Newsஜப்பான் கடற்கரையில் கிடந்த உலோகப் பந்தால் பரபரப்பு

ஜப்பான் கடற்கரையில் கிடந்த உலோகப் பந்தால் பரபரப்பு

-

ஜப்பான் கடற்கரையில் மர்ம உலோகத்தாலான மிகப்பெரிய பந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் ஹமாமத்சு நகரத்திலுள்ள என்ஷூ கடற்கரையில் உலோகத்தால் ஆன மிகப்பெரிய உருண்டை வடிவ பந்து கிடந்துள்ளது. இந்த மர்ம பந்தை உள்ளூர்வாசியான பெண் ஒருவர் செவ்வாய்க்கிழமை காலை பார்த்து உடனடியாக இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

கடற்கரையில் கிடந்த அந்த மர்ம பந்து இரும்பாலானதும், 1.5 மீட்டர் விட்டமும், துருப்பிடித்தும் இருந்துள்ளது. மேலும், அதன் இருபக்கமும் சிறு இணைப்பு வளையமும் உள்ளது. 200 மீட்டர் மூடப்பட்ட பகுதியான அந்த பந்தில் வெடிக்கும் காரணிகள் ஏதேனும் இருக்கின்றதா என்பதை பாதுகாப்பு உடைகளை அணிந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆனால், அதன் உள்ளே ஏதுமில்லை எனவும், வெற்றிடமாகத்தான் இருந்தது எனவும் அதனை எக்ஸ்ரே செய்த அதிகாரிகள் தெரிவித்ததாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், அந்த பந்தை மாலை 4 மணியளவில் அங்கிருந்து அகற்றிவிட்டபோதிலும் அது என்னவென்று இதுவரை தெரியவில்லை.

இதுகுறித்து ஆராய ஜப்பான் இராணுவம் மற்றும் கடற்கரை காவல்படைக்கு புகைப்படங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...