Newsசுவிஸ்லாந்து பாராளுமன்றத்திற்குள் வெடிகுண்டுகளுடன் நுழைந்த நபரால் பதற்றம்

சுவிஸ்லாந்து பாராளுமன்றத்திற்குள் வெடிகுண்டுகளுடன் நுழைந்த நபரால் பதற்றம்

-

சுவிஸ்லாந்து  நாட்டின் தலைநகர் பெர்னேவில் அமைந்த பாராளுமன்றத்தின் நுழைவு வாயில்களில் ஒன்றின் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு நபர் காணப்பட்டுள்ளார். 

இது குறித்து பெர்னே நகர பொலிஸார் தெரிவிக்கையில்,

அரண்மனை பகுதியின் தெற்கு நுழைவு வாயில் அருகே பாதுகாப்பு கவசம் உள்ளிட்டவற்றை அணிந்து கொண்டு சந்தேகப்படும்படியாக ஒரு நபர் நின்று கொண்டு இருந்துள்ளார். 

அவரை மத்திய பாதுகாப்பு படை பணியாளர்கள் நேற்று மதியம் கண்டுள்ளனர். இதனை தொடர்ந்து அந்நபரிடம் தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்ட சோதனையில், விரைவு பரிசோதனையில் அவரிடம் வெடிகுண்டுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

தொடக்க விசாரணையில் அந்நபர் பண்டிஸ்பிளாட்ஜ் பகுதிக்கு காரில் சென்றதும், அதன்பின்னர் பண்டிஷாஸ் நகருக்கு அவர் சென்றதும் தெரிய வந்துள்ளது. இவற்றின் அடிப்படையில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்த பின் அந்நபர் ஒப்படைக்கப்பட்டார்.

உடனடியாக அந்நபரை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர். அந்த காரில் வெடிகுண்டுகள் இருந்ததும் மறுப்பதற்கு இல்லை என பொலிஸார் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

உடனடியாக பண்டிஸ்பிளாட்ஜ் நகரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அருகேயுள்ள பல தெருக்களை தங்களது வளையத்திற்குள் பொலிஸார் கொண்டு வந்தனர். 

பாராளுமன்ற கட்டிடம் உள்பட அரண்மனையின் பிற பகுதிகளில் உள்ள பல்வேறு கட்டிடங்கள், அது தொடர்புடைய அலுவலகங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். 

தீயணைப்பு மற்றும் வெடிகுண்டு துறை நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காரை பரிசோதிக்கவும் முடிவானது. ஆளில்லா விமானங்கள் மற்றும் மோப்ப நாய் ஒன்றும் பணியின் ஒரு பகுதியாக அதில் ஈடுபடுத்தப்பட்டது. 

இறுதியில் காரால் ஆபத்து எதுவும் இல்லை என இறுதி கட்ட விசாரணையில் தெரிந்த பின்னர், நேற்று இரவு 7 மணியளவில், அனைத்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் நீக்கப்பட்டன என பொலிஸார் தெரிவித்தனர். 

எனினும், நகர பொலிஸாருடன் இணைந்து சட்டத்தரணிகள் அலுகலகம், குற்ற புலனாய்வு விசாரணையை ஆரம்பித்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

3,000-இற்கும் அதிகமான ஊழியர்களை வெளியேற்ற நாசா நடவடிக்கை

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் சுமார் 14,000 ஊழியர்கள் பணி செய்து வருகின்ற நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி நடவடிக்கையால் நாசாவில் மேலும்...

ஆஸ்திரேலியாவில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எச்சரிக்கை

இந்த வாரம் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வாரம் பல மாநிலங்களில் ஆலங்கட்டி மழை, மழை மற்றும்...

நாடு முழுவதும் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை

தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான மக்கள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழையை எதிர்கொள்கின்றனர். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாடு முழுவதும் மழை...

மேலும் இரு நாடுகளில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் டிரம்பின் தலையீடு

எல்லையில் மூன்று நாட்கள் சண்டைக்குப் பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க கம்போடியாவும் தாய்லாந்தும் சந்திக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக டிரம்பிற்கு...

மேலும் இரு நாடுகளில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் டிரம்பின் தலையீடு

எல்லையில் மூன்று நாட்கள் சண்டைக்குப் பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க கம்போடியாவும் தாய்லாந்தும் சந்திக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக டிரம்பிற்கு...

இளையராஜாவின் இசைக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி

கங்கைகொண்ட சோழபுரத்தில் இளையராஜாவின் இசைக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுந்து நின்று மரியாதை செலுத்தியுள்ளார். அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலில் நடைபெற்ற முதலாம் ராஜேந்திர...