Newsதனது 5 குழந்தைகளை கொன்ற தாய் கருணைக்கொலை

தனது 5 குழந்தைகளை கொன்ற தாய் கருணைக்கொலை

-

பெல்ஜியம் நாட்டை சேர்ந்த  58 வயதான ஜெனிவில் லெர்மிட் என்ற பெண் நிவெல்லஸ் நகரில் வசித்து வந்த நிலையில், கடந்த 2007-ம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி தனது 5 குழந்தைகளையும் கொலை செய்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

3 முதல் 14 வயது வரை உள்ள ஒரு மகன் மற்றும் 4 மகள்களை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த  பின்னர் தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

5 குழந்தைகளை கொன்ற ஜெனிவில் லெர்மிட்டுக்கு கடந்த 2008-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட அவர் 2019-ம் ஆண்டு மனநல வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இதற்கிடையே தன்னை கருணைக்கொலை செய்யும் படி ஜெனிவில் லெர்மிட் கோரிக்கை விடுத்தார். பெல்ஜியத்தில் தாங்க முடியாத உளவியல் ரீதியில் பாதிக்கப்படுவதாக கருதப்பட்டால் கருணைக்கொலை முடிவை ஒரு நபர் தேர்ந்தெடுக்க அந்நாட்டு சட்டம் அனுமதிக்கிறது.

கருணைக்கொலை செய்ய கோரிக்கை விடுத்த ஜெனிவில் லெர்மிட் கருணைக்கொலை செய்யப்பட்டதை அவரது சட்டத்தரணி நிக்கோலஸ் கோஹன் உறுதிப்படுத்தினார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘ஜெனிவில் லெர்மிட், அவர் செய்த கொலைகளின் 16-வது நினைவு நாளில் அவரது விருப்பத்தின்படி கருணைக் கொலை செய்யப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு பல்வேறு கருத்துக்கள் சேகரிக்கப்பட்டன. அதன் பிறகே  அவர் கருணைக்கொலை செய்யப்பட்டார்’ என்றார்.

இவ்வழக்கு விசாரணையின் போது, ஜெனிவில் லெர்மிட் மனநல வைத்தியரை தவறாமல் சந்தித்து வந்தார் என்றும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டதால் சிறைக்கு அனுப்பக்கூடாது என்றும் அவரது சட்டத்திரணிகள் வாதிட்டனர். ஆனால் நீதிபதிகள் அதை ஏற்க மறுத்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

Virgin Australia-வில் செல்லப்பிராணிகளை கொண்டு வர $150 டிக்கெட்

Virgin Australia முதல் முறையாக தனது விமானங்களில் செல்லப்பிராணிகளை எடுத்துச் செல்ல அனுமதித்துள்ளது. வாடிக்கையாளர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து, Virgin Australia விமான நிறுவனம் பல ஆண்டுகளாக செல்லப்பிராணிகளை...

காஸாவில் 65,000-இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு – வீதிகளில் சிதறிக்கிடக்கும் உடல்கள்

2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் காசா - இஸ்ரேல் போர் நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மேலும்...

தைவானுக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு புதிய விதிகள்

தைவானுக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு புதிய நுழைவு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது ஒக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்று ஆஸ்திரேலியா Smart Traveller வலைத்தளம் தெரிவிக்கிறது. தொடர்புடைய...

அமேசானில் இருந்து 1800 வேலை வாய்ப்புகள்

கிறிஸ்துமஸ் சீசனுக்கு முன்பு 1,800 ஊழியர்களை பணியமர்த்த அமேசான் நடவடிக்கை எடுத்துள்ளது. சிட்னி, மெல்பேர்ண், பெர்த், பிரிஸ்பேர்ண், அடிலெய்டு, நியூகேஸில், கோல்ட் கோஸ்ட், கோஸ்ஃபோர்ட் மற்றும் கீலாங்...

தைவானுக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு புதிய விதிகள்

தைவானுக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு புதிய நுழைவு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது ஒக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்று ஆஸ்திரேலியா Smart Traveller வலைத்தளம் தெரிவிக்கிறது. தொடர்புடைய...

மெல்பேர்ண் தீ விபத்தில் இரு இளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒரு பெண் மீது குற்றம்

மெல்பேர்ணில் இரவு நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடந்த இந்த...