Newsஅமெரிக்காவை தொடர்ந்து கனடாவிலும் சுட்டு வீழ்த்தப்பட்ட மர்ம பொருள்

அமெரிக்காவை தொடர்ந்து கனடாவிலும் சுட்டு வீழ்த்தப்பட்ட மர்ம பொருள்

-

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்துக்கு மேலே ராட்சத பலூன் ஒன்று பறந்து கொண்டிருப்பது கடந்த 1-ம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது. 

சீனாவின் உளவு பலூன் என அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் குற்றம் சாட்டியது. 

ஆனால் சீனாவோ அது உளவு பலூன் இல்லை என்றும், வானிலை ஆய்வுக்காக அனுப்பப்பட்ட பலூன் திசை மாறி அமெரிக்காவுக்குள் வந்துவிட்டதாகவும் விளக்கம் அளித்தது. 

அமெரிக்கா அதை ஏற்கவில்லை. இதனையடுத்து, ஜனாதிபதி ஜோ பைடனின் உத்தரவின் பேரில் கடந்த 4-ம் திகதி சீன உளவு பலூன் போர் விமானம் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. 

இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனிடையே தங்கள் நாட்டு வான் பரப்பில் சீன உளவு பலூன் பறந்த விவகாரத்தில், சீனாவுக்கு கண்டனம் தெரிவித்து , அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதற்கு அதிருப்தி தெரிவித்த சீனா, அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, பலூன் விவகாரத்தில் அரசியல் ரீதியில் தங்களை தவறாக சித்தரிக்கும் செயல் என குற்றம் சாட்டியது. 

இப்படி உளவு பலூன் விவகாரத்தில் அமெரிக்கா-சீனா இடையே மோதல் வலுத்து வரும் நிலையில், அமெரிக்க வான் பரப்பில் மீண்டும் ஒரு மர்ம பொருள் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சுமார் 40 ஆயிரம் அடி உயரத்தில் அந்த மர்ம பொருள் பறந்ததாகவும், அதை போர் விமானம் மூலம் சுட்டு வீழ்த்தியதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்தது.

இந்நிலையில், ‘அடையாளம் தெரியாத மர்ம பொருள்’ கனடாவில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஜனாதிபதி ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

ஈரானின் உச்ச தலைவர் எங்கு மறைந்திருக்கிறார் என எனக்கு தெரியும் – அதிபர் டொனால்ட் டிரம்ப்

ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமெனி எங்கு மறைந்திருக்கிறார் என்பது தனக்குத் தெரியும் என்று கூறி, அவரைக் கொலை செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

ஒரே நாளில் 583 பேருடன் உடலுறவு கொண்ட பெண்ணின் கனவுகள் நனவாகின

ஒரே நாளில் 583 ஆண்களுடன் உடலுறவு கொண்ட ஆஸ்திரேலியப் பெண் ஒருவர் தனது கனவு இல்லத்தை நனவாக்கியுள்ளார். அவர் தனது கனவு இல்லத்திற்காக $600,000 செலவிட்டதாகக் கூறப்படுகிறது. Annie...

ரத்து செய்யப்பட்ட சந்திப்பு – அல்பானீஸிடம் சொல்லாமல் வெளியேறும் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இடையேயான சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. கனடாவில் நடைபெறும் G7 உச்சிமாநாட்டிலிருந்து டொனால்ட் டிரம்ப் முன்கூட்டியே வெளியேறுவார்...

NSW-வில் விபத்துக்குள்ளான ஒரு இலகுரக விமானம்

நியூ சவுத் வேல்ஸில் நடந்த ஒரு இலகுரக விமான விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து, மாநிலத்தில் உள்ள Parkes-இற்கு மேற்கே சுமார் 140 கிலோமீட்டர் தொலைவில்...

சமூக ஊடகங்களில் குற்றங்களை ஊக்குவித்தால், நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்!

சமூக ஊடகங்கள் மூலம் குற்றங்களைத் தூண்டும் நபர்களுக்கு எதிர்காலத்தில் சிறைத்தண்டனை விதிக்கப்படும். விக்டோரியா மாநிலம் இன்று நாடாளுமன்றத்தில் தொடர்புடைய முன்மொழிவை சமர்ப்பிக்கும். சமூக ஊடகங்கள் மற்றும் செய்தியிடல் செயலிகள்...

ரத்து செய்யப்பட்ட சந்திப்பு – அல்பானீஸிடம் சொல்லாமல் வெளியேறும் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இடையேயான சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. கனடாவில் நடைபெறும் G7 உச்சிமாநாட்டிலிருந்து டொனால்ட் டிரம்ப் முன்கூட்டியே வெளியேறுவார்...