Newsஇரண்டாவதாக மீண்டும் பறந்த மர்மப் பொருளை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா

இரண்டாவதாக மீண்டும் பறந்த மர்மப் பொருளை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா

-

அமெரிக்காவின் அலாஸ்கா வான்வெளியில் பறந்து கொண்டிருந்த மர்மபொருளை அமெரிக்க இராணுவம் சுட்டு வீழ்த்தியது.

இதனை தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரி ஜான் கிர்பி வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமையன்று சீன உளவு பலூனை எப்-22 வை சுட்டு வீழ்த்திய பின்னர், ஆறு நாட்களுக்கு பிறகு இரண்டாவது முறையாக அமெரிக்க இராணுவம் இந்த மர்மமான பொருளை சுட்டு வீழ்த்தியுள்ளது. 

இது குறித்து வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஊடக பேச்சாளர் ஜான் கிர்பி கூறியதாவது,

அந்த மர்ம பொருள் எங்கிருந்து வந்தது. அதன் நோக்கம் என்னவென்றெல்லாம் எங்களுக்கு இன்னும் உறுதியாகவில்லை. ஆனால் 40 ஆயிரம் அடி உயரத்தில் மர்ம பொருள் பறப்பது விமான போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் என்பதால் அதனை நாங்கள் சுட்டு வீழ்த்தினோம்.

ஜனாதிபதி ஜோ பைடன் உத்தவின் பேரில் நாங்கள் அதனை சுட்டு வீழ்த்தினோம். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க வான்வெளியில் பறந்த சீன உளவு பலூனைவிட இது அளவில் சிறியதுதான். 

இது ஒரு காரின் அளவில் தான் இருந்தது. இது அரசுக்கு சொந்தமானதா அல்லது ஏதேனும் கார்ப்பரேட் நிறுவனத்துக்கு சொந்தமானதா? அதன் நோக்கம் தான் என்னவென்பது இன்னும் உறுதியாகவில்லை’ என்றார்.

நன்றி தமிழன்

Latest news

அமெரிக்க ரகசிய சேவையில் சேர்ந்த 13 வயது சிறுவன்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 13 வயது சிறுவனை அமெரிக்க ரகசிய சேவையின் முகவராக நியமித்துள்ளார். டிஜே என்ற மைனர் ஒருவர் ரகசிய புலனாய்வு சேவையில் சேர்க்கப்பட்டுள்ளதாக...

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களுக்கு வத்திக்கானிலிருந்து ஒரு நல்ல செய்தி

இரண்டு முறை சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட போப் பிரான்சிஸின் உடல்நிலை சீராகி வருவதாக வத்திக்கான் அறிவித்துள்ளது. 88 வயதான போப், பிப்ரவரி நடுப்பகுதியில் இருந்து நிமோனியாவுக்கு சிகிச்சை...

நுளம்புக்கடியில் இருந்து தங்களை பாதுகாக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

வடக்கு விக்டோரியாவில் மேலும் ஒரு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளதால் நுளம்புக்கடியில் இருந்து தங்களை பாதுகாக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதல் வழக்கு நியூ சவுத்...

விக்டோரியன் சாலைகளில் வேக வரம்புகளில் மாற்றம்

விக்டோரியன் சாலைகளில் வேக வரம்புகளை மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, விக்டோரியாவில் சில சாலைகளில் வேக வரம்பு 30 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் 30 ஆண்டு...

நுளம்புக்கடியில் இருந்து தங்களை பாதுகாக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

வடக்கு விக்டோரியாவில் மேலும் ஒரு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளதால் நுளம்புக்கடியில் இருந்து தங்களை பாதுகாக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதல் வழக்கு நியூ சவுத்...

விக்டோரியன் சாலைகளில் வேக வரம்புகளில் மாற்றம்

விக்டோரியன் சாலைகளில் வேக வரம்புகளை மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, விக்டோரியாவில் சில சாலைகளில் வேக வரம்பு 30 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் 30 ஆண்டு...