Newsஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - டிரம்பிற்கு போட்டியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த...

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – டிரம்பிற்கு போட்டியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கோடீஸ்வரர்

-

அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று ஜனாதிபதியாக பதவியேற்றார். 

அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடையவுள்ளதால், இப்போதே ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அமெரிக்காவில் பரவத் தொடங்கிவிட்டது. 

2024 ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் மீண்டும் ஜோ பைடனே போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதே போல, குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மறுபடியும் களம் காண்பார் என்றே சில தினங்களுக்கு முன்பு வரை கூறப்பட்டு வந்தது. 

குடியரசுக் கட்சியில் இருந்து வேறு எவரும் தன்னை எதிர்த்து வேட்பாளர் போட்டியில் நின்றுவிடக் கூடாது என்பதில் டிரம்ப்பும் கவனமாக இருந்தார். 

இதற்காக, குடியரசுக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரிடம் பேசி டிரம்ப் தனக்கு ஆதரவை திரட்டி வருகிறார். 

இந்தநிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

குடியரசு கட்சி சார்பில் போட்டியிடபோவதாக ஏற்கனவே டிரம்ப் அறிவித்த நிலையில் விவேக்கும் களமிறங்கவுள்ளது அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பே போட்டியிடுவார் எனக் கூறப்பட்ட சமயத்தில், அக்கட்சியில் இருந்தே அவருக்கு எதிராக பலரும் உருவாகி வருவது டிரம்புக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தற்போது தயாராகி வரும் விவேக் ராமசாமி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மிகப்பெரிய கோடீஸ்வரர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

அமெரிக்க குடியுரிமை வாங்க ஒரு சிறப்பு வாய்ப்பு.

அமெரிக்க குடியுரிமையை 5 மில்லியன் டாலர்களுக்கு விற்க நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். இலவச அமெரிக்க குடியுரிமை வழங்குவதற்காக 'Green card' லாட்டரி...

ஆஸ்திரேலிய உருக்கு இரும்பு(Steel) வரி பற்றிய மற்றொரு விவாதம்

அமெரிக்கா விதித்துள்ள வரிகளால் ஆஸ்திரேலியாவின் உருக்கு இரும்பு(Steel) தொழிலுக்கு ஏற்படும் சேதத்தைக் குறைக்கும் நோக்கில் மற்றொரு விவாதம் நடத்தப்பட்டுள்ளது. இது அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட்...

விக்டோரியன் போக்குவரத்துக்கு மேலும் 7 பில்லியன் டாலர்களை அறிவித்தார் பிரதமர்

விக்டோரியாவில் போக்குவரத்துத் துறையில் மேம்பாட்டுப் பணிகளுக்காக ஆளும் தொழிற்கட்சி அரசாங்கம் 7 ​​பில்லியன் டாலர்களை ஒதுக்க முடிவு செய்துள்ளது. மெல்போர்ன் விமான நிலைய இணைப்பு ரயில் திட்டத்திற்கு...

வேலைநிறுத்தங்களால் Woolworths-இன் வருவாய் சரிவு

ஆஸ்திரேலியாவின் முன்னணி பல்பொருள் அங்காடி சங்கிலிகளில் ஒன்றான Woolworths, தொழிலாளர் வேலைநிறுத்தங்கள் காரணமாக அதன் வருவாய் சரிவைக் கண்டுள்ளது. சமீபத்தில், Woolworths-ல் உள்ள ஒரு குழு ஊழியர்கள்...

வேலைநிறுத்தங்களால் Woolworths-இன் வருவாய் சரிவு

ஆஸ்திரேலியாவின் முன்னணி பல்பொருள் அங்காடி சங்கிலிகளில் ஒன்றான Woolworths, தொழிலாளர் வேலைநிறுத்தங்கள் காரணமாக அதன் வருவாய் சரிவைக் கண்டுள்ளது. சமீபத்தில், Woolworths-ல் உள்ள ஒரு குழு ஊழியர்கள்...

ஆஸ்திரேலிய பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள்

ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் நிலையாக இருந்தது. ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்ட சமீபத்திய அறிக்கை, ஜனவரி மாத பணவீக்கம் 2.5 சதவீதமாக இருந்ததைக் காட்டுகிறது. இருப்பினும்,...