Newsமகா ராணி எலிசபெத் அணிந்த கோஹினூர் வைரம் பதித்த கிரீடம் தொடர்பில்...

மகா ராணி எலிசபெத் அணிந்த கோஹினூர் வைரம் பதித்த கிரீடம் தொடர்பில் வெளியான தகவல்

-

மறைந்த இங்கிலாந்து மகா ராணி இரண்டாம் எலிசபெத் அணிந்திருந்த கிரீடம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. இந்த கிரீடத்தின் மையப்பகுதியில் 21 கிராம் எடையுள்ள 105 கேரட் கோஹினூர் வைரம் பதிக்கப்பட்டிருந்தது. 

இந்த வைரம் இந்தியாவுக்கு சொந்தமானது, இதுவரை உலகளவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரங்களில் மிக விலை உயர்ந்தது இந்த வைரம்தான் என சொல்லப்படுகிறது. 

இந்த வைரத்தை இந்தியா மீட்டெடுக்க வேண்டும் என்ற குரல் எழுந்ததும் உண்டு. ஆனால் அதை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது என இங்கிலாந்து ஏற்கனவே கூறி விட்டது. இதையொட்டிய சர்ச்சை இன்னும் தொடர்கிறது. 

இந்த வைரம் பதித்த கிரீடத்தை ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு பிறகு அந்த நாட்டின் புதிய ராணியாக மகுடம் சூட்டப்போகும் கமிலா பார்க்கர் அணிவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் அப்படி இல்லை. மே மாதம் 6-ம் திகதி கணவர் மன்னர் மூன்றாம் சார்லசுடன் மகுடம் சூடப்போகும் ராணி கமிலா பார்க்கர், தனது மாமியார் ராணி இரண்டாம் எலிசபெத் அணிந்த அந்த கிரீடத்தை அணியப்போவதில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதற்கு பதிலாக ராணி மேரி அணிந்த கிரீடத்தைத்தான் கமிலா தேர்ந்தெடுத்துள்ளார் என அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதில் கோஹினூர் வைரம் கிடையாது. அதே போன்ற வேறொரு வைரம்தான் அதில் பதிக்கப்பட்டுள்ளது.

ராணி கமிலாவின் தலையை அலங்கரிப்பதற்காக அந்த கிரீடம் தற்போது, லண்டன் டவர் கோட்டை கண்காட்சியில் இருந்து திரும்பப்பெறப்பட்டுள்ளது. 

சமீபத்திய வரலாற்றில் ராணி மேரியின் கிரீடத்தை புதிய ராணி ஒருவர் மகுடம் சூட்டுவதற்கு தேர்ந்தெடுத்திருப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. 

முதலில் மன்னர் சார்லஸின் பாட்டியின் கிரீடத்தைத்தான் ராணி கமிலா பார்க்கர் அணிவார் என ஊகங்கள் எழுந்தன. 

ஆனால் கடைசியில் ராணி மேரியின் கிரீடத்தை ராணி கமிலா பார்க்கர் தேர்ந்தெடுத்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியர்களை மருத்துவமனையில் சேர்க்கும் பெரும்பாலான விபத்துகள்

ஜூலை 2023 முதல் ஜூன் 2024 வரையிலான காலகட்டத்தில் 575,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் விபத்துக்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புதிய பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது. இந்த விபத்துகளில்,...

‘அறிவிக்கப்படாத ஒவ்வாமை’ காரணமாக திரும்ப அழைக்கப்பட்ட தயிர் பைகள்

Woolworths, Coles மற்றும் ஐஜிஏ கடைகளில் விற்கப்பட்ட தயிர் பைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அறிவிக்கப்படாத ஒவ்வாமை காரணமாக இந்த திரும்பப் பெறுதல் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 12 அல்லது 13...

உலகின் சிறந்த நீதிபதி காலமானார்

"உலகின் சிறந்த நீதிபதி" என்று அழைக்கப்படும் அமெரிக்க நீதிபதி Frank Caprio காலமானார். கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் தனது 88ஆவது வயதில் இறந்தார். அமெரிக்காவின் Rhode தீவில்...

வெடிக்கும் நட்சத்திரத்தின் உட்புறத்தை முதன்முதலில் பார்த்த விஞ்ஞானிகள்

வெடிக்கும் நட்சத்திரத்தின் (supernova) உட்புறத்தைக் கவனிப்பதில் விஞ்ஞானிகள் முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளனர். நட்சத்திரங்கள் எரிபொருள் தீர்ந்து போகும் வரை மில்லியன் கணக்கான முதல் டிரில்லியன் ஆண்டுகள்...

வெடிக்கும் நட்சத்திரத்தின் உட்புறத்தை முதன்முதலில் பார்த்த விஞ்ஞானிகள்

வெடிக்கும் நட்சத்திரத்தின் (supernova) உட்புறத்தைக் கவனிப்பதில் விஞ்ஞானிகள் முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளனர். நட்சத்திரங்கள் எரிபொருள் தீர்ந்து போகும் வரை மில்லியன் கணக்கான முதல் டிரில்லியன் ஆண்டுகள்...

TikTok-ஐ வேண்டாம் என்று கூறிய ட்ரம்ப் செய்த காரியம்

வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக TikTok கணக்கைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதி, TikTok-ஐ தடை செய்ய முன்பு முயன்றார். 2020 ஆம்...