Newsஅவுஸ்திரேலிய இசைக் கச்சேரிகள் என்ற போர்வையில் இலங்கையர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட மோசடி!

அவுஸ்திரேலிய இசைக் கச்சேரிகள் என்ற போர்வையில் இலங்கையர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட மோசடி!

-

இசை நிகழ்ச்சிகள் என்ற போர்வையில் இலங்கையர்கள் சிலர் மேற்கொள்ளும் மோசடி நடவடிக்கைகளுக்கு முகங்கொடுத்து, உண்மையான நோக்கத்திற்காக வீசாவிற்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்களுக்கு கூட அவுஸ்திரேலியா வீசா கிடைக்காத அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்குக் காரணம், பல்வேறு இசைக் கச்சேரிகளை நடத்துவது என்ற போர்வையில் சில தரப்பினர் அவுஸ்திரேலிய விசாவைப் பெறுவதற்கு பல்வேறு யுக்திகளை மேற்கொள்வதாகும்.

ஏற்பாடு செய்யப்பட்ட சில நாட்களிலேயே இசைக் கச்சேரிகள் ரத்து செய்யப்படுவது இதன் முக்கிய அம்சமாகும்.

இசை நிகழ்ச்சிகளுக்கு விசா பெறும் இசைக் கலைஞர்கள் அவுஸ்திரேலியாவுக்கு வந்த பிறகு காணாமல் போவதும் வாடிக்கையாகிவிட்டது. கடந்த காலங்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இவ்வாறான விடயங்களினால் உண்மையான நோக்கங்களுக்காக அவுஸ்திரேலியாவிற்கு வரும் மாணவர்களுக்கும் அவுஸ்திரேலியாவிற்கு பிள்ளைகளைப் பார்ப்பதற்காக வரும் இலங்கைப் பெற்றோருக்கும் விசா கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான தந்திரங்கள் இலங்கையின் இமேஜை மேலும் சேதப்படுத்தும் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளால் உண்மையாகவே தமது செயற்பாடுகளில் ஈடுபடும் இலங்கையின் இசைக் கலைஞர்களுக்கு கடுமையான அநீதிகள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான செயற்பாடுகளும் இசைத்துறையின் வீழ்ச்சிக்கு காரணமாக அமையும் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கைக்கு டொலர் சம்பாதிப்பதற்காக கடுமையாக உழைக்கும் இசைக்கலைஞர்கள் ஊக்கம் குன்றி, நாட்டுக்கு உரிய வருமானம் கிடைக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.

Latest news

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் Woolworths

Woolworths அடுத்த சில வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கூடுதல் வரியை விதிக்க உள்ளது. பெப்ரவரி மாதம் முதல், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பொருட்களை எடுத்துச்...

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...

Grok AI-ஆல் உருவாக்கப்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக வலையமைப்பான 'Grok' AI chatbot, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (Deepfakes) உருவாக்கிய...