Newsஅமெரிக்காவில் விமான விபத்து - 5 பேர் பலி

அமெரிக்காவில் விமான விபத்து – 5 பேர் பலி

-

அமெரிக்காவின் அர்கான்சாஸ் மாகாணத்தில் புலஸ்கி கவுன்டி பகுதியில் பில் மற்றும் ஹிலாரி கிளிண்டன் தேசிய விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சென்ற இரட்டை என்ஜின் கொண்ட, சிறிய ரக தனியார் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. 

அந்த விமானம் ஒஹியோ மாகாணத்தில் உள்ள ஜான் கிளென் கொலம்பஸ் சர்வதேச விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. 

குறித்த விமானத்தில் மொத்தமாக 5 பேர் பயணித்துள்ளனர். 

விமானம் புறப்பட்டு சில மைல்கள் தொலைவுக்கு சென்றதும் திடீரென விபத்தில் சிக்கியுள்ளது. 

குறித்த விபத்து நடந்த இடத்திற்கு லிட்டில் ராக் பகுதியின் பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சம்பவ இடத்தில் உடனடியாக சென்றுள்ளனர். 

விபத்தில் சிக்கிய அனைவரும் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, விபத்து குறித்த விசாரணையை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

விமான விபத்து குறித்த முதற்கட்ட விசாரணை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

மிகவும் மோசமாகிவரும் போப்பின் உடல்நிலை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 88 வயதான போப் பிரான்சிஸுக்கு சுவாசிக்க உதவும்...