Sportsஇந்திய அணியின் ரகசியத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய தேர்வு குழு தலைவர்

இந்திய அணியின் ரகசியத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய தேர்வு குழு தலைவர்

-

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தேர்வு குழு தலைவராக சேத்தன் சர்மா இருக்கிறார்.

முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இவர் தனியார் டெலிவிஷன் சேனல் நடத்திய ரகசிய ஸ்டிங் ஆபரேசனில் இந்திய அணி குறித்த பல்வேறு ரகசியங்களை வெளியிட்டுள்ளார். அவரது இந்த தகவல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

சேத்தன் சர்மா கசிய விட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:-

விராட் கோலிக்கும், ரோகித் சர்மாவுக்கும் இடையே ஈகோ இருந்தது உண்மைதான். ரோகித் சர்மாவுக்கு கங்குலி ஆதரவாக செயல்பட்டார் என்று சொல்ல முடியாது. ஆனால் அதே நேரத்தில் விராட் கோலியையும், கங்குலிக்கு அவ்வளவாக பிடிக்காது.

தனது கேப்டன் பதவி பறிபோனதற்கு கங்குலி தான் காரணம் என்று கோலி நினைத்தார். அதே நேரத்தில் கங்குலிக்கு எப்போதுமே கோலியை பிடிக்காது. தொலைபேசி மூலம் நடந்த தேர்வு குழு சந்திப்பில் என்னோடு சேர்த்து மொத்தம் 9 பேர் பங்கேற்று இருந்தார்கள். 

அப்போது கேப்டன் பதவியில் இருந்து விலகும் முடிவு மறுபரிசீலனை செய்ய சொல்லி கங்குலி ஒரு முறை கேட்டுள்ளார். 

அதை கோலி கவனிக்காமல் விட்டு இருக்கலாம் என்று நினைக்கிறேன். நிருபர்கள் சந்திப்பின் போது கேப்டன் விலகல் முடிவை கங்குலி மறு பரிசீலனை செய்ய சொல்லவில்லை என்று கோலி பேசியிருந்தார். 

கோலி பொய் சொல்வதாக கங்குலி கூறினார். ஆனால் கோலி அப்படி சொன்னது ஏன் என்று இன்று வரை புரிந்து கொள்ள முடியவில்லை. 

20 ஓவர் அணியில் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காகவே விராட் கோலிக்கும், ரோகித் சர்மாவுக்கும் ஓய்வு கொடுத்தோம். 

20 ஓவர் அணியில் ரோகித் சர்மா இனி கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கப்படுவார். ஹர்த்திக் பாண்ட்யாவே கேப்டன் ஆவார். பும்ராவால் தனது முதுகை வளைக்க கூட முடியவில்லை. அவரை போன்ற காயம் அடைந்த சில வீரர்கள் தனியாக சில ஊசி எடுத்து கொண்டு முழு உடல் தகுதியுடன் இருப்பதாக கூறி இருக்கிறார்கள். 

முழுமையாக உடல் தகுதி இல்லாத வீரர்கள் இப்படி ஊசி மருந்துகளை எடுத்து கொண்டு 80 சதவீத உடல் தகுதியுடன் ஆடி இருக்கிறார்கள். 

இந்திய அணியில் ரோகித் சர்மாவும், ஹர்த்திக் பாண்டியாவும் தான் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள். இருவரும் பலமுறை எனது

வீட்டுக்கு வந்து இருக்கிறார்கள். இவ்வாறு சேத்தன் கூறியுள்ளார்.

இந்த சர்ச்சை காரணமாக சேத்தன் சர்மா மீது கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி தமிழன்

Latest news

ஏலத்திற்கு வரும் உலகின் மிக உயரமான விக்டோரியன் Gothic கோபுரம்

53 மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள ஒரு அசாதாரண ஆங்கில கோட்டை தான் ஐக்கிய இராச்சியத்தில் அமைந்துள்ள இந்த Hadlow Tower ஆகும். இந்த கோபுரம் 19 ஆம்...

அணுசக்தி கொள்கையை வரவிருக்கும் பொதுத் தேர்தலில் அறிமுகப்படுத்தும் தேசியக் கட்சி

ஆஸ்திரேலியாவின் எரிசக்தி திட்டத்திற்கான அணுசக்தி கொள்கையை வரவிருக்கும் பொதுத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்போவதாக தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. வரவிருக்கும் பொதுத் தேர்தலில் கட்சி முன்வைக்கும் முக்கிய சட்டமன்ற முன்மொழிவுகளில்...

ஆஸ்திரேலியாவில் நுண் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவு பற்றி வெளியான ஆய்வு

ஆஸ்திரேலியாவில் மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாடு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியாவில் நுண் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவை வெளிப்படுத்தும் ஒரு ஆய்வை UNSW SMaRT மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் வண்டல்...

ஆஸ்திரேலிய பொருளாதாரத்திற்கு 3 பில்லியன் டாலர்களைக் கொண்டு வரும் நாய்கள்

ஆஸ்திரேலியாவின் வேலை செய்யும் நாய்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு $3 பில்லியன் மதிப்பைக் கொண்டு வருவதாக புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. ANZ நடத்திய ஆய்வில், கடந்த 10 ஆண்டுகளில்...

ஆஸ்திரேலியாவில் நுண் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவு பற்றி வெளியான ஆய்வு

ஆஸ்திரேலியாவில் மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாடு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியாவில் நுண் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவை வெளிப்படுத்தும் ஒரு ஆய்வை UNSW SMaRT மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் வண்டல்...

ஆஸ்திரேலிய பொருளாதாரத்திற்கு 3 பில்லியன் டாலர்களைக் கொண்டு வரும் நாய்கள்

ஆஸ்திரேலியாவின் வேலை செய்யும் நாய்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு $3 பில்லியன் மதிப்பைக் கொண்டு வருவதாக புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. ANZ நடத்திய ஆய்வில், கடந்த 10 ஆண்டுகளில்...