Cinemaபடப்பிடிப்பில் காயமடைந்த நடிகர் அமிதாப் பச்சன்

படப்பிடிப்பில் காயமடைந்த நடிகர் அமிதாப் பச்சன்

-

ஐதராபாத்தில் நடைபெற்ற சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது நடிகர் அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டது. 

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் புராஜெக்ட் கே. 500 கோடி ரூபா பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதரபாத்தில் நடைபெற்று வருகிறது. 

ஐதராபத்தில் நடைபெற்ற சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது நடிகர் அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டது. அவருக்கு வலது விலா எலும்பு முறிவு மற்றும் தசை நார் கிழிந்தது சி.டி. ஸ்கேன் மூலம் தெரியவந்துள்ளது. 

பின்னர் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர்கள் அறிவுரைப்படி ஓய்வெடுக்க வீடு திரும்பி விட்டதாக அவர் ட்விட் செய்துள்ளார். அமிதாப் பச்சன் காயமடைந்ததையடுத்து ஐதராபாத்தில் நடைபெற்று வந்த புராஜெக்ட் கே படப்பிடிப்பும் இரத்து செய்யப்பட்டுள்ளது. 

நன்றி தமிழன்

Latest news

புதிய வீட்டுவசதி திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் முன்மொழியப்பட்ட புதிய வீட்டுவசதி மேம்பாட்டுத் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்த வீட்டுவசதித் திட்டம் Callala விரிகுடா மற்றும் Callala கடற்கரைப்...

விக்டோரியா நீர்த்தேக்கங்களில் பிரச்சனையாக மாறியுள்ள கெண்டை மீன்கள்

விக்டோரியாவின் முக்கிய நீர்த்தேக்கங்களில் ஐரோப்பிய கெண்டை மீன்களின் (European carp) அதிகப்படியான பரவல் ஒரு பிரச்சனையாக மாறியுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய கெண்டை மீன் படையெடுப்பு ஆஸ்திரேலிய...

விக்டோரியாவில் அமைக்கவுள்ள புதிய வீடுகள்

மெல்பேர்ணின் தென்கிழக்கில் உள்ள Kingswood கோல்ஃப் மைதானத்தில் 941 புதிய வீடுகளைக் கட்ட விக்டோரியன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் அடுத்த 10 ஆண்டுகளில் 15...

ஆஸ்திரேலியா முழுவதும் கடுமையாக அதிகரித்து வரும் காய்ச்சல் நோயாளிகள்

ஆஸ்திரேலியா முழுவதும் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருவதால் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆண்டு, ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த தடுப்பூசி...

டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக அமெரிக்கா முழுவதும்  போராட்டம்

டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக "No Kings" என்ற பதாகையின் கீழ் அமெரிக்கா முழுவதும் மக்கள் பாரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கீழ் நாடு...

சர்வதேச மாணவர்களுக்கு இப்போது கிடைக்கும் உயர்தர பல்கலைக்கழகங்கள்

ஆஸ்திரேலியாவில் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கான புதிய கொள்கை கட்டமைப்பை அறிமுகப்படுத்த அல்பானீஸ் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. உயர்கல்வியில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதே இதன்...