Newsசுவிஸ்லாந்து பாராளுமன்றத்திற்குள் வெடிகுண்டுகளுடன் நுழைந்த நபரால் பதற்றம்

சுவிஸ்லாந்து பாராளுமன்றத்திற்குள் வெடிகுண்டுகளுடன் நுழைந்த நபரால் பதற்றம்

-

சுவிஸ்லாந்து  நாட்டின் தலைநகர் பெர்னேவில் அமைந்த பாராளுமன்றத்தின் நுழைவு வாயில்களில் ஒன்றின் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு நபர் காணப்பட்டுள்ளார். 

இது குறித்து பெர்னே நகர பொலிஸார் தெரிவிக்கையில்,

அரண்மனை பகுதியின் தெற்கு நுழைவு வாயில் அருகே பாதுகாப்பு கவசம் உள்ளிட்டவற்றை அணிந்து கொண்டு சந்தேகப்படும்படியாக ஒரு நபர் நின்று கொண்டு இருந்துள்ளார். 

அவரை மத்திய பாதுகாப்பு படை பணியாளர்கள் நேற்று மதியம் கண்டுள்ளனர். இதனை தொடர்ந்து அந்நபரிடம் தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்ட சோதனையில், விரைவு பரிசோதனையில் அவரிடம் வெடிகுண்டுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

தொடக்க விசாரணையில் அந்நபர் பண்டிஸ்பிளாட்ஜ் பகுதிக்கு காரில் சென்றதும், அதன்பின்னர் பண்டிஷாஸ் நகருக்கு அவர் சென்றதும் தெரிய வந்துள்ளது. இவற்றின் அடிப்படையில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்த பின் அந்நபர் ஒப்படைக்கப்பட்டார்.

உடனடியாக அந்நபரை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர். அந்த காரில் வெடிகுண்டுகள் இருந்ததும் மறுப்பதற்கு இல்லை என பொலிஸார் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

உடனடியாக பண்டிஸ்பிளாட்ஜ் நகரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அருகேயுள்ள பல தெருக்களை தங்களது வளையத்திற்குள் பொலிஸார் கொண்டு வந்தனர். 

பாராளுமன்ற கட்டிடம் உள்பட அரண்மனையின் பிற பகுதிகளில் உள்ள பல்வேறு கட்டிடங்கள், அது தொடர்புடைய அலுவலகங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். 

தீயணைப்பு மற்றும் வெடிகுண்டு துறை நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காரை பரிசோதிக்கவும் முடிவானது. ஆளில்லா விமானங்கள் மற்றும் மோப்ப நாய் ஒன்றும் பணியின் ஒரு பகுதியாக அதில் ஈடுபடுத்தப்பட்டது. 

இறுதியில் காரால் ஆபத்து எதுவும் இல்லை என இறுதி கட்ட விசாரணையில் தெரிந்த பின்னர், நேற்று இரவு 7 மணியளவில், அனைத்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் நீக்கப்பட்டன என பொலிஸார் தெரிவித்தனர். 

எனினும், நகர பொலிஸாருடன் இணைந்து சட்டத்தரணிகள் அலுகலகம், குற்ற புலனாய்வு விசாரணையை ஆரம்பித்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் குறித்து இன்ஸ்டாகிராம் பயனர்கள் எச்சரிக்கை

கடவுச்சொல் மீட்டமைப்புகளைக் கேட்கும் சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் குறித்து மில்லியன் கணக்கான பயனர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இன்ஸ்டாகிராம் எச்சரித்துள்ளது. கடவுச்சொல் மீட்டமைப்பு மின்னஞ்சல்களைக் கோராமலேயே பெறுவது குறித்து பயனர்கள்...

குயின்ஸ்லாந்திற்குள் நுழையும் Koji புயல் – 2 பகுதிகளுக்கு திடீர் வெள்ள அபாயம்

வெப்பமண்டல சூறாவளி Koji குயின்ஸ்லாந்து மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் Ayr மற்றும் Bowen-ஐ சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் மிக அதிக மழையால் பாதிக்கப்படுவார்கள் என்றும், இது...

புதிய Influenza தொற்றுநோய் – காய்ச்சல் நோயாளிகள் அதிகரிப்பு

'Super-K' அல்லது subclade-K எனப்படும் புதிய இன்ஃப்ளூயன்ஸா திரிபு, காய்ச்சல் நோயாளிகளில் அசாதாரண அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் கூறுகின்றனர். WHO ஒத்துழைப்பு மையத்தின் இன்ஃப்ளூயன்ஸா...

காட்டுத்தீயின் போது பகுதியில் கண்டெடுக்கப்பட்ட Longwood மனித உடல்

விக்டோரியா மாநிலம் முழுவதும் பரவி வரும் கடுமையான காட்டுத்தீ நிலைமை இப்போது ஒரு அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. Longwood பகுதியில் பலத்த எரிந்த பகுதியில் ஒரு மனித...

காட்டுத்தீயின் போது பகுதியில் கண்டெடுக்கப்பட்ட Longwood மனித உடல்

விக்டோரியா மாநிலம் முழுவதும் பரவி வரும் கடுமையான காட்டுத்தீ நிலைமை இப்போது ஒரு அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. Longwood பகுதியில் பலத்த எரிந்த பகுதியில் ஒரு மனித...

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள சுற்றுலா நகரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல்

மேற்கு ஆஸ்திரேலியாவின் தென்மேற்கில் உள்ள பிரபலமான சுற்றுலா நகரங்கள் அதிக போக்குவரத்து நெரிசலால் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன. Dunsborough மற்றும் Busselton போன்ற நகரங்களில் உள்ள கடற்கரைகள்...