Newsதினமும் 22 மணி நேரம் தூங்கும் அரிய வகை நோயால் அவஸ்தைப்படும்...

தினமும் 22 மணி நேரம் தூங்கும் அரிய வகை நோயால் அவஸ்தைப்படும் பெண்!

-

பலருக்கு என்ன செய்தாலும் தூக்கம் வரவில்லை என்ற நிலை இருக்கும் நிலையில் 38 வயது பெண் ஒருவருக்கு எப்பொழுதும் தூக்கம் வந்து கொண்டே இருக்கிறது. அவர் ஒரு நாளுக்கு 22 மணி நேரம் தூங்குவதாக தகவல் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவை சேர்ந்த ஜோனா காக்ஸ் என்ற 38 வயது பெண் கடந்த சில ஆண்டுகளாக அதிக தூக்க பழக்கம் காரணமாக பகல் இரவு என முழுமையாக தூங்கிக் கொண்டிருப்பதாகவும் அவர் விழித்திருக்கும் நேரம் இரண்டு மணி நேரத்துக்கு குறைவானது என்றும் கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் அவருக்கு சோர்வு நோய் இருப்பதாக கூறப்பட்டது என்றும் அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்த நிலையில் தற்போது அவருக்கு என்ன நோய் இருக்கிறது என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. அவரது நோய்க்கு இன்னும் மருத்துவம் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு தான் முதலில் தான் மிகவும் சோர்வாக இருப்பதை ஜோனா உணர தொடங்கினார். இதனை அடுத்து அவருக்கு எப்போதுமே தூக்கம் வந்து கொண்டே இருந்தது. கார், கிளப், வேலை செய்யும் இடம் என எங்கும் அவர் தூங்கிக் கொண்டே இருந்தார். இதன் காரணமாக அவர் தான் வேலையை விட்டுவிட்டு வீட்டில் தூக்கம் வந்தபோதெல்லாம் தூங்கிக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட 20 மணி நேரம் முதல் 22 மணி நேரம் அவர் தூங்குவதை அடுத்து அவரது குடும்பத்தினர் அச்சமடைந்து மருத்துவரிடம் சிகிச்சைக்காக பரிந்துரைத்தனர்

சிகிச்சையில் அவருக்கு சாதாரணமான தூக்க கோளாறு என்று சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவருக்கான என்ன சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்களுக்கே தெரியவில்லை. இதனை அடுத்து தூக்க கிளினிக் ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டார். இருந்தும் அவருக்கு என்ன வகையான நோய் என்பதை மருத்துவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை.

கடந்த ஆறு ஆண்டுகளாக அவரது நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதாகவும் ஒரு சில மணி நேரங்கள் அவர் விழித்திருந்தாலே அது மிகப்பெரிய விஷயமாகவும் தெரிகிறது என்றும் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுக்கு தேவையானதை கூட செய்ய முடியவில்லை என்றும், தனக்கு ஒரு நல்ல மருத்துவர் தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். எப்போது தூங்கினேன்? எப்போது எழுந்தேன்? என்பதே எனக்கு தெரியவில்லை என்றும் இன்றைய தினம் என்ன? இன்று என்ன கிழமை என்று கூட எனக்கு தெரியாது என்றும் அந்த அளவுக்கு நான் என்னை மறந்து தூங்கிக் கொண்டிருக்கின்றேன் என்றும் அவர் தெரிவித்தார்

அவருக்கு வந்த இந்த அரிய நோய் அவரது குடும்பத்தினர்களை பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Latest news

ஆஸ்திரேலியா பயணித்துள்ள மன்னர் சார்லசின் ரகசிய மகனால் உருவாகியுள்ள ஆபத்து

பிரித்தானிய மன்னர் சார்லசும் அவரது மனைவியான கமீலாவும் ஆஸ்திரேலியாவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார்கள். இந்நிலையில், சார்லசின் ரகசிய மகன் என தன்னை அழைத்துக்கொள்ளும் நபரால் பிரச்சினை ஒன்று...

ஆஸ்திரேலியாவில் வீட்டு வாடகை உயர்வதற்கான காரணம் குறித்து புதிய அறிக்கை

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் வீட்டு வாடகைக்கு சொத்து உரிமையாளர்களே காரணம் என்ற கூற்று ஆஸ்திரேலியாவின் ரிசர்வ் வங்கியின் புதிய அறிக்கையால் நிராகரிக்கப்பட்டுள்ளது. வட்டி விகிதங்கள் மற்றும் வாடகைகள்...

விக்டோரியாவின் ஆசிரியர்களுக்கு வாரத்தில் 4 நாள் வேலை திட்டமா?

விக்டோரியா மாகாண முதல்வர் ஜெசிந்தா ஆலன் மற்றும் எதிர்க்கட்சிகள் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வாரத்தில் நான்கு நாள் வேலை வழங்க வேண்டும் என்ற திட்டத்தை நிராகரித்துள்ளன. ஆஸ்திரேலிய...

விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலவும் இடியுடன் கூடிய புயல் நிலை

இடியுடன் கூடிய புயல் நிலை காரணமாக விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். விக்டோரியா மாநில அவசர சேவை கடந்த 24...

பெர்த்தில் ஒரு வீட்டின் மீது மோதிய கார் – 3 பேர் பலி

இன்று காலை பெர்த்தின் புறநகர் பகுதியில் உள்ள வீட்டிற்கு அருகில் கார் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை 5.10 மணியளவில் Carlisle...

விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலவும் இடியுடன் கூடிய புயல் நிலை

இடியுடன் கூடிய புயல் நிலை காரணமாக விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். விக்டோரியா மாநில அவசர சேவை கடந்த 24...