Cinema8 வயதில் பாலியல் ரீதியாக துன்புறுத்திய தந்தை - நடிகை குஷ்பு...

8 வயதில் பாலியல் ரீதியாக துன்புறுத்திய தந்தை – நடிகை குஷ்பு பரபரப்பு கருத்து

-

இந்திய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக சமீபத்தில் பொறுப்பேற்ற பா.ஜ., நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு, தனது சிறு வயது வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். ‘வி த வுமன்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று குஷ்பு பேசியதாவது,

ஒரு குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்பட்டால், அது குழந்தையின் வாழ்நாள் முழுவதும் வடுவாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அது பெண்ணா, பையனா என்பதில் பிரச்னை இல்லை.

என் அம்மாவுக்கு மிகவும் மோசமான ஒரு திருமண வாழ்க்கையே இருந்தது. மனைவியை அடிப்பதும், குழந்தைகளை அடிப்பதும், தன் ஒரே மகளை பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்வதும் தன் பிறப்புரிமை என நினைத்துக் கொண்டிருந்தவர் தான் அவர். எனக்கு 8 வயதாகும் போது துஷ்பிரயோகம் செய்யத் துவங்கினார். அவருக்கு எதிராகத் துணிச்சலாக நான் பேசிய போது எனக்கு வயது 15. நான் எனக்காக ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நேரம் வந்தது.

நான் ஏதாவது சொன்னால் எனது குடும்ப உறுப்பினர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவார்கள் என்ற அச்சம் எனக்கு இருந்தது. இதன் காரணமாகவே பல ஆண்டுகளாக நான் அமைதியாக இருந்தேன். நான் இதைச் சொன்னால் எனது அம்மாவே என்னை நம்ப மாட்டாரோ என்ற அச்சம் எனக்கு இருந்தது.

ஏனென்றால் அவரை பொறுத்தவரை என்ன நடந்தாலும் கணவர் தான் தெய்வம் என்ற மனப்பான்மையிலேயே இருந்தார். எனக்கு 15 வயதாகும் போது இனியும் தாங்க முடியாது என்று முடிவு செய்து அவருக்கு எதிராகப் பேச ஆரம்பித்தேன்.

எனக்கு அப்போது 16 வயது கூட ஆகியிருக்காது.. அவர் எங்களை விட்டுச் சென்றார். அப்போது எங்களிடம் எதுவுமே இல்லை. அடுத்த வேலை உணவுக்கே நாங்கள் என்ன செய்வதென்று தெரியாத ஒரு நிலையிலேயே இருந்தேன். குழந்தைப் பருவம் எனக்கு மிக மிகக் கடினமான ஒன்றாகவே இருந்தது.

குழந்தையாக இருந்த போது நான் பல பிரச்னைகளை எதிர்கொண்டிருக்கிறேன். ஒரு கட்டத்தில் எனக்குத் துணிச்சல் வந்தது. என்ன நடந்தாலும் துணிச்சலாகப் போராட வேண்டும் என்ற மனப்பான்மை வந்தது. இவ்வாறு குஷ்பு கூறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

ஈஸ்டர் வார இறுதியில் பரபரப்பாக இருக்கும் விமான நிலையங்கள்

ஈஸ்டர் நீண்ட வார இறுதி காரணமாக ஆஸ்திரேலிய விமான நிலையங்கள் மிகவும் பரபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 9 முதல் 29 வரை சுமார்...

ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படும் விலங்கு பெயர்கள்

ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான செல்லப் பெயராக கிரவுன் வாக்களிக்கப்பட்டுள்ளது. இது பூனைகள் மற்றும் நாய்கள் இரண்டிற்கும் பிரபலமான பெயராக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய செல்லப்பிராணி காப்பீட்டு நிறுவனமான...

காவல்துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் AFL வீரர்

ஆஸ்திரேலிய முன்னாள் கால்பந்து வீரர் ரிக்கி நிக்சன் தனது பேஸ்புக் கணக்கில் பதிவுகள் மூலம் காவல்துறையினரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை அவர் தனது...

மின்சார மிதிவண்டிகளை அதிகம் பயன்படுத்தும் குழந்தைகள் – உயரும் விபத்துக்கள்

ஆஸ்திரேலியாவில் மாற்றியமைக்கப்பட்ட மின்சார மிதிவண்டிகளைப் பயன்படுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. இந்த மிதிவண்டியை மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை...

காவல்துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் AFL வீரர்

ஆஸ்திரேலிய முன்னாள் கால்பந்து வீரர் ரிக்கி நிக்சன் தனது பேஸ்புக் கணக்கில் பதிவுகள் மூலம் காவல்துறையினரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை அவர் தனது...

மின்சார மிதிவண்டிகளை அதிகம் பயன்படுத்தும் குழந்தைகள் – உயரும் விபத்துக்கள்

ஆஸ்திரேலியாவில் மாற்றியமைக்கப்பட்ட மின்சார மிதிவண்டிகளைப் பயன்படுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. இந்த மிதிவண்டியை மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை...