Newsவங்கிக் கிளைகளை மூடும் முடிவில் திடீர் மாற்றம் - வெளியான காரணம்!

வங்கிக் கிளைகளை மூடும் முடிவில் திடீர் மாற்றம் – வெளியான காரணம்!

-

பிராந்திய பகுதிகளில் மூட முடிவு செய்யப்பட்ட 8 வங்கிக் கிளைகளை தற்காலிகமாக மூட வேண்டாம் என வெஸ்ட்பேக் வங்கி முடிவு செய்துள்ளது.

இன்னும் சில தினங்களில் நாடாளுமன்றக் குழுவின் முன் வாக்குமூலங்களை வழங்கவுள்ள போதே அவர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

மூட முடிவு செய்த சில வங்கிக் கிளைகளை தற்காலிகமாக மூடாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக காமன்வெல்த் வங்கியும் சமீபத்தில் அறிவித்தது.

அவுஸ்திரேலியா முழுவதும் பிராந்திய பகுதிகளில் வங்கிக் கிளைகள் மூடப்பட்டமை தொடர்பில் பாராளுமன்ற விசாரணையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நஷ்டம் மற்றும் செயல்பாட்டு சிரமம் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் முதல் 80க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

செனட் நடத்தும் இந்த விசாரணையில் உண்மையான காரணங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இந்த நிலைமை ஏற்படுத்தும் விளைவு என்ன என்பது குறித்து ஆராயப்பட உள்ளது.

இறுதி அறிக்கை டிசம்பர் 1ம் தேதி வெளியிடப்படும்.

அவுஸ்திரேலியாவில் உள்ள அனைத்து 4 முக்கிய வங்கிகளும் தற்போது பிராந்திய பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட வங்கிக் கிளைகளை மூடியுள்ளதுடன், சில பகுதிகளில் ஒரு வங்கிக் கிளை கூட இல்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Latest news

சிறந்த சுற்றுலா நகரங்கள் விருதை வென்றன 3 விக்டோரியன் நகரங்கள்

விக்டோரியாவில் உள்ள மூன்று நகரங்கள் 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த சுற்றுலா நகரங்கள் விருதை வென்றுள்ளன.இந்த போட்டியில் விக்டோரியாவில் உள்ள 25 நகரங்கள் வருடாந்திர சிறந்த...

Influenza B வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் Influenza B வைரஸ் தொற்று சம்பவங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் Influenza-இற்கான ஒத்துழைப்பு...

டீன் ஏஜ் கணக்குகளுக்கு Meta எடுத்துள்ள புதிய நடவடிக்கை

இளைஞர்களின் சமூக ஊடக கணக்குகளின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்த Meta மற்றொரு நடவடிக்கையை எடுத்துள்ளது. இது இளைஞர்களைப் பாதுகாப்பற்ற அல்லது தேவையற்ற இணைப்புகளிலிருந்து பாதுகாக்கவும், அவர்கள் செய்தி...

E-scooter மற்றும் E-bikeகளுக்கு புதிய தடை

விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸில் ரயில்களில் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் மின்-சைக்கிள்களை எடுத்துச் செல்வதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்பட்ட தொடர்...

E-scooter மற்றும் E-bikeகளுக்கு புதிய தடை

விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸில் ரயில்களில் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் மின்-சைக்கிள்களை எடுத்துச் செல்வதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்பட்ட தொடர்...

பெண்களின் மாதவிடாய் தொடர்பான மறைக்கப்பட்ட ஆபத்துகள்

மாதவிடாய் நின்ற ஹார்மோன் சிகிச்சை (MHT) நிறுத்தப்பட்ட சில ஆண்டுகளில் பெண்களுக்கு எலும்பு முறிவு ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியப் பெண்கள்...