Newsபேரழிவை ஏற்படுத்திய கொரோனா எங்கிருந்து உருவானது? - அமெரிக்கா வெளியிட்ட முக்கிய...

பேரழிவை ஏற்படுத்திய கொரோனா எங்கிருந்து உருவானது? – அமெரிக்கா வெளியிட்ட முக்கிய தகவல்

-

சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அங்கிருந்து உலகெங்கும் பரவி பேரழிவை ஏற்படுத்தியது. 

3 ஆண்டுகளை கடந்தும் இந்த உயிர்க்கொல்லி தொற்று எங்கிருந்து உருவானது என்பதில் தொடர்ந்து குழப்பமே நீடித்து வருகின்றது.

இந்த வைரஸ் சீனாவின் உகான் நகரில் உள்ள ஆய்வகத்தில் இருந்துதான் உருவானது என பரவலாக குற்றம் சாட்டப்பட்டாலும் அது உறுதிப்படுத்தப்படவில்லை. 

இது குறித்து அமெரிக்க மின்சக்தி அமைப்பு வெளியிட்ட ஆய்வு அறிக்கை ஒன்றில் ,‘சீனாவின் உகானில் உள்ள பரிசோதனை மையத்தில் நடந்த சிறிய விபத்து காரணமாகவே, கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டது’ என கூறப்பட்டுள்ளது. இது கொரோனா தொற்று எங்கிருந்து உருவானது? என்கிற விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது. 

இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் ஊடகவியலாளர்களை சந்தித்த தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பியிடம் ஆய்வறிக்கை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். 

அப்போது அவர், ‘உளவுத்துறையும், அரசின் பிற துறைகளும் இன்னும் அதை (கொரோனா எங்கிருந்து உருவானது என்பதை) ஆராய்ந்து கொண்டிருக்கின்றன.

இதுவரை உறுதியான முடிவு எதுவும் இல்லை. எனவே நான் சொல்வது கடினம். ஜனாதிபதி ஜோ பைடன் விரும்புவது உண்மைகளை மட்டுமே. 

முழு அரசாங்கமும் அந்த உண்மைகளை பெறுவதற்காக வடிவமைக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார். 

அதைத்தான் நாங்கள் செய்கிறோம். நாங்கள் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தல் பற்றிய சமீபத்திய வெளிப்பாடு

வரவிருக்கும் ஆஸ்திரேலிய கூட்டாட்சித் தேர்தல்களின் தேதிகள் குறித்து ஒரு புதிய வெளிப்பாடு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று...

விக்டோரியா காவல்துறைக்கு தொடர்ந்து அதிகரித்து வரும் நெருக்கடி

விக்டோரியா காவல் துறையின் தலைமை காவல் ஆணையர் ஷேன் பாட்டனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது காவல்துறை தொழிற்சங்க உறுப்பினர்களால் செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது. எதிர்காலத்தில் விக்டோரியா...

ஆஸ்திரேலிய குடியேறிகளுக்கு அரசியல்வாதியின் எச்சரிக்கை

ஆஸ்திரேலியா குடியேறிகளின் நடத்தையை கண்காணித்து வருவதாக முன்னாள் துணைப் பிரதமர் பர்னபி ஜாய்ஸ் கூறுகிறார். பல ஒப்பந்தங்களின் கீழ் வரும் குடியேறிகள் ஆஸ்திரேலியாவுக்கு வரும் இலக்கை நோக்கி...

ஆஸ்திரேலியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டிற்கு சிறந்த ஆண்டாக மாறியுள்ள 2024

ஆஸ்திரேலியாவில் பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டிற்கு 2024 சிறந்த ஆண்டாக மாறியுள்ளது. ஆஸ்திரேலியாவின் தூய்மையான எரிசக்தி கவுன்சிலின் சமீபத்திய அறிக்கை, கடந்த ஆண்டு ஏழு பெரிய...

விக்டோரியா காவல்துறைக்கு தொடர்ந்து அதிகரித்து வரும் நெருக்கடி

விக்டோரியா காவல் துறையின் தலைமை காவல் ஆணையர் ஷேன் பாட்டனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது காவல்துறை தொழிற்சங்க உறுப்பினர்களால் செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது. எதிர்காலத்தில் விக்டோரியா...

திரைப்பட தயாரிப்பாளர்களிடையே முன்னிலை வகிக்கும் ஆஸ்திரேலியா

திரைப்பட தயாரிப்பாளர்களிடையே மிகவும் பிரபலமான இடங்கள் குறித்து ஒரு புதிய ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, அந்த இடங்களில் சிட்னி ஓபரா ஹவுஸ் முதலிடத்தைப் பிடித்தது. அமெரிக்காவிற்கு வெளியே...