Sportsமும்பை மைதானத்தில் சச்சினுக்கு எழுப்பப்பட்ட சிலை - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

மும்பை மைதானத்தில் சச்சினுக்கு எழுப்பப்பட்ட சிலை – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

-

2023-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் வரும் மார்ச் 31-ம் திகதி முதல் தொடங்கி மே 28-ம் திகதி வரை நடைபெறவுள்ளது. 

லீக் போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டிருந்தது. கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தலால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் போட்டிகள் நடைபெற்ற சூழலில், இந்த முறை அனைத்து அணிகளும் தங்களது ஹோம் மைதானத்தில் விளையாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, அனைத்து ரசிகர்களும் உற்சாகத்துடன் எதிர் பார்த்துள்ளனர். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அதாவது கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு மிகப்பெரிய சிலை ஒன்றை வான்கடே மைதானத்தில் நிறுவ உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. 

சச்சின் டெண்டுல்கர் வரும் ஏப்ரல் 24-ம் திகதியன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.

எனவே அவருக்கு நினைவுப்பரிசாக இருக்கும் வகையில் இந்த சிலையை திறக்கவுள்ளனர். வான்கடே மைதானத்தில் தான் சச்சின் தனது கடைசி போட்டியில் விளையாடினார்.

இதற்காக அங்கு ஏற்கனவே சச்சின் டெண்டுல்கரின் பெயரில் பெவிலியன் இருக்கும் சூழலில் தற்போது கூடுதல் சிறப்பை சேர்க்கவுள்ளனர். 

ஏப்ரல் 24-ம் திகதிக்குள் ஏற்பாடுகள் முடிந்துவிட்டால் ஐபிஎல் தொடரின் போது சிலை திறப்பு விழா நடைபெறும். 

இல்லையென்றால் அக்டோபரில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலக கிண்ண தொடரின் போது இந்த விழாவை நடத்துவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. 

கிரிக்கெட் கடவுள் என ரசிகர்களால் பாராட்டப்படும் சச்சின் தனது கிரிக்கெட் பயணத்தில் 200 டெஸ்ட் போட்டிகள், 463 ஒருநாள் போட்டிகள், மற்றும் ஒரே ஒரு T20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 

அனைத்து வடிவ கிரிக்கெட்டையும் சேர்த்து மொத்தமாக 34,357 ரன்களை விளாசியுள்ளார். இதில் 100 சதங்கள் என்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகின்றது.

Latest news

Bondi கடற்கரை தாக்குதலுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார் டொனால்ட் டிரம்ப்

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியர்கள் அதிர்ச்சியில் நிற்கும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது அன்பையும் பிரார்த்தனையையும்...

ஆங்கில மொழிப் பிரச்சினையால் ஆபத்தில் உள்ள நியூசிலாந்து பொதுப் போக்குவரத்து

புலம்பெயர்ந்த பேருந்து ஓட்டுநர்களுக்கான ஆங்கில மொழித் தேவைகளைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நியூசிலாந்தின் குடிவரவு அமைச்சர் நிராகரித்துள்ளார். தற்போதைய ஆங்கில மொழித் தரத்தை மாற்றும் திட்டம்...

விக்டோரியன் குழந்தைகள் ஆணையத்தின் புதிய தலைவர்

விக்டோரியன் குழந்தைகள் மற்றும் இளைஞர் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக Tracy Beaton நியமிக்கப்பட்டுள்ளார். குழந்தைகள் நலத் துறையில் பல தசாப்த கால அனுபவத்தைக் கொண்ட Beaton,...

பாலிக்கு போதைப்பொருள் கடத்திய ஆஸ்திரேலியருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை

சுற்றுலாத் தீவான பாலிக்கு கோகைன் கடத்தியதாக ஆஸ்திரேலிய குடிமகன் ஒருவருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள Cairns-ஐ சேர்ந்த 43...

பாலிக்கு போதைப்பொருள் கடத்திய ஆஸ்திரேலியருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை

சுற்றுலாத் தீவான பாலிக்கு கோகைன் கடத்தியதாக ஆஸ்திரேலிய குடிமகன் ஒருவருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள Cairns-ஐ சேர்ந்த 43...

ANU மனநல மருத்துவமனையில் கத்தியால் குத்திய சந்தேக நபருக்கு ஆயுள் தண்டனை

ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் (ANU) இரண்டு மாணவர்களை கத்தியால் கடுமையாக காயப்படுத்திய 26 வயதான Alex Ophel-ஐ, வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பான மனநல மருத்துவமனையில் அடைக்க...