Sportsமும்பை மைதானத்தில் சச்சினுக்கு எழுப்பப்பட்ட சிலை - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

மும்பை மைதானத்தில் சச்சினுக்கு எழுப்பப்பட்ட சிலை – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

-

2023-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் வரும் மார்ச் 31-ம் திகதி முதல் தொடங்கி மே 28-ம் திகதி வரை நடைபெறவுள்ளது. 

லீக் போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டிருந்தது. கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தலால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் போட்டிகள் நடைபெற்ற சூழலில், இந்த முறை அனைத்து அணிகளும் தங்களது ஹோம் மைதானத்தில் விளையாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, அனைத்து ரசிகர்களும் உற்சாகத்துடன் எதிர் பார்த்துள்ளனர். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அதாவது கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு மிகப்பெரிய சிலை ஒன்றை வான்கடே மைதானத்தில் நிறுவ உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. 

சச்சின் டெண்டுல்கர் வரும் ஏப்ரல் 24-ம் திகதியன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.

எனவே அவருக்கு நினைவுப்பரிசாக இருக்கும் வகையில் இந்த சிலையை திறக்கவுள்ளனர். வான்கடே மைதானத்தில் தான் சச்சின் தனது கடைசி போட்டியில் விளையாடினார்.

இதற்காக அங்கு ஏற்கனவே சச்சின் டெண்டுல்கரின் பெயரில் பெவிலியன் இருக்கும் சூழலில் தற்போது கூடுதல் சிறப்பை சேர்க்கவுள்ளனர். 

ஏப்ரல் 24-ம் திகதிக்குள் ஏற்பாடுகள் முடிந்துவிட்டால் ஐபிஎல் தொடரின் போது சிலை திறப்பு விழா நடைபெறும். 

இல்லையென்றால் அக்டோபரில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலக கிண்ண தொடரின் போது இந்த விழாவை நடத்துவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. 

கிரிக்கெட் கடவுள் என ரசிகர்களால் பாராட்டப்படும் சச்சின் தனது கிரிக்கெட் பயணத்தில் 200 டெஸ்ட் போட்டிகள், 463 ஒருநாள் போட்டிகள், மற்றும் ஒரே ஒரு T20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 

அனைத்து வடிவ கிரிக்கெட்டையும் சேர்த்து மொத்தமாக 34,357 ரன்களை விளாசியுள்ளார். இதில் 100 சதங்கள் என்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகின்றது.

Latest news

ரத்து செய்யப்பட்ட சந்திப்பு – அல்பானீஸிடம் சொல்லாமல் வெளியேறும் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இடையேயான சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. கனடாவில் நடைபெறும் G7 உச்சிமாநாட்டிலிருந்து டொனால்ட் டிரம்ப் முன்கூட்டியே வெளியேறுவார்...

NSW-வில் விபத்துக்குள்ளான ஒரு இலகுரக விமானம்

நியூ சவுத் வேல்ஸில் நடந்த ஒரு இலகுரக விமான விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து, மாநிலத்தில் உள்ள Parkes-இற்கு மேற்கே சுமார் 140 கிலோமீட்டர் தொலைவில்...

80வது திருமண ஆண்டு விழாவைக் கொண்டாடிய ஆஸ்திரேலியாவின் மூத்த தம்பதியினர்

ஆஸ்திரேலியாவின் சாதனை புத்தகங்களில் வயதான திருமணமான தம்பதியினர் தங்கள் 80வது திருமண ஆண்டு விழாவைக் கொண்டாடினர். Delma Joyce Earsman-உம் Francis Joseph Murray-உம் 1939 ஆம்...

No Fly List-இல் மேலும் 36 நாடுகளை சேர்த்துள்ள டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட உள் ஆவணம், "பறக்க தடை பட்டியலில்" (No Fly List) 36 நாடுகளைச் சேர்க்க திட்டமிட்டுள்ளது. விமானப் பயணம் தடைசெய்யப்பட்ட...

மெல்பேர்ண் நகர சபை மீது அதிக பார்க்கிங் கட்டணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு

மெல்பேர்ண் நகர சபை ஒன்று, அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட பார்க்கிங் அபராதமாக மில்லியன் கணக்கான டாலர்களை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இது நிர்வாகப் பிழையால்...

80வது திருமண ஆண்டு விழாவைக் கொண்டாடிய ஆஸ்திரேலியாவின் மூத்த தம்பதியினர்

ஆஸ்திரேலியாவின் சாதனை புத்தகங்களில் வயதான திருமணமான தம்பதியினர் தங்கள் 80வது திருமண ஆண்டு விழாவைக் கொண்டாடினர். Delma Joyce Earsman-உம் Francis Joseph Murray-உம் 1939 ஆம்...