Newsமர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த ரஷ்ய அறிவியல்...

மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த ரஷ்ய அறிவியல் விஞ்ஞானி

-

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனிடையே, கொரோனாவுக்கு எதிராக பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. 

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக நல்ல பயனை தந்தது. ரஷ்ய அரசாங்கம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை கண்டுபிடித்தது. 

வைரஸ் குறித்த ஆராய்ச்சியாளரான அண்டிரு கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி தடுப்பூசியை கண்டுபிடித்ததற்காக அவருடன் சேர்ந்து மொத்தம் 18 அறிவியல் விஞ்ஞானிகளுக்கு கடந்த 2021ம் ஆண்டு ரஷ்ய ஜனாதிபதி புதின் நாட்டின் உயரிய விருதை வழங்கி கௌரவித்தார்.

18 பேர் கொண்ட அந்த அறிவியல் விஞ்ஞானிகள் குழுவில் அண்டிரு பொட்டிக்வ் (வயது 47) என்ற விஞ்ஞானி இடம்பெற்றிருந்தார். 

இந்நிலையில், ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த குழுவில் இடம்பெற்றிருந்த அறிவியல் விஞ்ஞானி அண்டிரு இன்று (04) அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் அண்டிரு பெல்ட்டால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

இது குறித்து பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,

வாக்குவாதத்தின் போது அண்டிருவை பெல்ட்டால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு 29 வயதுடைய நபர் ஒருவர் தப்பியோடியுள்ளார். 

கொலை சம்பவத்துடன் தொடர்புடையவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இரண்டாம் கட்ட விசாரணையை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை

ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து தலிபான்கள்...

பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களால் விக்டோரியா அரசுக்கு மில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பு

மெல்பேர்ணின் CBD-யில் வாராந்திர பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களை ஒடுக்க விக்டோரியா காவல்துறை சுமார் $25 மில்லியன் செலவிட்டதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை விக்டோரியன்...

ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம்

ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, மார்ச் 2025 வரையிலான 12 மாதங்களில் ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 1.6 சதவீதம் அதிகரித்துள்ளது. மார்ச் 31, 2025...

ஆஸ்திரேலியர்களின் அன்றாட வாழ்க்கை குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

2025 ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியர்களின் அன்றாட வாழ்க்கை குறித்த புதிய அறிக்கையை மெல்பேர்ண் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியர்களின் வாழ்க்கை, சமூக உறவுகள்,...

திரும்பப் பெறப்பட்ட பல விபத்துகளுக்கு காரணமான ஒரு பிரபலமான தயாரிப்பு

ஆஸ்திரேலிய நுகர்வோர் கவுன்சில் (ACCC), Kmart மற்றும் Target கடைகளில் விற்கப்படும் ஒரு பொருளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. அதன்படி, அந்த கடைகளில் விற்கப்படும் Portable Blender-ஐ...

போக்குவரத்து விதிமீறல்களுக்காக நூற்றுக்கணக்கான விக்டோரியர்களுக்கு அபராதம்

விக்டோரியாவில் மின்-சைக்கிள்களைப் பயன்படுத்தியதற்காக நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் Operation Consider-இன் கீழ் தொடங்கப்பட்ட e-bike, push bike மற்றும் petrol scooter...