Newsதனது 5 குழந்தைகளை கொன்ற தாய் கருணைக்கொலை

தனது 5 குழந்தைகளை கொன்ற தாய் கருணைக்கொலை

-

பெல்ஜியம் நாட்டை சேர்ந்த  58 வயதான ஜெனிவில் லெர்மிட் என்ற பெண் நிவெல்லஸ் நகரில் வசித்து வந்த நிலையில், கடந்த 2007-ம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி தனது 5 குழந்தைகளையும் கொலை செய்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

3 முதல் 14 வயது வரை உள்ள ஒரு மகன் மற்றும் 4 மகள்களை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த  பின்னர் தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

5 குழந்தைகளை கொன்ற ஜெனிவில் லெர்மிட்டுக்கு கடந்த 2008-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட அவர் 2019-ம் ஆண்டு மனநல வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இதற்கிடையே தன்னை கருணைக்கொலை செய்யும் படி ஜெனிவில் லெர்மிட் கோரிக்கை விடுத்தார். பெல்ஜியத்தில் தாங்க முடியாத உளவியல் ரீதியில் பாதிக்கப்படுவதாக கருதப்பட்டால் கருணைக்கொலை முடிவை ஒரு நபர் தேர்ந்தெடுக்க அந்நாட்டு சட்டம் அனுமதிக்கிறது.

கருணைக்கொலை செய்ய கோரிக்கை விடுத்த ஜெனிவில் லெர்மிட் கருணைக்கொலை செய்யப்பட்டதை அவரது சட்டத்தரணி நிக்கோலஸ் கோஹன் உறுதிப்படுத்தினார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘ஜெனிவில் லெர்மிட், அவர் செய்த கொலைகளின் 16-வது நினைவு நாளில் அவரது விருப்பத்தின்படி கருணைக் கொலை செய்யப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு பல்வேறு கருத்துக்கள் சேகரிக்கப்பட்டன. அதன் பிறகே  அவர் கருணைக்கொலை செய்யப்பட்டார்’ என்றார்.

இவ்வழக்கு விசாரணையின் போது, ஜெனிவில் லெர்மிட் மனநல வைத்தியரை தவறாமல் சந்தித்து வந்தார் என்றும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டதால் சிறைக்கு அனுப்பக்கூடாது என்றும் அவரது சட்டத்திரணிகள் வாதிட்டனர். ஆனால் நீதிபதிகள் அதை ஏற்க மறுத்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

பயணம் முடித்து திரும்பிய ஆஸ்திரேலிய குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி

விக்டோரியாவில் ஒரு இளம் குடும்பம் வெளிநாட்டுப் பயணத்திலிருந்து திரும்பியபோது, ​​அவர்களது வாடகை வீட்டை ஒரு குழு வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்திருப்பதைக் கண்டனர். வீட்டு உரிமையாளர் சஞ்சய் குய்கெல் தனது...

ஆஸ்திரேலியாவில் LGBTQ பயணிகளுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் LGBTQ+ சமூகத்தினர் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று Equality Australia அறிவித்துள்ளது. பிறக்கும் போது ஒதுக்கப்பட்ட பாலினத்துடன் அவர்களின் பாஸ்போர்ட்டில் உள்ள...

ஆசிரியர்களை அவதூறு செய்யும் பெற்றோருக்கு $1000 அபராதம் விதிக்க வலியுறுத்தல்

விக்டோரியன் கல்வி புகார்கள் ஆணையத்தின் தலைவர், பள்ளி ஆசிரியர்களை ஆன்லைனில் அவதூறு செய்யும் பெற்றோருக்கு $1000 அபராதம் விதிக்க அழைப்பு விடுத்துள்ளார். பள்ளி ஊழியர்களிடம் பெற்றோர்கள் மற்றும்...

செவ்வாய் கிரகத்தில் மனித கண்ணுக்குத் தெரியும் Aurora கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் மனித கண்ணுக்குத் தெரியும் Auroraவை நாசா விஞ்ஞானிகள் குழு ஒன்று கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றுள்ளது. தூசி நிறைந்த செவ்வாய் கிரக வானத்தில் பச்சை நிற...

ஆசிரியர்களை அவதூறு செய்யும் பெற்றோருக்கு $1000 அபராதம் விதிக்க வலியுறுத்தல்

விக்டோரியன் கல்வி புகார்கள் ஆணையத்தின் தலைவர், பள்ளி ஆசிரியர்களை ஆன்லைனில் அவதூறு செய்யும் பெற்றோருக்கு $1000 அபராதம் விதிக்க அழைப்பு விடுத்துள்ளார். பள்ளி ஊழியர்களிடம் பெற்றோர்கள் மற்றும்...

நாடுகடத்தப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி தப்பியோட்டம்

நேற்று காலை ஆஸ்திரேலிய எல்லைப் படை அதிகாரிகளைத் தாக்கிய பின்னர் தப்பியோடிய ஒரு கைதியைத் தேடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிட்னி விமான நிலையத்திற்கு நாடு...