Cinema8 வயதில் பாலியல் ரீதியாக துன்புறுத்திய தந்தை - நடிகை குஷ்பு...

8 வயதில் பாலியல் ரீதியாக துன்புறுத்திய தந்தை – நடிகை குஷ்பு பரபரப்பு கருத்து

-

இந்திய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக சமீபத்தில் பொறுப்பேற்ற பா.ஜ., நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு, தனது சிறு வயது வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். ‘வி த வுமன்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று குஷ்பு பேசியதாவது,

ஒரு குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்பட்டால், அது குழந்தையின் வாழ்நாள் முழுவதும் வடுவாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அது பெண்ணா, பையனா என்பதில் பிரச்னை இல்லை.

என் அம்மாவுக்கு மிகவும் மோசமான ஒரு திருமண வாழ்க்கையே இருந்தது. மனைவியை அடிப்பதும், குழந்தைகளை அடிப்பதும், தன் ஒரே மகளை பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்வதும் தன் பிறப்புரிமை என நினைத்துக் கொண்டிருந்தவர் தான் அவர். எனக்கு 8 வயதாகும் போது துஷ்பிரயோகம் செய்யத் துவங்கினார். அவருக்கு எதிராகத் துணிச்சலாக நான் பேசிய போது எனக்கு வயது 15. நான் எனக்காக ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நேரம் வந்தது.

நான் ஏதாவது சொன்னால் எனது குடும்ப உறுப்பினர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவார்கள் என்ற அச்சம் எனக்கு இருந்தது. இதன் காரணமாகவே பல ஆண்டுகளாக நான் அமைதியாக இருந்தேன். நான் இதைச் சொன்னால் எனது அம்மாவே என்னை நம்ப மாட்டாரோ என்ற அச்சம் எனக்கு இருந்தது.

ஏனென்றால் அவரை பொறுத்தவரை என்ன நடந்தாலும் கணவர் தான் தெய்வம் என்ற மனப்பான்மையிலேயே இருந்தார். எனக்கு 15 வயதாகும் போது இனியும் தாங்க முடியாது என்று முடிவு செய்து அவருக்கு எதிராகப் பேச ஆரம்பித்தேன்.

எனக்கு அப்போது 16 வயது கூட ஆகியிருக்காது.. அவர் எங்களை விட்டுச் சென்றார். அப்போது எங்களிடம் எதுவுமே இல்லை. அடுத்த வேலை உணவுக்கே நாங்கள் என்ன செய்வதென்று தெரியாத ஒரு நிலையிலேயே இருந்தேன். குழந்தைப் பருவம் எனக்கு மிக மிகக் கடினமான ஒன்றாகவே இருந்தது.

குழந்தையாக இருந்த போது நான் பல பிரச்னைகளை எதிர்கொண்டிருக்கிறேன். ஒரு கட்டத்தில் எனக்குத் துணிச்சல் வந்தது. என்ன நடந்தாலும் துணிச்சலாகப் போராட வேண்டும் என்ற மனப்பான்மை வந்தது. இவ்வாறு குஷ்பு கூறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

விர்ஜின் ஆஸ்திரேலியாவில் இருந்து விடுமுறைக்கு ஒரு சிறந்த வாய்ப்பு

விர்ஜின் ஆஸ்திரேலியா தனது வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான விமான விருப்பங்களை வழங்குவதற்காக உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான டிக்கெட்டுகளின் விலைகளைக் குறைத்துள்ளது. அதன்படி, 27 ஆம் திகதி நள்ளிரவு...

விக்டோரியாவில் கார் காப்பீட்டு செலவுகள் அதிகரிப்பதற்கான காரணங்கள்

விக்டோரியாவின் மெல்பேர்ணில் தொடர்ந்து வாகனத் திருட்டுகள் நடப்பதால் வாகன காப்பீட்டு விகிதங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மெல்பேர்ண் காப்பீட்டு நிறுவனங்களில் மோட்டார் காப்பீட்டு கோரிக்கைகள் கடந்த ஆண்டை விட...

ராணுவ விமான விபத்து தொடர்பாக ஆஸ்திரேலியாவை எச்சரித்துள்ள சீனா

தென் சீனக் கடலில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலிய P-8 கண்காணிப்பு விமானத்தின் மீது சீன PLA Su-35 போர் விமானம் ஒன்று தீப்பிடித்து...

காலியான அலமாரிகளுடன் காட்சியளிக்கும் பல்பொருள் அங்காடிகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள Woolworths மற்றும் Coles பல்பொருள் அங்காடிகளின் அலமாரிகளில் உருளைக்கிழங்கு பற்றாக்குறை இருப்பதைக் காட்டும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து நுகர்வோர் மத்தியில்...

ராணுவ விமான விபத்து தொடர்பாக ஆஸ்திரேலியாவை எச்சரித்துள்ள சீனா

தென் சீனக் கடலில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலிய P-8 கண்காணிப்பு விமானத்தின் மீது சீன PLA Su-35 போர் விமானம் ஒன்று தீப்பிடித்து...

மெல்பேர்ணில் திடீரென மூடப்படும் பல உணவகங்கள்

மெல்பேர்ண் நகர மையத்தில் உள்ள பிரபலமான "Tokyo ramen" உணவகம் உட்பட பல உணவகங்கள் வெடிகுண்டு மிரட்டல் அடங்கிய மின்னஞ்சலைப் பெற்றதை அடுத்து மூடப்பட்டுள்ளன. மிகவும் பிரபலமான...