Cinema8 வயதில் பாலியல் ரீதியாக துன்புறுத்திய தந்தை - நடிகை குஷ்பு...

8 வயதில் பாலியல் ரீதியாக துன்புறுத்திய தந்தை – நடிகை குஷ்பு பரபரப்பு கருத்து

-

இந்திய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக சமீபத்தில் பொறுப்பேற்ற பா.ஜ., நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு, தனது சிறு வயது வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். ‘வி த வுமன்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று குஷ்பு பேசியதாவது,

ஒரு குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்பட்டால், அது குழந்தையின் வாழ்நாள் முழுவதும் வடுவாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அது பெண்ணா, பையனா என்பதில் பிரச்னை இல்லை.

என் அம்மாவுக்கு மிகவும் மோசமான ஒரு திருமண வாழ்க்கையே இருந்தது. மனைவியை அடிப்பதும், குழந்தைகளை அடிப்பதும், தன் ஒரே மகளை பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்வதும் தன் பிறப்புரிமை என நினைத்துக் கொண்டிருந்தவர் தான் அவர். எனக்கு 8 வயதாகும் போது துஷ்பிரயோகம் செய்யத் துவங்கினார். அவருக்கு எதிராகத் துணிச்சலாக நான் பேசிய போது எனக்கு வயது 15. நான் எனக்காக ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நேரம் வந்தது.

நான் ஏதாவது சொன்னால் எனது குடும்ப உறுப்பினர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவார்கள் என்ற அச்சம் எனக்கு இருந்தது. இதன் காரணமாகவே பல ஆண்டுகளாக நான் அமைதியாக இருந்தேன். நான் இதைச் சொன்னால் எனது அம்மாவே என்னை நம்ப மாட்டாரோ என்ற அச்சம் எனக்கு இருந்தது.

ஏனென்றால் அவரை பொறுத்தவரை என்ன நடந்தாலும் கணவர் தான் தெய்வம் என்ற மனப்பான்மையிலேயே இருந்தார். எனக்கு 15 வயதாகும் போது இனியும் தாங்க முடியாது என்று முடிவு செய்து அவருக்கு எதிராகப் பேச ஆரம்பித்தேன்.

எனக்கு அப்போது 16 வயது கூட ஆகியிருக்காது.. அவர் எங்களை விட்டுச் சென்றார். அப்போது எங்களிடம் எதுவுமே இல்லை. அடுத்த வேலை உணவுக்கே நாங்கள் என்ன செய்வதென்று தெரியாத ஒரு நிலையிலேயே இருந்தேன். குழந்தைப் பருவம் எனக்கு மிக மிகக் கடினமான ஒன்றாகவே இருந்தது.

குழந்தையாக இருந்த போது நான் பல பிரச்னைகளை எதிர்கொண்டிருக்கிறேன். ஒரு கட்டத்தில் எனக்குத் துணிச்சல் வந்தது. என்ன நடந்தாலும் துணிச்சலாகப் போராட வேண்டும் என்ற மனப்பான்மை வந்தது. இவ்வாறு குஷ்பு கூறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

கொலம்பியாவில் விமானம் விபத்து – 15 பேர் பலி

கொலம்பியாவின் Norte de Santander மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புறத்தில் நேற்று ஒரு விமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அந்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர்...

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சம்பளம் மற்றும் சொத்து தீர்வுகளை தாமதப்படுத்தும் RBA

ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கியில் (RBA) ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறால், ஆஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் சொத்து கொடுப்பனவுகள் தாமதமாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 10...

இந்தியாவில் நிபா குறித்து ஆஸ்திரேலியாவின் தீவிர கவலை

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் தொற்று இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆசியா முழுவதும் உள்ள நாடுகள் மீண்டும் சுகாதார பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளன. இந்த...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

பெர்த் பேரணியில் காவல்துறையின் நடவடிக்கை குறித்து கடுமையான விமர்சனம்

பெர்த்தில் நடந்த "Invasion Day" பேரணியில் விடப்பட்ட வெடிகுண்டு மிரட்டலுக்கு காவல்துறையினர் பதிலளித்த விதம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற போராட்டப் பேரணியில்...