Newsஅமெரிக்கா-கனடாவை தொடர்ந்து ருமேனியா வானில் பறந்த மர்ம பலூன்

அமெரிக்கா-கனடாவை தொடர்ந்து ருமேனியா வானில் பறந்த மர்ம பலூன்

-

அமெரிக்காவில் இந்த மாத தொடக்கத்தில் சீனாவின் உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு பிறகு அந்த நாட்டின் வான்பரப்பில் அடுத்தடுத்து 2 மர்ம பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு, சுட்டு வீழ்த்தப்பட்டன. 

அதேபோல் அமெரிக்காவின் அண்டை நாடான கனடாவிலும் வானில் பறந்த மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது. 

இந்த நிலையில் ஐரோப்பிய நாடான ருமேனியாவின் வான்பரப்பில் மர்ம பலூன் பறந்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இது குறித்து அந்த நாட்டின் இராணுவ அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், ‘நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சுமார் 36 ஆயிரம் அடி உயரத்தில் வான்வெளியில் மர்ம பலூன் ஒன்று பறப்பதை ரேடார் அமைப்பு கண்டறிந்தது. 

அதனை தொடர்ந்து உடனடியாக 2 போர் விமானங்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் விமானங்கள் சென்றபோது அந்த இடத்தில் மர்ம பலூன் எதுவும் இல்லை. 

ரேடாரில் இருந்தும் அது மறைந்துவிட்டது. எனவே ருமேனிய வான்வெளிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை’ என கூறப்பட்டது. 

அதேபோல் ருமேனியாவின் அண்டை நாடான மால்டோவாவும் தங்கள் வான்பரப்பில் மர்ம பலூன் தென்பட்டதாக தெரிவித்தது. 

அதுமட்டும் இன்றி வானில் மர்ம பலூன் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மால்டோவா தனது வான்வெளி முழுவதையும் தற்காலிகமாக மூடியது. 

இதன் காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது தாமதமாக இயக்கப்பட்டன. பல விமானங்கள் ருமேனியாவுக்கு மாற்றிவிடப்பட்டன. 

இரண்டு சம்பவங்களும் தொடர்புடையதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. மேலும் இந்த மர்ம பலூன்கள் எங்கிருந்து வந்தன என்று இரு நாடுகளும் தெரிவிக்கவில்லை.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...