

விக்டோரியன் லிபரல் கட்சிக்கு புதிய தலைவர்

விக்டோரியன் லிபரல் கட்சி தனது புதிய எதிர்க்கட்சித் தலைவராக ஜெஸ் வில்சனைத் தேர்ந்தெடுத்துள்ளது. வில்சன் 19-13 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெற்றார். விக்டோரியன் லிபரல் கட்சியை வழிநடத்தும்...

விக்டோரியன் லிபரல் கட்சிக்கு புதிய தலைவர்

விக்டோரியன் லிபரல் கட்சி தனது புதிய எதிர்க்கட்சித் தலைவராக ஜெஸ் வில்சனைத் தேர்ந்தெடுத்துள்ளது. வில்சன் 19-13 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெற்றார். விக்டோரியன் லிபரல் கட்சியை வழிநடத்தும்...

கிறிஸ்தவர்கள் அதிகம் துன்புறுத்தப்படுகின்றனர் – பாப்பரசர் பகிரங்க குற்றச்சாட்டு

பங்களாதேஷ் உட்பட பல நாடுகளில் கிறிஸ்தவர்கள் அதிக துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக பாப்பரசர் லியோ கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பாப்பரசர் 16ஆம் லியோ, சமூக வலைதளத்தில் ஒரு...