Sportsமும்பை மைதானத்தில் சச்சினுக்கு எழுப்பப்பட்ட சிலை - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

மும்பை மைதானத்தில் சச்சினுக்கு எழுப்பப்பட்ட சிலை – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

-

2023-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் வரும் மார்ச் 31-ம் திகதி முதல் தொடங்கி மே 28-ம் திகதி வரை நடைபெறவுள்ளது. 

லீக் போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டிருந்தது. கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தலால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் போட்டிகள் நடைபெற்ற சூழலில், இந்த முறை அனைத்து அணிகளும் தங்களது ஹோம் மைதானத்தில் விளையாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, அனைத்து ரசிகர்களும் உற்சாகத்துடன் எதிர் பார்த்துள்ளனர். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அதாவது கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு மிகப்பெரிய சிலை ஒன்றை வான்கடே மைதானத்தில் நிறுவ உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. 

சச்சின் டெண்டுல்கர் வரும் ஏப்ரல் 24-ம் திகதியன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.

எனவே அவருக்கு நினைவுப்பரிசாக இருக்கும் வகையில் இந்த சிலையை திறக்கவுள்ளனர். வான்கடே மைதானத்தில் தான் சச்சின் தனது கடைசி போட்டியில் விளையாடினார்.

இதற்காக அங்கு ஏற்கனவே சச்சின் டெண்டுல்கரின் பெயரில் பெவிலியன் இருக்கும் சூழலில் தற்போது கூடுதல் சிறப்பை சேர்க்கவுள்ளனர். 

ஏப்ரல் 24-ம் திகதிக்குள் ஏற்பாடுகள் முடிந்துவிட்டால் ஐபிஎல் தொடரின் போது சிலை திறப்பு விழா நடைபெறும். 

இல்லையென்றால் அக்டோபரில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலக கிண்ண தொடரின் போது இந்த விழாவை நடத்துவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. 

கிரிக்கெட் கடவுள் என ரசிகர்களால் பாராட்டப்படும் சச்சின் தனது கிரிக்கெட் பயணத்தில் 200 டெஸ்ட் போட்டிகள், 463 ஒருநாள் போட்டிகள், மற்றும் ஒரே ஒரு T20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 

அனைத்து வடிவ கிரிக்கெட்டையும் சேர்த்து மொத்தமாக 34,357 ரன்களை விளாசியுள்ளார். இதில் 100 சதங்கள் என்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகின்றது.

Latest news

அண்டார்டிகாவில் மற்றொரு திகிலூட்டும் கண்டுபிடிப்பு

அண்டார்டிகாவின் ஹெக்டோரியா பனிப்பாறை இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட 50% உருகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட வேகமான பின்வாங்கலாகும். சமீபத்திய ஆய்வின்படி, ஹெக்டோரியா பனிப்பாறை...

Streaming சேவை வழங்குநர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து புதிய விதிகள்

ஆஸ்திரேலியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்ட சர்வதேச Streaming சேவை வழங்குநர்களுக்கு புதிய சட்டங்களை அமல்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. ஆஸ்திரேலிய நுகர்வோரிடமிருந்து கிடைக்கும்...

குயின்ஸ்லாந்தில் நோய்வாய்ப்பட்டுள்ள 2,000க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள்

அரசாங்கத்துடனான மூன்று வருட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, குயின்ஸ்லாந்தில் உள்ள 2,000க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநர்கள் அடுத்த வெள்ளிக்கிழமை தொழில்துறை நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். ஊதிய...

Knight ஆனார் Sir David Beckham

இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் David Beckham-இற்கு Knight பட்டம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விளையாட்டு மற்றும் சமூகப் பணிகளுக்கான அவரது சேவைகளுக்காக நேற்று வின்ட்சர்...

குழந்தைகளுக்கு மேலும் 2 சமூக ஊடக தளங்களுக்கு தடை

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 10 முதல் அமலுக்கு வரும் இந்தப் புதிய சட்டத்தில்...

ஆஸ்திரேலியாவில் 3.5 மில்லியன் மக்களைப் பாதிக்கும் ஒரு பிரச்சினை

ஆஸ்திரேலியாவில் சுமார் 20% குடும்பங்கள் தற்போது உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு வங்கியின் 2025 அறிக்கையின்படி, கடந்த ஆண்டு 3.5 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் உணவுப் பாதுகாப்பின்மையை...