Newsதுருக்கி-சிரியா மக்களுக்கு அவசரகால விசா வழங்க ஜெர்மன் அரசாங்கம் முடிவு

துருக்கி-சிரியா மக்களுக்கு அவசரகால விசா வழங்க ஜெர்மன் அரசாங்கம் முடிவு

-

துருக்கி-சிரியா மக்களுக்கு உதவிட ஜெர்மன் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. 

எனவே ,நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு நாட்டு மக்களுக்கும் 3 மாதங்கள் வரையிலான அவசரகால விசாக்களை வழங்க ஜெர்மன் அரசாங்கம் முன்வந்துள்ளது. 

இதுபற்றி அந்நாட்டு உள்துறை அமைச்சர் நான்சி பீசர் தெரிவிக்கையில் ,

பில்த் என்ற தினசரி பத்திரிகைக்கு அளித்த பேட்டியின்போது, பேரிடர் பாதித்த பகுதிகளில் இருந்து தங்களது நெருங்கிய உறவினர்களை ஜெர்மன்க்கு அழைத்து வரும் துருக்கி மற்றும் சிரியா நாட்டு மக்களை ஜெர்மன்க்குள் வர அனுமதிக்க விரும்புகிறோம். 

அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் வரலாம். இதற்காக விசா கெடுபிடிகள், அரசு விதிகள் ஆகியவை இருக்காது. இது அவசரகால உதவி என கூறியுள்ளார்.

நிலநடுக்க பாதிப்பில் சிக்கி தவிப்பவர்களுக்கு உதவியாக, இந்தியா போன்ற உலக நாடுகள் மருத்துவ பொருட்கள், குளிர்கால போர்வைகள், விரிப்புகள் உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரண பொருட்களை விமானங்களில் அனுப்பி வருகின்றன.

20-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளை சேர்ந்த பேரிடர் நிவாரண படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நன்றி தமிழன்

Latest news

NSW-வில் சிறுவர் துஷ்பிரயோகப் பொருட்களை வைத்திருந்த ஓட்டுநர் கைது

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு பள்ளிப் பேருந்து ஓட்டுநரின் மின்னணு சாதனங்களில் குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்யும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர் மீது குற்றம்...

ஜூலை 1 முதல் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு ஏற்படவுள்ள மாற்றம்

ஆஸ்திரேலியர்கள் தங்கள் பணத்தைச் சேமித்துச் செலவிடும் விதத்தில் பரவலான மாற்றங்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வருகின்றன. மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் பொதுவாக புதிய நிதியாண்டை...

சில்லறை எரிசக்தி சந்தையில் புதிய விதிகளை அறிவித்த AEMC

நாட்டின் சில்லறை எரிசக்தி சந்தையில் ஒரு பெரிய மாற்றமாக, மின்சார சில்லறை விற்பனையாளர்கள் வருடத்திற்கு ஒரு முறை நுகர்வோர் விலைகளை உயர்த்துவதற்கு மட்டுமே வரம்பிடப்படுவார்கள். ஆஸ்திரேலிய எரிசக்தி...

வேலை விசாக்களை வைத்திருக்க கருக்கலைப்பைத் தேர்ந்தெடுக்கும் பெண்கள்

ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த பெண்கள் தங்கள் விசா நிபந்தனைகளை மீறுவதைத் தவிர்ப்பதற்காக தன்னிடம் கருக்கலைப்பு செய்ய முயல்வதாக ஒரு மகப்பேறு மருத்துவர் நாடாளுமன்ற விசாரணையில்...

சில்லறை எரிசக்தி சந்தையில் புதிய விதிகளை அறிவித்த AEMC

நாட்டின் சில்லறை எரிசக்தி சந்தையில் ஒரு பெரிய மாற்றமாக, மின்சார சில்லறை விற்பனையாளர்கள் வருடத்திற்கு ஒரு முறை நுகர்வோர் விலைகளை உயர்த்துவதற்கு மட்டுமே வரம்பிடப்படுவார்கள். ஆஸ்திரேலிய எரிசக்தி...

வேலை விசாக்களை வைத்திருக்க கருக்கலைப்பைத் தேர்ந்தெடுக்கும் பெண்கள்

ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த பெண்கள் தங்கள் விசா நிபந்தனைகளை மீறுவதைத் தவிர்ப்பதற்காக தன்னிடம் கருக்கலைப்பு செய்ய முயல்வதாக ஒரு மகப்பேறு மருத்துவர் நாடாளுமன்ற விசாரணையில்...