Newsஇந்திய பெருங்கடலில் அதி பயங்கர சூறாவளி - சர்வதேச விண்வெளி மையம்...

இந்திய பெருங்கடலில் அதி பயங்கர சூறாவளி – சர்வதேச விண்வெளி மையம் எச்சரிக்கை!

-

இந்திய பெருங்கடலில் அதிபயங்கர வெப்பமண்டல சூறாவளி உருவாகியிருப்பதாக சர்வதேச விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. 

இந்த புயல் இந்தியப் பெருங்கடல் தீவான மொரிஷியசை நோக்கிச் செல்கிறது. புயல் இன்று மொரிஷியசை தாக்கும் எனவும், சூறாவளியால் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும், மொரிஷியஸ் நேரடி அச்சுறுத்தலை எதிர்க்கொண்டுள்ளதாகவும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

சூறாவளி புயல் ஒரு பயங்கரமான சூறாவளியாக தாக்கும், கனமழை வெள்ளம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

தென் ஆப்பிரிக்கா, மலாவி, ஜாம்பியா, போட்ஸ்வானா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளும் உச்சகட்ட தயார் நடவடிக்கையில் உள்ளன. 

புயலின் கண் பகுதி ஆக்ரோஷமாக நகர்ந்து செல்லும் காட்சியை சர்வதேச விண்வெளி மையம் வீடியோ பிடித்திருக்கிறது. ஆக்ரோஷ சூறாவளி புயல் நகரும் காட்சி வேகமாக பரவி வருகிறது.

எனவே, நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

Centrelink கட்டணங்களில் மாற்றம்

சர்வீசஸ் ஆஸ்திரேலியா வரும் டிசம்பரில் இருந்து சென்டர்லிங்க் கடன் திருப்பிச் செலுத்தும் முறைகளில் பல முக்கிய மாற்றங்களை வெளிப்படுத்தியுள்ளது. இதன்படி, கடனை திருப்பிச் செலுத்துவதற்கான வெளிநாட்டு நாணய...

இறந்தவர்களின் உடல்களுடன் வாழும் அதிசய மக்கள்

உலகில் நூற்றுக்கணக்கான தீவுகளில் மனிதனின் காலடி சுவடு படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். சாதாரண நிலப்பரப்பை விடவும் கடலும், நிலமும் சேர்ந்து காணப்படும் தீவுகளில் பல...

ஆஸ்திரேலியாவில் லட்சக்கணக்கானோருக்கு வேலை

சுமார் 10 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் முழுநேர வேலைவாய்ப்பைக் கண்டுள்ளனர், இது ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் முதல் முறையாக குறைந்த வேலையின்மை விகிதத்தை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் கிறிஸ்மஸ்...

ஆஸ்திரேலியாவில் கைவிடப்பட்ட இரத்தத்தைப் பயன்படுத்துவதற்கான புதிய திட்டம்

புதிய ஆராய்ச்சியின் படி, ஒவ்வொரு ஆண்டும் தூக்கி எறியப்படும் ஆயிரக்கணக்கான இரத்த பைகள் உயிர்களைக் காப்பாற்றத் திசைதிருப்பப்படலாம். நன்கொடையாளர்களிடமிருந்து கைவிடப்படும் இரத்தம் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி...

ஆஸ்திரேலியாவில் கைவிடப்பட்ட இரத்தத்தைப் பயன்படுத்துவதற்கான புதிய திட்டம்

புதிய ஆராய்ச்சியின் படி, ஒவ்வொரு ஆண்டும் தூக்கி எறியப்படும் ஆயிரக்கணக்கான இரத்த பைகள் உயிர்களைக் காப்பாற்றத் திசைதிருப்பப்படலாம். நன்கொடையாளர்களிடமிருந்து கைவிடப்படும் இரத்தம் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி...

ஆஸ்திரேலியாவில் ஒரு மாநிலத்திற்கு 100 இலவச குழந்தை பராமரிப்பு மையங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசாங்கத்தால் கட்டப்படும் என உறுதியளிக்கப்பட்ட 100 குழந்தை பராமரிப்பு மையங்களில் முதலாவது மையம் திறக்கப்பட்டுள்ளது. தாய் மற்றும் தந்தை இருவரும் பணிபுரியும்...