Sportsசன்ரைசர்ஸ் அணிக்கு புதிய தலைவர் நியமனம் - IPL 2023

சன்ரைசர்ஸ் அணிக்கு புதிய தலைவர் நியமனம் – IPL 2023

-

ஐ.பி.எல். 2023 கிரிக்கெட் போட்டிக்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய தலைவராக தென் ஆப்பிரிக்க அணியின் வீரர் மார்க்ரம் இன்று(23) நியமிக்கப்பட்டுள்ளார். 

சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா T20 போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்குத் தலைவராக மார்க்ரம இருந்தவர்.

இதன் காரணமாக ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியிலும் சன்ரைசர்ஸ் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

கடந்த இரண்டு ஐபிஎல் சீசனில் 28 ஆட்டங்களில் 9 வெற்றிகள், 18 தோல்விகள், ஒரு டை என பலவீனமான அணியாகவே அந்த அணி கருதப்பட்டது. 

இதையடுத்து சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி வெளியேறினார். அதன் பிறகு பிரபல முன்னாள் வீரர் பிரையன் லாரா, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 

கடந்த ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் கேப்டனாக இருந்த கேன் வில்லியம்சன் இந்த ஆண்டு குஜராத் அணியில் விளையாடவுள்ளார். 

28 வயதான மார்க்ரம், தென்னாப்பிரிக்க அணிக்காக 33 டெஸ்ட், 47 ஒருநாள், 31 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

காப்பீடு பெறுவதற்காக மனைவியைக் கொன்ற கணவன்

குயின்ஸ்லாந்து பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த வழக்கில் புதிய துயரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான Graeme Davidson மற்றும் அவரது...

மூன்று விதமான மாடல் தொலைபேசிகளில் இனி Whatsapp வேலை செய்யாது!

உலகளவில் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட Whatsapp, சில மணி நேரங்களுக்குள் மூன்று பிரபலமான தொலைபேசிகளில் வேலை செய்வதை நிறுத்திவிட்டது. உலகின் மிகவும் பிரபலமான செய்தியிடல்...

ஆஸ்திரேலியாவில் உணவுக்காக பணத்தை மிச்சப்படுத்துவதற்கான வழி

ஆஸ்திரேலியர்கள் காலாவதி திகதிக்கு அருகில் பொருட்களை வாங்குவதன் மூலம் ஆண்டுக்கு $315 சேமிப்பதாக கூறப்படுகிறது. பல்பொருள் அங்காடிகள் அதற்காக $5.3 பில்லியன் செலவிடுகின்றன. பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் பணத்தை மிச்சப்படுத்துவதற்காக...

தாய்லாந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய விதிகள்

ஆஸ்திரேலியர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த தாய்லாந்து, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, புதிய விதிகளின் கீழ், மே 1 முதல், அனைத்து வெளிநாட்டு...

தாய்லாந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய விதிகள்

ஆஸ்திரேலியர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த தாய்லாந்து, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, புதிய விதிகளின் கீழ், மே 1 முதல், அனைத்து வெளிநாட்டு...

Refugee Visa விண்ணப்பங்களை கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசு முடிவு

இங்கிலாந்தில் புகலிடம் கோரும் பல நாடுகளின் விசா விண்ணப்பங்களை கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் இந்தச் சட்டத்தை...