Cinemaநூலிழையில் உயிர் தப்பிய ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் - படப்பிடிப்பு தளத்தில் விபத்து

நூலிழையில் உயிர் தப்பிய ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் – படப்பிடிப்பு தளத்தில் விபத்து

-

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் படப்பிடிப்பு தளத்தில் இடம்பெற்ற விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.

குறித்த விபத்து ஏ.ஆர்.அமீனின் பாடல் ஒன்றுக்கான படப்பிடிப்பு இடம்பெற்ற தளத்திலேயே இடம்பெற்றுள்ளது.

இதன்போது, படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்டிருந்த தளமும், அலங்கார விளக்குகளும் அறுந்து விழுந்துள்ளன.

எனினும், தான் எல்லாம் வல்ல இறைவனின் அருளால் உயிர்தப்பியதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஏ.ஆர்.அமீன் பகிர்ந்துள்ளார்.

குறித்த அந்த பதிவில்,

இன்று நான் பாதுகாப்பாக உயிருடன் இருப்பதற்கு எல்லாம் வல்ல இறைவனுக்கும் எனது பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் நலம் விரும்பிகளுக்கும் என் ஆன்மீக ஆசிரியருக்கும் நன்றி. 

மூன்று இரவுகளுக்கு முன் நான் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பில் இருந்தேன். கேமரா முன் நடிப்பதில் கவனம் செலுத்தியபோது, பொறியியல் மற்றும் பாதுகாப்பை குழு கவனித்துக்கொண்டிருக்கும் என்று நான் நம்பினேன். 

நான் அந்த இடத்தின் நடுவில் இருந்தபோது கிரேனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செட் மற்றும் சரவிளக்குகள் கீழே விழுந்தன. சில அங்குலங்கள்.

சில வினாடிகளில் மேடை செட் எங்கள் தலையிலேயே விழுந்திருக்கும். நானும் எனது குழுவினரும் அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீள முடியவில்லை’ என குறிப்பிட்டுள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

மிகவும் மோசமாகிவரும் போப்பின் உடல்நிலை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 88 வயதான போப் பிரான்சிஸுக்கு சுவாசிக்க உதவும்...