Newsதனது 5 குழந்தைகளை கொன்ற தாய் கருணைக்கொலை

தனது 5 குழந்தைகளை கொன்ற தாய் கருணைக்கொலை

-

பெல்ஜியம் நாட்டை சேர்ந்த  58 வயதான ஜெனிவில் லெர்மிட் என்ற பெண் நிவெல்லஸ் நகரில் வசித்து வந்த நிலையில், கடந்த 2007-ம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி தனது 5 குழந்தைகளையும் கொலை செய்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

3 முதல் 14 வயது வரை உள்ள ஒரு மகன் மற்றும் 4 மகள்களை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த  பின்னர் தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

5 குழந்தைகளை கொன்ற ஜெனிவில் லெர்மிட்டுக்கு கடந்த 2008-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட அவர் 2019-ம் ஆண்டு மனநல வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இதற்கிடையே தன்னை கருணைக்கொலை செய்யும் படி ஜெனிவில் லெர்மிட் கோரிக்கை விடுத்தார். பெல்ஜியத்தில் தாங்க முடியாத உளவியல் ரீதியில் பாதிக்கப்படுவதாக கருதப்பட்டால் கருணைக்கொலை முடிவை ஒரு நபர் தேர்ந்தெடுக்க அந்நாட்டு சட்டம் அனுமதிக்கிறது.

கருணைக்கொலை செய்ய கோரிக்கை விடுத்த ஜெனிவில் லெர்மிட் கருணைக்கொலை செய்யப்பட்டதை அவரது சட்டத்தரணி நிக்கோலஸ் கோஹன் உறுதிப்படுத்தினார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘ஜெனிவில் லெர்மிட், அவர் செய்த கொலைகளின் 16-வது நினைவு நாளில் அவரது விருப்பத்தின்படி கருணைக் கொலை செய்யப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு பல்வேறு கருத்துக்கள் சேகரிக்கப்பட்டன. அதன் பிறகே  அவர் கருணைக்கொலை செய்யப்பட்டார்’ என்றார்.

இவ்வழக்கு விசாரணையின் போது, ஜெனிவில் லெர்மிட் மனநல வைத்தியரை தவறாமல் சந்தித்து வந்தார் என்றும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டதால் சிறைக்கு அனுப்பக்கூடாது என்றும் அவரது சட்டத்திரணிகள் வாதிட்டனர். ஆனால் நீதிபதிகள் அதை ஏற்க மறுத்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

பேஜர்கள் – வோக்கி டோக்கிகளுக்கு தடை விதித்த கட்டார் ஏர்வேஸ்

லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள தலைநகர் பெய்ரூட்டில் அல்-ஷஹ்ரா மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்கள் திடீரென வெடித்துச் சிதறின. இதில்...

விக்டோரியாவிலிருந்து சர்வதேச பட்டதாரி மாணவர்களுக்கு அதிக வாய்ப்புகள்

விக்டோரியா மாநில அரசு சர்வதேச பட்டதாரி மாணவர்களுக்கு திறமையான பணிக்கான பிராந்திய விசா (துணைப்பிரிவு 491) அதிக வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, 2024-2025 நிதியாண்டில்,...

ஆஸ்திரேலியாவில் உணவு வீணாவதற்கான முக்கிய காரணங்கள் இதோ

லேபிளிங் தெளிவின்மை மற்றும் சில சேமிப்பு வழிமுறைகள் ஆஸ்திரேலியாவில் உணவு வீணாவதற்கு முக்கிய காரணம் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் மூன்றில்...

ஆஸ்திரேலியாவில் பணியிட துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய சட்டம்

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள், குற்றவாளிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதை எளிதாக்கும் நடவடிக்கை, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தில் கொண்டு வரப்படவுள்ள...

சிட்னி ரயில் தாமதத்தால் வரி செலுத்துவோருக்கு ஒரு நாளைக்கு $3.6 மில்லியன் செலவு

சிட்னியின் Southwest Metro பாதையின் கட்டுமானத் தாமதங்கள் ரயில் தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் தீர்க்கப்படும் வரை வரி செலுத்துவோருக்கு ஒரு நாளைக்கு $3.6 மில்லியன் செலவாகிறது என்று...

ஆஸ்திரேலியாவில் பணியிட துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய சட்டம்

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள், குற்றவாளிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதை எளிதாக்கும் நடவடிக்கை, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தில் கொண்டு வரப்படவுள்ள...