Newsவெளிநாட்டு பெண்களுக்கு உடனடி குடியுரிமை வழங்கும் அர்ஜென்டினா!

வெளிநாட்டு பெண்களுக்கு உடனடி குடியுரிமை வழங்கும் அர்ஜென்டினா!

-

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் வசிக்கும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் அந்த நாட்டின் குடியுரிமையை பெறுவதற்கான நடைமுறைகள் எளிதாக உள்ளன.

குறிப்பாக அர்ஜென்டினாவில் வெளிநாட்டு பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு உடனடியாக குடியுரிமை வழங்கப்படுகிறது. 

மேலும் அந்த குழந்தையின் பெற்றோரும் விரைவாக குடியுரிமை பெற முடிகிறது.

இதனால் ரஷ்யாவை சேர்ந்த பெண்கள் பலரும் தங்களின் பிரசவ காலத்தில் அர்ஜென்டினாவுக்கு பயணம் செய்து, அங்கு குழந்தை பெற்றுக்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

இந்த சூழலில் சமீபத்திய மாதங்களில் அர்ஜென்டினா வரும் ரஷ்ய கர்ப்பிணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக அர்ஜென்டினா அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

கடந்த சில மாதங்களில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான ரஷ்ய கர்ப்பிணிகள் அர்ஜென்டினா வந்துள்ளதாகவும், கடந்த வியாழக்கிழமை ஒரே விமானத்தில் 33 கர்ப்பிணிகள் வந்ததாகவும் அர்ஜென்டினாவின் குடியுரிமை அதிகாரிகள் கூறினர். 

அவர்களில் 3 பெண்கள் முறையான ஆவணங்கள் வைத்திருக்காத காரணத்தால் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பெரும்பாலான கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தின் கடைசி வாரங்களில் அர்ஜென்டினாவுக்கு வருவதாகவும், அவர்கள் சுற்றுலா பயணிகள் என்கிற போர்வையில் நாட்டுக்குள் நுழைவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

அர்ஜென்டினாவின் பாஸ்போர்ட், ரஷ்;ய பாஸ்போர்ட்டை விட அதிக சுதந்திரத்தை தருவதால் ரஷ்ய பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு அர்ஜென்டினா குடியுரிமையை பெற விரும்புவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். 

அதாவது, ரஷ்யர்கள் 87 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் பயணிக்க முடியும். ஆனால் அர்ஜென்டினா குடியுரிமை பெற்றவர்கள் 171 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

நன்றி தமிழன்

Latest news

தேசிய பூங்காக்களுக்குள் நுழைய சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க நியூசிலாந்து முடிவு

அரசாங்கம் பொருளாதார வளர்ச்சியைத் தூண்ட உதவும் வழிகளைத் தேடுவதால், நியூசிலாந்து தனது மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களான Milford Track மற்றும் Mount Cook ஆகியவற்றைப் பார்வையிட...

கோலாக்களைப் பாதுகாக்க மில்லியன் கணக்கான டாலர்கள் முதலீடு

ஆஸ்திரேலியாவின் அழிந்து வரும் கோலாக்களைப் பாதுகாக்க ஒரு புதிய தேசிய பூங்கா அறிவிக்கப்பட்டுள்ளது. சிட்னியின் தென்மேற்கே அமைந்துள்ள லாங் பாயிண்ட் மற்றும் அப்பின் இடையே இதற்காக சுமார்...

ஆஸ்திரேலியர்களுக்கு $300 தடுப்பூசியை இலவசமாக வழங்குமாறு அழுத்தம் 

நாடு முழுவதும் மிகவும் தொற்றும் வைரஸிற்கான வழக்கு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஆயிரக்கணக்கான பாதிக்கப்படக்கூடிய ஆஸ்திரேலியர்களுக்கு $300 மதிப்புள்ள RSV தடுப்பூசியை இலவசமாக்க மத்திய அரசை...

Wagga Wagga அருகே தாக்குதலில் உயிரிழந்த 84 வயது முதியவர்

Wagga Wagga அருகே உள்ள ஒரு வீட்டில் 84 வயது முதியவரும் அவரது 82 வயது மனைவியும் அவர்களுக்குத் தெரிந்த ஒருவரால் தாக்கப்பட்டு, மூன்று நாட்களுக்குப்...

ஆஸ்திரேலியர்களுக்கு $300 தடுப்பூசியை இலவசமாக வழங்குமாறு அழுத்தம் 

நாடு முழுவதும் மிகவும் தொற்றும் வைரஸிற்கான வழக்கு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஆயிரக்கணக்கான பாதிக்கப்படக்கூடிய ஆஸ்திரேலியர்களுக்கு $300 மதிப்புள்ள RSV தடுப்பூசியை இலவசமாக்க மத்திய அரசை...

Wagga Wagga அருகே தாக்குதலில் உயிரிழந்த 84 வயது முதியவர்

Wagga Wagga அருகே உள்ள ஒரு வீட்டில் 84 வயது முதியவரும் அவரது 82 வயது மனைவியும் அவர்களுக்குத் தெரிந்த ஒருவரால் தாக்கப்பட்டு, மூன்று நாட்களுக்குப்...